Pages

Friday, January 28, 2011

கலைஞரின் ஸ்பெக்ட்ரம் ஊழல் - சினிமாக்காரர்களின் கருத்து...

கருணாநிதிக்கு பல்வேறு தலைப்புகளில் பாராட்டு விழா நடத்தியாகி விட்டது. சமீப காலமாக பாராட்டு விழா நடத்தி நீண்ட நாட்கள் வேறு ஆகி விட்டன. அதனால் என்ன செய்யலாமென்று, தி.மு.கவினர் யோசித்த போது அவர்களுக்கு வந்த திடீர் யோசனைதான், “ஊழல் மன்னன்“ என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வழங்கலாம் என்ற யோசனை.

இதையொட்டி, நடைபெற்ற விழாவில் ஒவ்வொருவரும் கலந்து கொண்டு பேசியது…

முதலில் கலைஞானி கமலஹாசன்.

நான் பல மேடைகளிலே சொல்லியிருக்கிறேன். சொல்லிக் கொண்டும் இருக்கிறேன். சொல்லிக் கொண்டே இருப்பேன். செல்வி ஜெயலலிதா முதல்வராகும் வரை. நான் கலைஞரின் சினிமாவைப் பார்த்து தமிழ் கற்றுக் கொண்டவன். அந்த சினிமாவிலே நான் கண்டதே, என்றோ ஒரு நாள் இந்த வசனத்தை எழுதியவர், இந்தியாவிலேயே மிகப் பெரிய ஊழலைப் புரியப் போகிறார் என்று.

அதற்கு முன்னோட்டமாகத் தான், பெரம்பலூர் போர்வீரன் ஆ.ராசாவை மனதில் வைத்து இந்த வசனத்தை எழுதியிருக்கிறார். “பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ“ என்று எழுதினாரே….. அது ஆ.ராசாவை மனதில் வைத்துத்தான் என்பதை எத்தனை பேர் அறிவார்கள்.

அது மட்டும் அல்ல. என்றாவது ஒரு நாள் அவர் குடும்பம் ஊழலில் ஈடுபட்டது தெரிந்து போகும் என்பதை அறிந்துதான் “குடும்பத்தகராறு கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இன்றுதான் முதன் முதலாகச் சந்திக்கிறது“ சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனாலும் நான் சொல்லாமல் விடமாட்டேன். அந்த காலத்திலேயே நீரா ராடியாவைப் பற்றி வசனம் எழுதியவர்தான் கலைஞர் என்பதை, அவர் உள்ள ஓட்டத்தை நன்கு புரிந்தவர்கள் தான் புரிந்து கொள்ள முடியும். ஆ.ராசா நீரா ராடியாவோடு பேசி மாட்டிக் கொண்டால் என்ன பதில் கூறுவார் என்பதைக் கூட அறிந்து வசனம் எழுதியிருக்கிறார்.

“இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.” இந்த வசனத்தில் ஜாலக்காரி ஜுலி என்று கலைஞர் அவர்கள் குறிப்பிடுவது நீரா ராடியாவைத்தான். கடைசியில் பைத்தியமாக மாறினேன் என்று, ஆ.ராசா எப்படி ஆகப் போகிறாரோ, அதை தீர்க்கதரிசனத்தோடு எழுதியவர்தான் கலைஞர்.

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.


கலைஞர்ஜீ ஊழல் மன்னனான்னு என்னேக் கேட்டா…அவர் ஊழலோட சூப்பர் ஸ்டார்னு சொல்லுவேன். இல்லேன்னாக்கா… சூப்பர் ஸ்டாரோட ஊழலப் பத்தி அவர் சொல்லுவார்….. ஹாஹ்ஹா.

நான் தெய்வமா வழிபட்ற பாபாஜியப் பாக்க இமயமலேக்கு போயிருந்தேன். அப்போதான் தெரிஞ்சது, கலைஞர்ஜி மூணு மலைய வாங்கிருக்கார்ன்னு…. இமயமலேல்ல இருக்கற மூணு மலைய வாங்கிருக்காரே… நீங்க எப்படி பாபாஜி இருக்கறீங்கன்னு கேட்டதுக்கு, பாபாஜி, ராசாத்தி அம்மாஜிக்கு மாசா மாசம் வாடகை தர்றார்னு சொன்னதும் அசந்து போய்ட்டேன், நம்ம கலைஞர்ஜி டேலண்டப் பாத்து.

சிம்பிளா சொல்லனும்னா… ஊழல் பண்றதுல, கலைஞர்ஜி சிட்டி ரோபோ மாதிரி.. ஜெயலலிதாஜி கூட ஊழல் பண்ணாங்க… ஆனா அவங்க பண்ண ஊழல் 66 கோடி… கலைஞர்ஜியோட ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலே கம்பேர் பண்ணாக்கா…. அது ஜுஜுபி.

நான் சினிமால ஒரு டயலாக் பேசுனேன். நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரின்னு…. ஆனா கலைஞர்ஜி ஒரு கோடி அடிச்சாக்கா.. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி அடிச்சா மாதிரி…..

அடுத்து நீரா ராடியா.

ஹாய் கனி…. ஹாய் ராஜா…. ஹாய் கருணாநிதி…. ஹாய் ராசாத்தி… வேர் ஈஸ் ரத்னம் யார்…. கருணாநிதி நெவர் ஸ்போக் டு மீ ஓவர் போன் யார். ஒய் கருணாநிதி ஈஸ் நாட் டாக்கிங் ?. ஒன் மினிட் யார். (போனில் பேசுகிறார்)

ஹாய் மன்மோகன்….

ஹவ் ஆர் யு…

ஹவ் ஈஸ் சோனியா….

வெரி நைஸ் யார்…

யா… யா… யு ஆர் ரைட் மன்மோகன்.

தேர் ஈஸ் ஒன் ஃபெலோ கால்ட், ஜாபர் சேட்….

யு ஆர் ரைட்..

ஹி டேப்ஸ் ஆல் தி போன் கால்ஸ் யார்..

இன்க்லுடிங் மை ஃப்ரெண்ட் ராஜாத்தி யார்.

யா கருணாநிதி ஈஸ் ஸ்டில் இன் வீல் சேர் யார். பட் ஹி ஈஸ் வெரி ஹெல்தி.

யு நோ வாட் மன்மோகன். யு வோன்ட் பிலிவ் திஸ். ஐ யம் தி ஹீரோயின் இன் ஹிஸ் நெக்ஸ்ட் மூவி. ட்ரூலி யார். வாட்..?

யா யா. ஐ வில் ஆஸ்க் ஹிம் டு கிவ் யூ ய ஃபாதர் ரோல்.

ஓகே மன்மோகன் சி யூ இன் டெல்லி யார்…

(மீண்டும் மேடையில் பேசுகிறார்.) கருணாநிதி ஈஸ் தி நம்பர் ஒன் கரப்ட் பொலிடீஷியன். தேர் ஈஸ் நோ டவுட் யார். டெல்லி போலிடீஷியன்ஸ் ஆர் யங். பட் திஸ் ஓல்ட் மேன் இன் ய வீல் சேர் ஈஸ் அமேஸிங் யார். ஓகே.. பை எவ்ரிபடி.

அடுத்து வைரமுத்து…

அன்று சர்க்காரியா சொன்னார்.

நீ விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவன் என்று.

ஆனால் இன்று விஞ்ஞானத்திலேயே நீ ஊழல் செய்திருக்கிறாய்.

வானில் உள்ள தேவர்களின் எண்ணிக்கை கூட முப்பத்து முக்கோடி தான்.

நீ ஒரே தவணையில் அடித்ததோ ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி.

ஊழல் செய்வதில் நீ ஒரு எட்டமுடியாத சிகரம்.

ஊழலுக்கே உன் குடும்பம்தான் தலைநகரம்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைவன் நீ..

உன் குடும்பம் வழி வந்தாரை வாழ வைக்கும் தலைவன் நீ…

ஆம் குடும்பத் தலைவன் நீ..

நான் கட்டியதோ பொன்மணி மாளிகை….

நீ கட்டியதோ பத்மாவதி, தயாளு மற்றும் ராசாத்தி…

சர்காரியாவையே சாக்கு மூட்டையில் கட்டியவன் நீ….

உன்னிடம் சுண்டைக்காய் சிபிஐ எம்மாத்திரம்…..



அடுத்து கவிஞர் வாலி.


கொற்றவனே… கொற்றவனே….

ஸ்பெக்ட்ரத்தை விற்றவனே…

சூடு சொரணை அற்றவனே…

கொற்றவனே.. கொற்றவனே..



உன்னால் அடைய வேண்டியது ஏற்றம்.

தமிழகத்துக்கு கிடைத்ததோ ஏமாற்றம்.

மக்களுக்கு மிஞ்சியதோ முற்றம்.

உனக்கு அள்ளித் தந்தது ஸ்பெக்ட்ரம்.



தமிழ்ல உனக்கு புடிச்ச வார்தை கோடி


தள்ளு வண்டில போனாலும் தளராது உன் பாடி..

உன் புள்ளைங்களுக்கு நீதான் சரியான டாடி



எக்கச்சக்கமா சேத்துருக்க துட்டு

நீ கதை வசனம் எழுதுனா சூப்பர் ஹிட்டு

உன்னால தமிழகம் போனது கெட்டு

உனக்கு மக்கள் அடிக்கப் போறாங்க ரிவிட்டு



ஏற்புரை.. கருணாநிதி.



என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே….

எனக்குப் புகழ்ச்சி அறவே பிடிக்காது. இவ்வாறு வந்து கூட்டங்களிலே அமர்ந்திருக்கும் நேரத்திலே கூட ஏதாவது கோப்புகளை பார்த்தால் சில கோடிகள் கிடைக்கும் என்று சிந்திப்பவன் நான்.



ஆனால் தம்பி வைரமுத்துவும், கலைஞானி கமலஹாசனும், விழாவிலே பங்கெடுப்பதற்காக 50 லட்சம் ரூபாய் தருவதாக சொன்னதால், எனது பணிகளுக்கு சிறிதே ஓய்வு கொடுத்து விட்டு இந்த விழாவிலே பங்கெடுக்க வந்துள்ளேன்.



இந்தியாவிலேயே சிறந்த ஊழல் மன்னன் என்று திட்டமிட்டெல்லாம் நான் என்றுமே பணியாற்றியது கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணா என்னை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆக்கும் போது அவரே நினைத்திருக்க மாட்டார். அவர் தம்பி இப்படி ஊழல் மன்னனாக வளர்வான் என்று….



நான் ஊழல் மன்னனாகியது காலத்தின் கட்டாயம் என்றால் அது மிகையாகாது. ஒரு மனைவி, ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள், வைத்திருப்பவர்கள் சில கோடிகள் ஊழல் செய்யலாம். ஆனால் என் குடும்பத்தையும் என் வாரிசுகளையும் பாருங்கள்… அவ்வளவு பேரையும் திருப்தி படுத்த வேண்டுமென்றால், ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து விட்டு, இடையறாது உழைத்தால்தானே முடியும் ?



ஏறக்குறைய 50 ஆண்டுகால பொதுவாழ்விலே, உழைத்து, மக்கள் பணியாற்றியே நான் இன்று ஊழல் மன்னன் என்று அழைக்கப் படும் இடத்திற்கு வந்திருக்கிறேன்.




ஆனால் இது கூட பொறுக்காமல் 20 ஆண்டுக்கும் குறைவாக அரசியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள அந்த அம்மையார், என்னை விட அதிகமாக ஊழல் புரிய முயற்சிக்கிறார். அடிக்கடி அந்த அம்மையார் ஊழல் புரிகிறார், ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டுள்ளார் என்று கூறுவதற்கு காரணம் என்ன தெரியுமா ? அவ்வாறு கூறாமல் போனால், அந்த அம்மையார் என்னை விட அதிகமாக ஊழல் புரிந்து நான் இன்று பெற்றிருக்கும் பேரை தட்டிப் பறித்து விடுவாரோ என்ற அச்சத்திலேதான்….



நான் சென்று கொண்டிருக்கும் தள்ளு வண்டி சமயத்தில் பஞ்சராகி, என்னை முடக்க முயற்சி செய்தாலும், இந்த வயதிலும் நான் தொடர்ந்து உழைக்க ஒரே காரணம், இன்றும் என் குடும்பத்தினருக்கு போதுமான அளவுக்கு சொத்து சேர்க்காததே…..



இன்னும் கொஞ்சம் சொத்துக்கள் சேர்த்து, டாடா, ரிலையன்ஸ், பிர்லா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களை விலைக்கு வாங்கும் அளவுக்கு வளர்ந்து விட்டால், அதற்குப் பிறகு நான் அரசியலில் இருந்து விலகி, இலக்கியப் பணியிலே ஈடுபடலாம் என்று நினைக்கிறேன். அந்த விதத்தில், எனக்கு இப்படி சிறந்த ஊழல் மன்னனுக்கான விழாவை நீங்கள் எடுத்தது என்னை மீண்டும் ஊக்கப் படுத்தி மேலும் சிறந்த ஊழல்களை, இப்போதைய ஸ்பெக்ட்ரம் ஊழலை விட, இன்னும் பன்மடங்கு ஊழல் புரிய ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத் தான் என்ற அளவிலே அதை எடுத்துக் கொண்டு, நன்றி கூறி விடை பெறுகிறேன்.

இது எனக்கு நண்பர்கள் அனுப்பிவைத்த ஒரு forward ஈமெயில்...

அதனால் அனுப்பி வைத்த நண்பர்களுக்கு நன்றி..
(நன்றி சொல்லலையின்னா கண்டு புடிச்சிடுராங்கப்பா..)


Thursday, January 27, 2011

ஆடுகளம் - தமிழில் ஒரு புதிய கதைக்களம்...



தனுஷ் என்பவன் நடிக்கும் அனைத்துப் படங்களும் வெறும் ஆபாசக் குப்பைகளாகவும்,முட்டாள்தனமாகவும்,  பொறுக்கிகளுக்கான படங்களாகவுமே அமைந்துள்ளன..

தெருப் பொறுக்கிகள் மட்டுமே ரசிக்கக்கூடிய படங்களில் இருந்து ஆடுகளம் மாறுபட்டுள்ளது...

தமிழக முட்டாள் இயக்குனர்களிடம் இருந்து, எந்தவிதமான காம்ப்ரமைசுக்கும் இடமில்லாமல் ஒரு வித்தியாசமான முயற்ச்சியை இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் கையாண்டு வெற்றிபெற்றுள்ளார்..

தரைப்படைகளுக்கான குத்துப் பாட்டு, கொலைவெறி சண்டை, போன்ற நாகரீகமற்ற காட்சிகள் அறவே இல்லாமல், இயற்கையான கதைதான் ஆடுகளம்.

சேவல் சண்டையில் யாராலும் வெல்லமுடியாதவரான சேட்டைகாரனின் சீடன்தான் கருப்பு என்கிற தனுஷ்.

ஒரு சண்டையில் பின்வாங்கி விட்ட சேவலை அறுக்க சொல்லி கருப்பிடம் சொல்லிவிடுகிறார் சேட்டைக்காரன். பல சண்டைகளில் வெற்றிபெட்டுவிட்ட அந்த சேவலை அறுக்க மனமில்லாமல் தனுஷ் அதை - சேட்டைக்காரனுக்குத் தெரியாமல் - வளர்த்து வருகிறார்.

முக்கியமான ஒரு நேரத்தில் - அதை தனுஷ் சண்டைக்குவிட, வேண்டாம் என்று மறுத்த சேட்டைக்காரன், தனக்கும் அந்த சேவலுக்கும் சம்மந்தம் இல்லை என்று அந்த இடத்திலேயே அறிவித்து விடுகிறார். ஆனால் அந்த சண்டையில் தனுஷின் சேவல் வெற்றிபெற்று விட, அப்போது அந்த சந்தோஷத்தை கொண்டாடமுடியாமல் சேட்டைக்காரனுக்கு பொறாமை பிடிக்க, அதன் பிறகு நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் - ஆச்சரியப் படும் விதமாக எடுக்கப் பட்டிருக்கிறது..

கதைக்கு சம்மந்தமில்லாததுதான் என்றாலும், தனுஷ் தபசி சம்மந்தப் பட்ட காட்சிகளும் மிகை படுத்தப் படாமல், கதையை ஒட்டி வருவதுபோல் அமைந்திருப்பது டைரக்டரின் திறமை..

நடித்திருப்போர் அனைவரும் ஒரு மதுரை பக்கத்தில் உள்ள கிராமவாசிகளை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள்..

ஆரம்பத்திலேயே சேவல் சண்டை கிராபிக் என்று அறிவித்து விடுவதால் அதையும் ஒன்றும் சொல்ல முடிவதில்லை..

ஆனால் சேவல் சண்டைக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் என்ன சம்மந்தம்?..உலகெங்கும் இதுபோன்ற மிருகங்களை வைத்து பந்தயம் கட்டி சண்டை செய்வது நடந்துகொண்டுதானிருக்கிறது..

அதற்காக பாரதியார் எழுதிருக்கிறார், தொல்காப்பியர் எழுதி இருக்கிறார் என்று சொல்வது, தமிழரின் பண்பாடு என்று சொல்வதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது.. இந்த தமிழர்கள் எப்போதுதான் யதார்த்தத்திற்கு வரப்போகிறார்களோ தெரியவில்லை..

சேவல்களுக்கு தமிழ் தெரியுமா ஆங்கிலம் தெரியுமா ஹிந்தி தெரியுமா...

அரசே தடை செய்திருக்கிறது என்கிறார்கள்..அதாவது அரசுக்கு விரோதமான ஒரு செயலை தமிழன் செய்தான் என்பதில்தான் என்ன பெருமை....



இதிலுமா உங்களின் மொழிவெறி?





Tuesday, January 25, 2011

ராமாயணம் - ரூம் போட்டு யோசித்தது..!!!

நாங்களெல்லாம் பள்ளிக்கூடப் படிப்பு படிக்கும்போது, அப்போது பிரதானமாக சொல்லித்தரப்படுவது இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளைத்தான்..


மதச் சார்பற்ற ஒரு நாட்டில் இது போன்ற மதப் பிரச்சாரங்கள் கூடாது என்று எவனும் அப்போது எதிர்க்கவில்லை..கல்வித் துறையில் இருந்த காவிகள் அப்போது இந்த கதைகளை பிஞ்சு நெஞ்சங்களில் விதைத்து இன்று அது விஷமாகி இந்திய ஒருமைப்பாட்டுக்கே வினை வைக்கும் விசயமாகி வளர்ந்து நிற்கிறது..

சரி விசயத்திற்கு வருவோம்..

நாங்கள் படிக்கும்போது சொல்லிக்கொடுக்கப்பட்ட ராமாயண கதையில், அயோத்தியை ஆண்ட தசரதன் என்ற மன்னனுக்கு, நாற்பதாயிரம் மனைவிகள் என்றும், அவனுக்கு நெடுநாட்களாக குழந்தை வரம் இல்லை - எனவே ஒரு முனிவரை சந்தித்து அவரிடம் குழந்தை வரம் கேட்டதாகவும், அவர் ஒரு கனியை கொடுத்து அவனது மனைவிமார்களுக்கு கொடுத்ததால் குழந்தை வரம் கிடைக்கும் என்றும் சொன்னாராம். அதன்படி பிறந்த குழந்தைகள்தான், ராமன், இலட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்கனன் ஆகியோர்..

அதன் பிறகு ராமன் சீதாவை லவ் பண்ணியதும், வில்லை முறித்ததும், காட்டுக்கு வனவாசம் சென்றதும் கதைகள்..அது வேண்டாம் இப்போது...

மேற்கண்ட விசயத்துக்கே வருவோம்..

தசரதனுக்கு நாற்பதாயிரம் மனைவிகள் என்கிறார்கள்...

அப்படியென்றால்..இப்படி வைத்துகொள்ளலாம்

தசரதனுக்கு  ஒரு சுமார் இருபது வயதில் முதல் கல்யாணம் நடக்கிறது...

இப்படி ஒரு நாளைக்கு ஒரு கல்யாணம் என்றாலும் - அன்றே அவர் மனையுடன் (ஒரு நாள் மட்டும்) வாழ்வது என்றாலும், மொத்தம் 109 வருடங்கள் ஆகும்..ஆக..நாற்பதாயிரம் கல்யாணம் முடியும்போது, தசரதனுக்கு வயது 129.

இப்படி ஒவ்வொரு மனைவியையும் அவர் மணமுடிக்க ஒரு நாள் மட்டும் எடுத்திருப்பரா? பெண்ணைப் பார்க்கணும், அவளது குணங்களை அறியணும்..இதற்கே மாதக்கணக்கில் ஆகிவிடும்..அதுவும் இந்த காலத்தைப் போல அப்போது செல்போன் வசதியோ, ஏன் வாகன வசதியோ கிடையாது..ராமன் பிறந்தது, திரோத யுகம்..திரோத யுகம் ஏறக்குறைய ஏழு லட்சம் வருடங்களுக்கு முற்பட்டது என்றும் சொல்கிறார்கள்..

ஹ்ம்ம் பல்லக்கில்தான் போகவேண்டும்..இப்படி ஒரு பெண்ணை பார்பதற்கு குறைந்தது ஒரு மாதம் என்றாலும், நாற்பதாயிரம் பெண்களையும் பார்பதற்கும், பார்த்து மண முடிப்பதற்கும் 40000 மாதங்கள் ஆகிவிடும்..அப்படிப்பார்த்தால் 3333 வருடங்கள் ஆகி விடுகிறது.

முதலில் ஏழு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அவ்வளவு மக்கள் தொகை இருந்ததா என்றும் தெரியவில்லை. 40000 பெண்களை மணமுடிக்க வேண்டும் என்றால் ஒரு நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் அவர் மண முடித்திருக்கவேண்டும்..அப்படியென்றால் அந்த நாட்டில் வேறு ஆண்களே கிடையாதா?

சரி இவ்வளவு பெண்களை மணமுடித்தும் குழந்தை தர இயலாதவனை அந்த பெண்கள் எப்படி ஏற்றுக் கொண்டு இருந்தார்கள்.

ஏறக்குறைய 3000 வருடங்கள் கழித்து அவருக்கு தனக்கு குழந்தை பெற இயல்லது என்று தெரிந்து, செயற்கை முறையில், அதாவது ஏதோ ஒரு கனி மூலம் தன மனைவிகளுக்கு குழந்தை பெற வைக்கிறார்..

அதுவும் நான்கு மனைவிகளுக்கு மட்டுமே நான்கு குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றன...பாவம் மற்ற 39996 பெண்கள்..

சரி ராமனைக் கடவுளின் அவதாரம் என்கிறார்கள்..

அப்படியென்றால் கடவுளைப் பெற்றவன் கடவுளுக்கெல்லாம் கடவுளாக இருக்கவேண்டுமே...ஆயிரக்கணக்கில் மனைவிகள் இருந்தும் குழந்தை பெற முடியாதவன் எப்படி கடவுளாக முடியும்?

கடவுளுக்கே ஒரு முனிவர்தான் ஒரு கனியைக் கொடுத்து (அந்தகால சாமியார் போலிருக்கிறது.) குழந்தை பெற வைக்க வேண்டியுள்ளது...


இதற்கு பிறகும், தனது காதோரத்தில் லேசான நரை முடியைப் பார்த்து ஆட்சியை ராமனிடம் ஒப்படைக்க தசரதன் முடிவு செய்தானாம்.


3000 வருடங்களுக்கு பிறகுதான் அவருக்கு நரையே வந்து இருக்கிறது..

அப்படியே பார்த்தாலும் கடவுளுக்கு நரை எப்படி வரும்?

அவருக்கு இளமை முதுமை உண்டா?

தசரதன் நல்லாட்சி தந்தார் என்றும் படித்திருக்கிறேன்...ஏறக்குறைய 3000 வருடங்கள் மனைவிகளுக்கே செலவழித்தால் எப்படி ஆட்சியில் கவனம் செலுத்தி இருக்க முடியும்..மூன்றாயிரம் வருடங்களும் ஒரு நாளைக்கு ஒரு மனைவிதான் என்கிறபோது, குடும்பத்தையே சரிவர கவனிக்க முடியாது..இதில் எப்படி ஆட்சி செய்திருக்க முடியும்...?ஹ்ம்ம் தல சுத்துது..



எனக்கு தெரிந்த கணக்கை வைத்து இப்படி யோசித்திருக்கிறேன்..

யாராவது வெவரமானவர்கள் இருந்தால் கொஞ்சம் விளக்குங்களேன்..பிளீஸ்..


Monday, January 24, 2011

சிறுத்தை - தமிழில் ஒரு பக்கா தெலுங்கு படம்..!


மனிதனை மனிதன் என்று சொல்லாமல் மிருகங்களின் பெயர்களில் அழைப்பதே பெருமையாகக் கருதும் உலகம் இது..அதானால்தான் பொறுக்கிகளும், அரசியல் வாதிகளும், சிநிமாக்கூத்தாடிகளும், இந்திய தேச விரோதிகளும் அதிகாரத்திலும், பணபலத்திலும் வெற்றி பெறுகிறார்கள்..


சிங்கம் மாதிரி ராஜா, புலி மாதிரி வீரம், , யானை மாதிரி பலம், நரி மாதிரி தந்திரம், பூனை போல பயம், நாய் மாதிரி நன்றி, என்று மிருகங்களே உதாரணமாக இருக்கிறன்றன...மனிதனாக ஒருத்தனையும் காணோம்..

சூர்யா சிங்கம் என்று நடித்தால், அவர் சகோதரர் சிறுத்தை என்று நடிக்கிறார்..

கதை என்ன?

யாராலும் தட்டிக் கேட்கமுடியாத பயங்கரமான ஒரு மாபியா கும்பல்..ஒரு ஊரையே அடக்கி வைத்திருக்கிறார்கள்...கஞ்சா கடத்தல், வெடிகுண்டு சப்ளை, கட்டப் பஞ்சாயத்து, கற்பழிப்பு என்று அனைத்து பொறுக்கித்தனங்களும் உள்ள ஒரு கிழவன்தான் அந்த ஊரையே ஆட்டிப் படைக்கிறான்.

மந்திரிகள், போலிஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் அவனது கட்டளைக்கு அடிமைகள்...

இப்படிப் பட்ட ஊருக்கு பணி மாற்றமாகி  வரும் ஒரு ஐ பி எஸ் அதிகாரிதான் ரத்னவேல் பாண்டியன் (கார்த்தி).

ஒரே ஒரு விஷயம் - ரத்தினவேல் பாண்டியனாக கார்த்தி வரும் காட்சிகளில், பொறுக்கிகளை அடித்து துவம்சம் செய்கிறார்..இது போன்ற போலிஸ் எங்காவது இருந்தால் வடசென்னையில் பொறுக்கித்தனம் செய்துகொண்டு தரைப்படைகளை அடித்து துவம்சம் செய்ய அனுப்பலாம்..ஆனால் அப்படி எந்த போலிஸ் இருக்கிறது?


மாபியா கும்பலின் கொட்டத்தை அடக்கும் அவர் அந்த ஊர் மக்களின் அன்பை சம்பாதிக்கிறார். இந்த நிலையில் அவரை அந்த மாபியா கும்பல் வெட்டி சாய்க்கிறது..அரை குறை உயிருடன் இருக்கும் அவரை, சில விசுவாசிகள் காப்பாற்றி சென்னையில் வைத்து வைத்தியம் பார்க்கின்றனர்.

அவர் போலவே தோற்றம் கொண்ட ஒரு திருடன்..

அவனது அறிமுகம் தரைப்படைகளுக்கும் பொறுக்கிகளுக்கும் உற்சாகமளிக்கும்..இவ்வளவு பொறுக்கித்தனம் பண்ணும் பொறுக்கியைத்தான் உத்தமனாக இந்த கூத்தாடிகள் இப்போது அறிமுகப் படுத்தி வருகிறார்கள்..விளங்கிடும்..

போலிஸ் அதிகாரியின் ஒரே மகளுக்கு தந்தை உயிருக்கு போராடுவதை மறைத்து இந்த பொறுக்கியை அந்த குழந்தையின் தந்தை என்று சொல்லி அவனிடம் சேர்த்து விடுகிறார்கள்..இந்த சமயத்தில் பொறுக்கியின் ஒரிஜினல் புத்தி தெரிகிறது..ஒரு அழகான குழந்தையை வைத்துக் கொண்டு அந்த பொறுக்கி குடிக்கிறது அந்த குழந்தையை விரட்டுகிறது...

ஆனால் படத்தை ஓட்டனுமே..அதற்காக அந்த பொறுக்கிக்கு போலிசின் கதை சொல்லப்படுகிறது..பொறுக்கி திருந்துகிரானாம்...

அந்த பொறுக்கியை, மெல்லிடையாள் தமன்னா போன்ற -surf - சோப்பில் வெளுக்கப்பட்ட அழகிகள் விரும்புவது, இது போன்ற முட்டாள்தனமான சினிமாக்களில் மட்டுமே பார்க்க முடியும்..




தமன்னா ஒரு பொறுக்கியின் மேல் காதல் கொள்வதாகக் காட்டும் காட்சிகள் பைத்தியக்காரத்தனம் மட்டுமல்ல,, ஒரு பொறுக்கியை அன்னை தெரசா போலவும், இன்னும் பெரிய பெரிய மகான்கள்  ரேஞ்சுக்கு உயர்த்துவதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்...எல்லாவற்றுக்கும் குதிக்கும் சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் இப்போது மட்டும் ம.......... புடிங்கிக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ...?




இருவரின் நடிப்பும் சகிக்க முடியவில்லை..பழைய எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி போன்றவர்கள் நடித்த படங்களைவிட காதல் காட்சிகள் மிக கேவலமாக உள்ளன...

சந்தானம் மட்டுமே சிரிக்க வைக்கிறார்..அவனும் பொறுக்கியாக வருவதால் - பொறுக்கிகள் நல்லவர்களாக காட்டப்படும் விபரீதமே இது போன்ற தரமற்ற குப்பைகள்..

பொறுக்கியாக வரும் கார்த்தி போலிஸ் வேடமிட்டு மாபியா கும்பலை அடக்குவது செம காமெடி..அதுவரைக்கும் டெரர் ஆக இருந்த வில்லன் கோஷ்டி வடிவேலு ரேஞ்சுக்கு இறங்கி - இவனிடம் ஏமாறுவது வடிவேலு போன்ற காமெடி நடிகர்களுக்கு ஆபத்துதான்..

இந்த படத்தை தெலுங்கில் இருந்து ரீ மேக் செய்தார்களாம்..பணம் இருப்பதால் எதையும் செய்யாலாம் என்ற முட்டாள்தனம்தான் காரணம்..இவ்வளவு செலவளித்து எதற்கு ரீ மேக் பண்ணனும்...அப்படியே தெலுங்கிலேயே வெளியிட்டு இருக்கலாம்...மற்ற செலவாவது மிஞ்சி இருக்கும்....

ஒரு தெலுங்கு படத்தில் அனைவரும் தமிழ் பேசுவது போன்ற உணர்வே மிஞ்சுகிறது..

எவ்வளவு கேனத்தனமாகவும், கிறுக்குத்தனமாகவும்,லூசுத்தனமாகவும் ஒரு படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு கேனத்தனமாகவும், கிறுக்குத்தனமாகவும், லூசுத்தனமாகவும் எடுக்கப்பட்ட ஒரு படம்தான் இது.


சிறுத்தை, மக்களை ஏமாற்றும் ஒன்றுக்கும் உதவாத சீரியஸ் காமெடி குப்பை..


Friday, January 21, 2011

காவலன் -வலைப்பதிவர்களுக்கு இன்னுமொரு அவல்...!


ஏராளாமான தோல்விப் படங்களை கொடுத்து, தமிழ் வலைப்பதிவர்களின் பெரும்பாலோனர்களின் கிண்டலுக்கு ஆளான விஜய்யின் இன்னுமொரு தோல்விப் படம்...

கருணாநிதியை ராஜதந்திரி என்று சொல்வார்கள்..

அந்த ராஜதந்திரிதான், எம்ஜியார், , ஜெயலலிதா விஜயகாந்த் போன்ற சினிமாக்காரர்களையும் ,எதற்கும் உதவாத தேச துரோகி வைகோவையும் வளர்த்து விட்டார்..இதில் என்ன ராஜ தந்திரம் இருக்குதென்று தெரியவில்லை..கருணாநிதி சினிமா நடிகர்களை ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்களைப் போன்று கருதுகிறார் போல..அதுதான் ஒரு படத்தில் நடித்துவிட்டால் கூட அல்ல அல்ல,, ஏதாவது ஒரு பாடாவதி படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் தலையை காட்டிவிட்டாலே போதும் இவரின் அப்பாயின்ட்மென்ட் கிடைத்துவிடும்..

விஜய்க்கு பயந்து ஏன்தான் அவரது காவலனுக்கு இவ்வளவு தடைகள் ஏற்படுத்தினாரோ....

அந்த அளவுக்கு வொர்த் உள்ள படமும் அல்ல..


ராஜ்கிரண் யார்? முதலில் ஒரு கொலை பண்ணுகிறார்...அடுத்த காட்சியில் ஒரு பெண்ணுக்கு பிரசவ நேரத்தில்...(அதுவும் இந்த தமிழ்படங்களில் மழை பெய்யும்போதுதான் குழந்தை பிறக்கும்..) உதவி பண்ணுகிறார்....அப்போது பிறக்கும் குழந்தைதான் (டாக்குடர் ?) விஜய்.


முதல் காட்சியில் பாங்காக்கில் நடக்கும் குத்துச்சண்டையில் எல்லா வீரர்களையும் வீழ்த்திவிட்டு அதில் கிடைக்கும் பல லட்ச ரூபாயை நண்பருக்கு உதவிவிட்டு ஊருக்கு வருகிறார்...

அவர் ஊதாரித்தனமாக சுற்றுகிறார் என்று ராஜ்கிரணுக்கு ஆபத்து என்று அவரை ராஜ்கிரணின் பாதுகாவலுக்கென்று  பொய் சொல்லி அனுப்பிவைக்கிறார்கள்.
 
அவருடையை ஒரே மகள்தான் உலக அழகி அசின்..


அவருக்கும் விஜய்க்கும் இடையிலான காதல்தான் படத்தின் கதை..

இதில் காலமெல்லாம் காதல் வாழ்க, பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்களை இணைத்து படத்தை உருவாக்கி ஏமாற்றி இருக்கிறார்கள்..

ஆரம்பக் காட்சிகள் படு செயற்கை..ஒவ்வொரு பாடல்களுக்கு பிறகும் கட்டாயமாக ஒரு சண்டைக் காட்சி வருகிறது.


வடிவேலு படத்தில் எதற்கு வருகிறார் என்றே தெரியவில்லை..

 
சிரிப்புக்கு பதிலாக கடுப்புதான் வருகிறது...


டாக்குட்டறு விஜய் காமெடி பண்ணுகிறாரா..இல்லை லூசா என்றே தெரியவில்லை..

கிளைமாக்சில் விஜய்க்கு இரண்டு ஜோடியாகி விடுகிறது..எல்லாம் சுலபமாக முடிந்து விடுகிறது..


எந்த லாஜிக்கும் இல்லாத ஒரு டுபாக்கூர் படம்தான் காவலன்..

தமிழ் வலைப்பதிவர்களுக்கு இன்னுமொரு அவல்...



Monday, January 17, 2011

முதல்வர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய இளைஞனின் கதை


பொறுப்பான பதவிகளை வகிப்பவர்களுக்கு சில பலவீனங்கள் இருக்கத்தான் செய்யும். எல்லோரும் மனிதர்கள்தானே? ஆனால், அந்த பலவீனங்களைப் பயன்படுத்தித் தங்களிடம் யாரும் தவறான காரியங்களைச் சாதித்துக் கொண்டுவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருப்பது வழக்கம். தமிழகத்தில் சமீபகாலமாக தவறான நபர்கள் முதல்வரின் பலவீனங்களைப் பயன்படுத்தித் தங்களைச் சட்டத்தின் பிடியிலிருந்தும், சமுதாயத்தின் அவமதிப்பிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ளத் துணிந்திருக்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.


முதல்வரைத் திருப்திப்படுத்த முடியும் என்பதற்காக மட்டுமே பல பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டன என்பது அவருக்கே தெரியும். ஆனாலும் அவர் அதை ஏன் அனுமதித்தார் என்பதுதான் கேள்வி. ஒருவேளை, அறிக்கைகள் மூலமோ, பொதுக்கூட்டங்கள் மூலமோ தன்னால் வெளிப்படுத்த முடியாத கருத்துகளையும், செய்திகளையும் இதுபோன்ற விழாக்களின் மூலம் வெளிப்படுத்த முடியும் என்பதால்கூட இதுபோன்ற பாராட்டு விழாக்கள் நடத்துவதை அவர் அனுமதித்திருக்கலாம், ஊக்குவித்திருக்கலாம்.


அவருக்குப் பாராட்டு விழாக்கள் எடுத்ததில் பாதிக்கு மேற்பட்ட விழாக்கள் திரையுலகத்தினரால் நடத்தப்பட்டவை. முதல்வர் திரையுலகத்துடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்புடையவர் என்பதும், அவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரில் ஒரு சிலர் தவிர, எல்லோருமே திரைப்படத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதாலும், திரைப்படத் துறையினரின் விழாக்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதல்வர் கலந்து கொண்டிருக்கலாம், தவறில்லை.



ஆனால், அப்படி பாராட்டு விழா நடத்துபவர்கள் யார், எவர், அவர்களது பின்னணி என்ன, ஏன், எதற்காகத் தனக்கு இப்படி பாராட்டு விழா நடத்துகிறார்கள், என்பதை எல்லாம் நன்றாக விசாரித்துத் தேர்ந்து அதன் பிறகு அந்த நிகழ்ச்சிகளை அவர் ஒத்துக்கொண்டாரா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.



முதல்வர் கருணாநிதி எழுதாத திரைக்கதை வசனங்களா? மாறிவிட்ட காலகட்டத்தில், அதுவும் விலைவாசியில் தொடங்கி, சட்டம் ஒழுங்குவரை தலைக்கு மேல் பொறுப்புகள் இருக்கும் நேரத்தில் முதல்வர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதுகிறேன் என்று தன்னை வருத்திக்கொள்ள வேண்டியது தேவைதானா?



முதல்வரது பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் திரைக்கதை வசனம் எழுதும் திரைப்படத்தைத் தயாரிக்க முன்வந்திருப்பது யார் தெரியுமா? சமீபத்தில் வெளியான "இளைஞன்' திரைப்படத் தயாரிப்பாளரும், தயாரிக்கப்பட இருக்கும் "பொன்னர் சங்கர்' படத் தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.மியூசிக் சேனலின் அதிபர் சாண்டியாகோ மார்டின். இவரது பின்னணியைக் கேட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது.



திருவனந்தபுரம் மாநகரக் காவல் துறையால் இவர் மீது மூன்று வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரணையில் இருக்கின்றன. திருவனந்தபுரம் அருங்காட்சியக காவல் நிலையத்தின் காவல்துறை ஆணையர் (டிஜிபி) சிபி மேத்யூவும், விற்பனை வரித்துறை ஆணையரும் தொடர்ந்திருக்கும் இரண்டு வழக்குகள் அல்லாமல் ஒரு தனியார் மோசடி வழக்கும் இவர்மீது நிலுவையில் இருக்கிறது.



போலி லாட்டரி வியாபாரியான மார்ட்டின், எந்தவிதமான ரகசியக் குறியீடோ, குலுக்கல் தேதியோ இல்லாமல் போலி லாட்டரி விநியோகம் செய்தார் என்பது வழக்கு. நீதிமன்றம் அதை விசாரணைக்கும் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, சென்னையில்கூட இவர்மீது போலி லாட்டரி டிக்கெட் விற்பனைக்காக ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வெளிவந்திருக்கிறது.



இப்படி ஒருவர் குற்றப்பின்னணி உள்ளவரா, இல்லையா என்பதை முழுமையாக விசாரிக்காமல் அவர் தயாரிக்கும் திரைப்படத்துக்கு ஒரு மாநில முதல்வர் வசனம் எழுத முன்வந்ததே தவறு. முதல்வருக்கு சன்மானம் கொடுத்து வசனம் எழுத வைக்கும் ஒருவர் மீதான குற்றங்களைக் காவல்துறை தைரியமாக விசாரிக்குமா? அந்த தைரியத்தில்தானே, லாட்டரி அதிபர் மார்ட்டின் தமிழகத் தலைமை அரசு வழக்குரைஞரைத் தனது வழக்குரைஞராகக் கேரள நீதிமன்றத்தில் வழக்காட நியமிக்க முயன்றார்.



ஒருபுறம், அரசியலிலிருந்து குற்றப்பின்னணி உள்ளவர் களையெடுக்கப்பட வேண்டும் என்று முயன்று வரும் வேளையில், ஒரு மாநில முதல்வர் குற்றப்பின்னணி உள்ளவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுகிறார். இப்படியொரு தவறைச் செய்வது முந்தா நாள் அரசியலுக்கு வந்த புதியவர் அல்ல. அறுபது ஆண்டு அரசியல் வாழ்வுக்குச் சொந்தக்காரரான முதல்வர் கருணாநிதி என்கிறபோது, ஏதோ விவரம் தெரியாமல் செய்துவிட்டார் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது!



கடந்தகாலச் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. 1971-ம் ஆண்டும் மு. கருணாநிதிதான் தமிழக முதல்வராக இருந்தார். அன்றைய திமுக பொருளாளர் எம்.ஜி.ராமச்சந்திரன், செய்தி - மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக விருப்பம் தெரிவித்தபோது, அன்றும் முதல்வராக இருந்த கருணாநிதி சொன்ன பதில், "நீங்கள் நடிப்பதை விட்டுவிடுவதாக இருந்தால் அமைச்சராக்குகிறேன்' என்பதாக இருந்தது.



முதல்வர் கருணாநிதிக்கும் அதே பதில் இன்று பொருந்தும்தானே? கிடைக்கும் சன்மானத்தை நான் நன்கொடையாக வழங்கி விடுகிறேன் என்று சமாதானம் சொல்கிறார் முதல்வர். சன்மானம் பெறுவதே தவறு எனும்போது, அதை அவர் நன்கொடையாகக் கொடுத்தால் என்ன கொடுக்காமல் விட்டால்தான் என்ன?



முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய சமுதாயம் பிரச்னைகளை எதிர்நோக்கி இருக்கும் காலகட்டத்தில், விலைவாசி உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், முதல்வர் குளுகுளு அரங்கத்தில், தான் கதைவசனம் எழுதிய திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் முதல்வர் அடிக்கடி மேடைதோறும் முழங்கும், "கும்பி எரியுது, குடல் கருகுது...' வசனம்தான் நம்மை அறியாமலே நினைவுக்கு வருகிறது.

மக்கள்தான் உணர்த்த வேண்டும், வேறு வழி?

Friday, January 14, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல்...கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புதல்..


2 ஜி ஊழலை விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு இதுவரை ஒப்புதல் அளிக்காமல் இருந்த மத்திய அரசு, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியாக நடத்தும் எண்ணத்துடன் கூட்டுக்குழு விசாரணைக்கு இன்று ஒப்புதல் அளித்தது..



2 ஜி ஊழல் சம்மந்தமாக பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, கம்யூனிஸ்ட், மற்றும் பயங்கரவாத கட்சியான பார"தீய" ஜனதா உள்பட எதிர்கட்சிகள் கடந்த நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தின..

அத்வானி, நிதின் கட்கரி போன்ற பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்தை நடைபெற விடாமல் செய்த சதியை முறியடிக்கவே இந்த கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது..



இங்கே கிளிக் செய்யவும்.

Wednesday, January 12, 2011

மரணம் எந்த நேரத்திலும் வரலாம் என்று நினைத்திருந்தால் இந்த நிலை வருமா ?

பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும் எனபது உலக நியதி...


எத்தனையோ கொடிய நோய்களுக்கு மருத்துவம் கண்டுபிடிக்கும் விஞ்ஞானத்தால் மரணத்தை வெல்ல எந்த ஒரு கண்டுபிடிப்பையும் கண்டுபிடிக்க முடியவில்லை..கண்டுபிடிக்கவும் முடியாது..

இதை எல்லாம் தெரிந்திருந்தும் மனிதன் இதை உணராமல், பொருளுக்கும் பெண்ணுக்கும் மண்ணுக்கும் பேராசைப்பட்டு பல்வேறு தவறுகளையும் குற்றங்களையும் செய்து வருகிறான்..

மரணத்திர்ற்குபின்பு தனக்கு எதுவும் சேராது என்பதை மனிதன் என்றுதான் உணரப்போகிறானோ...?


கீழ்க்கண்ட செய்தியைப் பாருங்களேன்:


ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிழக்கு வீதியைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர் ஒருவரின் தந்தை, இரண்டு மாதத்துக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடலை சென்னிமலை உப்பிலிபாளையம் ரோட்டில் உள்ள மணிமலைகரடு மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.இறந்தவர் பயன்படுத்திய மெத்தை, தலையணையை, உடல் புதைத்த இடத்தில் குடும்பத்தினர் போட்டு விட்டு வந்து விட்டனர்.

சுடுகாட்டில் போதிய இடவசதி இல்லாததால், அந்த இடத்தை சென்னிமலை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், கடந்த 15ம் தேதி தீ வைத்து எரித்தனர். அங்கிருந்த மெத்தை, தலையணையையும் அவர்கள் எரித்தனர்.இறந்தவரின் வீட்டில், ஆயுத பூஜைக்காக சுத்தம் செய்த போது அவரது டைரி கிடைத்தது. அதில் யாருக்கு எல்லாம் பணம் கடன் கொடுத்துள்ளார்; வட்டி வரவு வந்தது; பணம் வரவேண்டியது; எங்கெங்கு பணம் வைத்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.


தான் படுத்திருந்த மெத்தையின் உள்ளே 500 ரூபாய் நோட்டு தாளாக மூன்று லட்சம் ரொக்கத்தை வைத்துள்ளதாக அதில் எழுதியிருந்தார். உடனடியாக குடும்பத்தினர் மயானத்துக்கு ஓடிச் சென்று தேடினர். அங்கு மெத்தை எரிக்கப்பட்டு சாம்பலாகி கிடந்தது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.மூன்று லட்ச ரூபாய் ரொக்கம் மூன்று மாதமாக சுடுகாட்டில் அனாதையாக கிடந்தும், அது யாருக்கும் கிடைக்காமல் தீயில் எரிந்து நாசமானது, சென்னிமலை பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. சென்னிமலை பகுதியில் இச்சம்பவத்தால் சுடுகாட்டில் உள்ள மற்ற மெத்தை, தலையணைகளை சிலர் கிழித்து பார்த்து வருகின்றனர்.
 
இதுக்குத்தான் நம்பிக்கை உரியவர்களிடம் ஒருவார்த்தை சொல்லிவைக்க வேண்டும் என்பது.

Tuesday, January 11, 2011

சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது!

%3Cdiv+dir%3D%22ltr%22+style%3D%22text-align%3A+left%3B%22+trbidi%3D%22on%22%3E%0D%0A%3Cdiv+class%3D%22separator%22+style%3D%22clear%3A+both%3B+text-align%3A+center%3B%22%3E%0D%0A%3Ca+href%3D%22http%3A%2F%2F2.bp.blogspot.com%2F_IBPa8jN94-M%2FTSvc8z2rjoI%2FAAAAAAAAA2U%2Fy4QVZw6oLGE%2Fs1600%2Fsivaji_parasakthi.jpg%22+imageanchor%3D%221%22+style%3D%22margin-left%3A+1em%3B+margin-right%3A+1em%3B%22%3E%3Cimg+border%3D%220%22+height%3D%22216%22+n4%3D%22true%22+src%3D%22http%3A%2F%2F2.bp.blogspot.com%2F_IBPa8jN94-M%2FTSvc8z2rjoI%2FAAAAAAAAA2U%2Fy4QVZw6oLGE%2Fs320%2Fsivaji_parasakthi.jpg%22+width%3D%22320%22+%2F%3E%3C%2Fa%3E%3C%2Fdiv%3E%0D%0A%0D%0A%3Cspan+style%3D%22font-family%3A+Times%2C+%27Times+New+Roman%27%2C+serif%3B+font-size%3A+large%3B%22%3E%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3C%2Fspan%3E+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%22108%27+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9.+%0D%0A%0D%0A%0D%0A%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+2008+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+2010+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82.+1+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.+%0D%0A%3Cdiv+class%3D%22separator%22+style%3D%22clear%3A+both%3B+text-align%3A+center%3B%22%3E%0D%0A%3Ca+href%3D%22http%3A%2F%2F2.bp.blogspot.com%2F_IBPa8jN94-M%2FTSvdD31XwvI%2FAAAAAAAAA2Y%2FZ6NijVFbTG4%2Fs1600%2Fambulance.jpg%22+imageanchor%3D%221%22+style%3D%22margin-left%3A+1em%3B+margin-right%3A+1em%3B%22%3E%3Cimg+border%3D%220%22+n4%3D%22true%22+src%3D%22http%3A%2F%2F2.bp.blogspot.com%2F_IBPa8jN94-M%2FTSvdD31XwvI%2FAAAAAAAAA2Y%2FZ6NijVFbTG4%2Fs1600%2Fambulance.jpg%22+%2F%3E%3C%2Fa%3E%3C%2Fdiv%3E%0D%0A%0D%0A%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+30-%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%90.+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%3A+%0D%0A%3Cdiv+class%3D%22separator%22+style%3D%22clear%3A+both%3B+text-align%3A+center%3B%22%3E%0D%0A%3Ca+href%3D%22http%3A%2F%2F4.bp.blogspot.com%2F_IBPa8jN94-M%2FTSvdJ8nziiI%2FAAAAAAAAA2c%2Fdge_Vj-Tpms%2Fs1600%2Fkalaignar_tv.jpg%22+imageanchor%3D%221%22+style%3D%22margin-left%3A+1em%3B+margin-right%3A+1em%3B%22%3E%3Cimg+border%3D%220%22+n4%3D%22true%22+src%3D%22http%3A%2F%2F4.bp.blogspot.com%2F_IBPa8jN94-M%2FTSvdJ8nziiI%2FAAAAAAAAA2c%2Fdge_Vj-Tpms%2Fs1600%2Fkalaignar_tv.jpg%22+%2F%3E%3C%2Fa%3E%3C%2Fdiv%3E%0D%0A%0D%0A%3Cstrong%3E%3Cem%3E%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%3A%3C%2Fem%3E%3C%2Fstrong%3E+108+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9.+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%3F+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%3F+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%3F+%0D%0A%0D%0A%3Cstrong%3E%3Cem%3E%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3A%3C%2Fem%3E%3C%2Fstrong%3E+108+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2.+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82.+23%2C474-%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82.+9%2C700-%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%90.+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.+%0D%0A%3Cdiv+class%3D%22separator%22+style%3D%22clear%3A+both%3B+text-align%3A+center%3B%22%3E%0D%0A%3Ca+href%3D%22http%3A%2F%2F1.bp.blogspot.com%2F_IBPa8jN94-M%2FTSvdPGZ3C6I%2FAAAAAAAAA2g%2FHq2gwJCNGsQ%2Fs1600%2Fsun%2Btv.bmp%22+imageanchor%3D%221%22+style%3D%22margin-left%3A+1em%3B+margin-right%3A+1em%3B%22%3E%3Cimg+border%3D%220%22+n4%3D%22true%22+src%3D%22http%3A%2F%2F1.bp.blogspot.com%2F_IBPa8jN94-M%2FTSvdPGZ3C6I%2FAAAAAAAAA2g%2FHq2gwJCNGsQ%2Fs1600%2Fsun%2Btv.bmp%22+%2F%3E%3C%2Fa%3E%3C%2Fdiv%3E%0D%0A%0D%0A%3Cstrong%3E%3Cem%3E%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%3A%3C%2Fem%3E%3C%2Fstrong%3E+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0% +%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%3F+%0D%0A%0D%0A%3Cstrong%3E%3Cem%3E%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3A%3C%2Fem%3E%3C%2Fstrong%3E+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B0%E0%AF%82.+1%2C01%2C53%2C320+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.+%0D%0A%0D%0A%3Cstrong%3E%3Cspan+style%3D%22color%3A+blue%3B%22%3E%22%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%2C+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%87+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%2C+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2C+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%27%27%3C%2Fspan%3E%3C%2Fstrong%3E+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%22%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%27+%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%2C+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+108+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B0%E0%AF%82.+1+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%27%27+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.+%0D%0A%0D%0A%3Cstrong%3E%3Cspan+style%3D%22color%3A+red%3B%22%3E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%21%3C%2Fspan%3E%3C%2Fstrong%3E%0D%0A%3Ca+href%3D%22http%3A%2F%2Fwww.mylivesignature.com%2F%22+style%3D%22clear%3A+right%3B+cssfloat%3A+right%3B+float%3A+right%3B+margin-bottom%3A+1em%3B+margin-left%3A+1em%3B%22+target%3D%22_blank%22%3E%3Cimg+src%3D%22http%3A%2F%2Fsignatures.mylivesignature.com%2F54488%2F311%2F5B87718404B7C80EC9627B91274441C6.png%22+style%3D%22background%3A+none+transparent+scroll+repeat+0%25+0%25%3B+border-bottom%3A+0px%3B+border-left%3A+0px%3B+border-right%3A+0px%3B+border-top%3A+0px%3B%22+%2F%3E%3C%2Fa%3E%3C%2Fdiv%3E%0D%0A

Wednesday, January 5, 2011

விலை உயர்வுக்கு உண்மையான காரணம் (அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்)

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. அந்த விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யின் விலை உயர்வையே காரணமாக அரசு காட்டுகிறது. ஆனால் முழுமையான காரணம் அதுவல்ல.


பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை விலையில், அரசு விதித்த வரிகளே பாதிக்கும் அதிகமாகும். வரி வசூல் மூலம் நிதி திரட்ட உகந்த ஒன்றாக பெட்ரோலை மத்திய மாநில அரசுகள் பயன்படுத்துகின்றன.

எல்லா நாடுகளும் பெட்ரோலியப் பொருட்களின் மீது வரி விதிக்கின்றன. ஜெர்மன், இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் அதிக வரி விதிக்கும் நாடுகளாக இருக்கின்றன. ஆனால், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகளே காரணம் என்று இவை கூறுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல என்கின்றன எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகள்.


பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக் 2004-2008 வரையிலான ஆண்டுகளில் தான் விற்பனை செய்த கச்சா எண்ணெயின் மதிப்பு 3,346 பில்லியன் அமெரிக்க டாலர். அதே காலக்கட்டத்தில் ஜி-7 என்னும் ஏழு நாடுகளின் அமைப்பில் அடங்கிய நாடுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதித்த வரிகளின் மூலம் பெற்ற வருவாய் 3,418 பில்லியன் டாலர்கள் என்கிறது. அதாவது எண்ணெய் ஏற்றுமதி செய்த நாடுகளுக்குக் கிடைத்ததைவிட அந்த எண்ணெயின் மூலம் ஜி-7 நாடுகள் திரட்டிய வரி வருவாய் அதிகம்.


இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் கொடுக்கும் விலையில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக வரிகளுக்கே செல்கிறது. கச்சா எண்ணெய்க்கு நுழைவு வரி, மாநிலங்கள் வசூலிக்கும் சுங்கம், துறைமுகக் கட்டணம், மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி(தமிழ்நாட்டில் இது30 சதவிகிதம்) கல்வி வரி, மத்திய அரசின் விற்பனை வரி என்று பல வரிகளின் மூலமே பெட்ரோலின் விலை பூதாகாரமாக உயர்கிறது.


அரசு தனது சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்த வரி விதிப்பின் மூலம்தான் வருவாய் திரட்ட முடியும் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. என்ன நோக்கங்களுக்காக வரி விதிப்பின் மூலம் வருவாய் திரட்டப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படுகின்றனவா?

உதாரணத்திற்கு, 1991-92ம் ஆண்டில் இருந்து எண்ணெய்த் தொழில் வாரியத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு விற்பனை வரியாக 84,337 கோடி ரூபாயைத் திரட்டியிருக்கிறது. ஆனால் எண்ணெய்த் தொழில் வளர்ச்சி வாரியத்திற்கு 902 கோடி ரூபாயை மட்டுமே தந்திருக்கிறது.

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை மானிய விலையில் தந்து கொண்டிருப்பதாகவும், அதனால் எண்ணெய் நிறுவனங்களும், அரசும் நிதிச் சுமையைத் தாங்க நேரிடுவதாகவும் அடிக்கடி கூறப்படுகிறது. இதில் கொஞ்சமும் உண்மையில்லை. 2009-2010-ம் ஆண்டில் மத்திய,மாநில அரசுகள் பெட்ரோலியத் துறையின் மூலம் வரிகள் மற்றும் சுங்கத் தீர்வைகள் வாயிலாக தங்களது கஜானாவிற்குக் கொண்டு சென்ற தொகை 1,83,861 கோடி ரூபாய்.

அதே 2009-2010-ல் பெட்ரோலிய நிறுவனங்களான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன்(ONGC) ரூ.16,767 கோடியும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.10,220 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.1301 கோடியும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.1,837 கோடியும், ஆயில் இந்தியா நிறுவனம் ரூ.2,610 கோடியும் லாபம் ஈட்டியுள்ளன. இந்த நிறுவனங்களின் ஒட்டு மொத்த லாபம் ரூ.32,735 கோடி ரூபாய். இது இறுதியில் அறிவிக்கப்பட்ட லாபம். ஆனால் உண்மையான லாபம் இதைப் போல ஐந்து மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதே உண்மை. அந்தத் தொகை எங்கே போயிற்று..?

எண்ணெய் நிறுவனங்கள் மிகவும் ஆடம்பரமான செலவுகளைச் செய்கின்றன. அத்துடன் இந்த நிறுவன ஊழியர்களின் சம்பளம் வேறு எந்தத் துறையிலும் கற்பனை செய்ய முடியாதது.

உதாரணத்திற்கு,

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 15 வருட அனுபவம் பெற்ற சாதாரணத் தொழிலாளியின் வருடச் சம்பளம் 8,39,757 ரூபாய். எம்.காம். பட்டம் பெற்ற டிரைவர்களின் சம்பளம் வருடத்திற்கு 22 லட்சம் ரூபாய். கெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பாளர்(படித்தது 5-ம் வகுப்பு) பெறும் வருடச் சம்பளம் 8,56,731 ரூபாய். 8-ம் வகுப்பு மட்டுமே படித்து 1976-ல் வேலையில் சேர்ந்த அட்டெண்டரின் தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 45,99,234 ரூபாய்.

எண்ணெய் நிறுவனங்களின் உண்மையான லாபம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இவை ஒரு எடுத்துக்காட்டு.


மக்களுக்கு மான்ய விலையில் தந்து கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். அதனால் நிறுவனங்களுக்கு நஷ்டம் என்கிறார்கள். அரசுக்கு நிதிச் சுமை என்கிறார்கள். கச்சா எண்ணெய்க்காக, எண்ணெய்ப்படுகைகளில்துரப்பணமிடும்போது, அதை எரிபொருளாகப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பிறகு கச்சா எண்ணெய் கிடைக்கிறது.

அந்தக் கச்சா எண்ணெயில் இருந்து சமையல் எரிவாயு, பெட்ரோல், நாப்தா, கெரசின், விமான எரிபொருளான வெள்ளை பெட்ரோல், டீசல் வகைகள், ஆயில் வகைகள், தார், மெழுகுகள் என பிரித்து எடுக்கப்படுகின்றன. இந்தப் பொருட்களின் மீது சுத்திகரிப்புச்செலவு, அவற்றின் மதிப்புக்குரிய வகையில் பிரித்து, மதிப்புக் கூட்டப்படுகிறதா..?

பெட்ரோலியப் பொருட்களுக்காக அரசின் பட்ஜெட்டில் இருந்து மானியம் என்ற பெயரில் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், மானியம் அளிக்கப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. இது மானியம் அளிக்காமலேயே அளிக்கப்படுகிறது என்று காட்டும் மாயையை உண்டாக்கும் போக்கு அல்லவா..?


எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா, ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு 5,515 கோடி ரூபாயை மான்யமாகத் தந்திருப்பதாக அறிவிக்கிறார்.

எண்ணெய் விநியோக நிறுவனங்கள் 3,661 கோடி ரூபாயை லாபம் ஈட்டியுள்ள காலாண்டில் எதற்காக மான்யம் தரப்பட வேண்டும்..? கூடுதலான விலையில் விற்றிருக்கும் எண்ணெயை குறைந்த விலையில் அந்த நிறுவனங்கள் விற்றனவாம். அதனால் அந்த இழப்பை ஈடுகட்ட ONGCமான்யம் தருகிறதாம்.

விற்றிருக்க வேண்டிய விலை என்று ஒரு தொகையை இவர்களாக நிர்ணயித்து விற்ற விலையுடன் ஒப்பிட்டு இழப்பு ஏற்பட்டதாகச் சொல்லி மான்யம் அளிக்கிறார்கள். ஆக விலை குறைத்து விற்ற நிலையிலேயே அந்த நிறுவனங்கள் 3661 கோடி லாபம் ஈட்டியிருக்கின்றனவே. நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு நாங்கள் மான்யம் தந்து நஷ்டப்படுகிறோம் என்ற மாயையை மக்களிடம் ஏற்படுத்தும் யுக்தியா இது..?


மான்யம் என்பது என்ன..? அதிக விலைக்கு ஒரு பொருளை கொள்முதல் செய்து, அதைக் குறைந்த விலைக்கு மக்களுக்கு விநியோகம் செய்யும்போது ஏற்படும் நஷ்டத்தை அரசே ஏற்றுக் கொள்வதுதானே மான்யம்..

உதாரணத்திற்கு, மத்திய அரசு நெல்லை கொள்முதல் செய்து அரசியாக்கும்போது ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 13 ரூபாய் ஆகிறது. அதை மத்திய அரசு, மாநில அரசுக்கு மூன்று ரூபாய்க்குத் தருகிறது. மாநில அரசு அதை மக்களுக்கு ஒரு ரூபாய்க்குத் தருகிறது. ஆக, மக்கள் ஒரு ரூபாய் விலையில் பெறும் ஒரு கிலோ அரிசியில் மத்திய, மாநில அரசுகள் 12 ரூபாயை இழக்கின்றன. இந்த இழப்பை மக்களுக்கு அளித்த மான்யமாக ஏற்றுக் கொள்கின்றன.

இப்படிப்பட்ட தெளிவான முறை பெட்ரோலியப் பொருட்களின் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. காரணம், இவ்விஷயத்தில் மான்யம் என்று எதையும் அரசு தரவில்லை. மாறாக, வரிகள் என்ற பெயரால் லாபம் மட்டுமே அடைகிறது. அதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தில், உண்மை நிலை என்ன என்பதை நிபுணர்கள் ஆராய்வது அவசியம்.


பெட்ரோல் விலை மீதான விலைக்கட்டுப்பாட்டை இப்போது அரசு நீக்கிவிட்டது. அதனால் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப இனி பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படும் என்கிறது அரசு. கச்சா எண்ணெய் விலை ஏறினால், பெட்ரோல் விலை உயரும். கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் விலை குறையும் என்று இதற்கு அர்த்தம்.

ஆனால் கச்சா எண்ணெய்யுடன் விதவிதமான வரிகளும் சேர்ந்தே பெட்ரோலியப் பொருட்களின் விலையாக உள்ள நிலையில், இனி எந்த நிலையிலும் பெட்ரோல் விலை பெரிதாகக் குறைவதற்கான வாய்ப்பு மிக, மிகக் குறைவுதான்.

நன்றி "வெளிச்சம்"


 

Tuesday, January 4, 2011

26/11 மும்பை தாக்குதலுக்கு காரணம் ஆர் எஸ் எஸ்..

26/11/2008 யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது...

தீவிரவாதிகள் மும்பை ரயில் நிலையத்தையும் மற்றும் மும்பை ஹோட்டல்கள் சிலவற்றிலும் புகுந்து பொதுமக்களையும் ஏராளமான போலீஸ்காரர்களையும் சுட்டு கொன்றனர். இந்த சம்பவத்தின்போதுதான், மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரேயும் அதே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹேமந்த் கர்கரேதான், மாலேகான் குண்டு வெடிப்புக்கு காரணமான ஆர் எஸ் எஸ் வெறியர்களைக் கண்டு பிடித்து ஒரு பெண் சாமியாரையும் இன்னும் அது தொடர்பான ஏராளமான ஆர் எஸ் எஸ் வெறியர்களையும் கைது செய்து விசாரணை வலயத்துக்குள் கொண்டு வந்தார்.

அந்த சமயத்தில் அவருக்கு அந்த மத வெறியர்களிடம் இருந்து ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன. இது சம்மந்தமாக பிரதமரை சந்திக்க இருந்த வேளையில்தான் அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.



அவர் கொல்லப்பட்டவுடன், மகாராஷ்ட்ராவுக்கு சம்மந்தமில்லாத - குஜராத் முதல்வன் நரேந்திர மோடி என்ற பயங்கரவாதி ஹேமந்த் கர்கரேயின் குடும்பத்திற்கு ஒரு கோடி கொடுப்பதாக அறிவித்ததும் - அதை வேண்டாம் என்று கர்கரேயின் மனைவி மறுத்து அவனை அவமானப்படுத்திய சம்பவமும் நடந்தது..



மும்பை தாக்குதல் குறித்து, சந்தேகம் எழுப்பிய அப்போதைய மத்திய அமைச்சர், அந்துலே - ஆர் எஸ் எஸ் வெறியர்களின் எதிர்ப்பினால் பதவி விலக நேரிட்டது.



சென்ற டிசம்பரில்கூட, காங்கிரசின் பொது செயலாளர் திக் விஜயசிங்
- கர்கரே கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், தன்னை கொலை செய்ய சில ஆர் எஸ் எஸ் வெறியர்கள் மிரட்டல் விடுப்பதாகவும் சொன்னார் என்றும் தெரிவித்திருந்தார். அதற்கு ஆர் எஸ் எஸ் வெறியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.



அசீஸ் பர்னி என்பவர் எழுதி வெளியிட்டுள்ள "RSS ka shadayantra, 26/11" என்ற புத்தக வெளியீடு விழாவில் பேசிய காங்கிரசின் பொது செயலாளர் திக்விஜய சிங்  மும்பை தாக்குதலுக்கு, ஆர் எஸ் எஸ், மொசாத் மற்றும் சி ஐ எ வின் பங்குள்ளதுஎன்று பேசியுள்ளார்.
 
 
மேலும் அறிய  இங்கே சொடுக்கவும்.