Pages

Friday, June 18, 2010

திரும்பவரும் முதியோர் கட்சி..

எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் அதிகமாக இடைத்தேர்தல்கள் நடைபெற்று வந்துள்ளது..அனைத்து இடைத்தேர்தல்களிலும் ஆளும்கட்சியான தி மு க வே வென்று வந்துள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள்..ஒன்று ஆளும்கட்சி அதிக அளவில் பணத்தையும் தனது அதிகார பலத்தையும் பிரயோகித்தது..இரண்டாவது எதிர்கட்சியான அ தி மு க தலைமையின் அகம்பாவமான மனோபாவமும் தோல்வியைக் கண்டு துவண்டு போகும் தன்மையும்..


சமீப காலமாக அதிமுக விலிருந்து திமுக விற்கு வரும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகமாகிவுள்ளது..இதற்க்கு அவர்கள் பல்வேறு காரணங்கள் சொன்னாலும் முக்கியமான காரணம் சம்பாதிப்பதுதான்..ஒவ்வொரு மாதம்மும் ஜெயலலிதா தன் தோழியுடன் கொடநாடு சென்று போய் படுத்து விடுவதாலும், தொண்டர்களையும், மற்றவர்களையும் மதிக்காத போக்கினாலும், அதிமுக ஏறக்குறைய தேய்ந்து வரும் ஒரு கட்சியாகிவிட்டது..அதிமுகவில் முக்கிய பிரமுகர்கலேல்லாம் திமுகவிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.. ஒரே ஒரு மானம்கெட்ட அடிமை மட்டும் அவளுடன் இருக்கிறது..அந்த வைக்கோலைபற்றி பேசுவதால் யாருக்கும் எந்த நன்மையையும் ஏற்படப்போவதில்லை..

அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் எல்லா சுகங்களையும் அனுபவித்தவர்கள் எல்லாம் இப்போது பதவியோ அதிகாரமோ இல்லமால் மதிப்பிழந்து கிடந்து, தமது செல்வாக்கைப் பெறுவதற்காக இப்போது திமுக விற்கு வந்துகொண்டிருக்கிறார்கள்...இவர்களின் நோக்கம் சம்பாதிப்பதே..ஆனாலும் அவர்கள் சுறுசுறுப்பாய் பணியாற்றிய காலங்களை இழந்து, தமது வயோதிக காலத்தில் வருவதால் அவர்கள் எதிர்பார்த்த பதவிகள் கிடைப்பது சந்தேகமே..

ஆனாலும் அவர்களது வயோதிக காலத்தில், ஒரு ஆதரவளிக்கும் முதியோர் இல்லமாக  திமுக இருப்பதால் சற்று ஆறுதல்தான் அடையலாம்..

திராவிட முன்னேற்ற கழகத்தை - திரும்பவரும் முதியோர்கள் கட்சி என்றுகூட அழைக்கலாம்தானே?

3 comments :

ஷர்புதீன் said...

மிக அழகான , நேர்மையான விமர்சனம், வைக்கோவை பத்தி பேசும்போது உங்களுக்கு வரும் கோவம் நியாயமானது., ஆனால் அந்த வார்த்தை பிரயோகங்கள் அவசியமற்றது., ( அவர் அந்த வார்த்தைக்கு தகுதி உள்ளவர்தான் , இருந்தும் கூட அந்த வார்த்தைகளின் பிரயோகங்கள் .... ஈரோடு கதிர் அவர்களின் கட்டுரைகளில் கோவங்கள் வெளிப்படும் விதம் ஏற்ப்புகுடையது

மர்மயோகி said...

நன்றி திரு rk guru
நன்றி திரு சரபுதீன்

தனி காட்டு ராஜா said...

//ஒவ்வொரு மாதம்மும் ஜெயலலிதா தன் தோழியுடன் கொடநாடு சென்று போய் படுத்து விடுவதாலும்,//
//ஒரே ஒரு மானம்கெட்ட அடிமை மட்டும் அவளுடன் இருக்கிறது..அந்த வைக்கோலைபற்றி பேசுவதால் யாருக்கும் எந்த நன்மையையும் ஏற்படப்போவதில்லை..//

சிப்பு சிப்பா வருது ...

//திராவிட முன்னேற்ற கழகத்தை - திரும்பவரும் முதியோர்கள் கட்சி //

திருடர்கள் முன்னேற்ற கழகம் -நு நான் நெனச்சேன் .....

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?