கருவின் குற்றம்.!
இது ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நாஞ்சில் மனோகரன் அவர்களால் கருணாநிதியை -சற்றே சாடி எழுதப்பட்ட ஒரு கவிதையின் தலைப்பு..அப்போதைய காலகட்டத்தில் தி மு கவில் இருந்த ஒரு துரோகியை வெளியேற்ற கருணாநிதி முயற்சித்ததால் அப்படி எழுதி பரப்பாக பேசப்பட்டது..அன்றைக்கு அது பொருந்தியதோ இல்லையோ..இன்றைய தேர்தல் தோல்விக்கு இது முற்றும் பொருந்தும்..எப்படி தி மு கழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கும் அதன் புகழுக்கும் கருணாநிதியின் உழைப்பும் அர்பணிப்பும் காரணமோ..அதே கருணாநிதியின் குடும்ப ஆதிக்கமும், நிர்வாகத் திறமையின்மையும், ஊழலுக்கு துணைபோனதும்தான் இன்றைய திமுக வின் படுதோல்விக்கு காரணம்.
அதிமுக அடைந்த வெற்றி அக்கட்சியின் வெற்றி அல்ல...நிச்சயமாக திமுகவின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பே காரணம்.
ஏனென்றால் கடந்த ஐந்து வருடங்களாக, அதிமுக தலைவி எந்த ஒரு பெரிய போராட்டத்தையோ, திமுகவின் இந்த பொறுப்பற்ற ஆட்சி பற்றியோ மக்கள் எழுச்சி பெரும் வண்ணம் ஏதும் செய்துவிடவில்லை..
வெறும் அறிக்கை அரசியல் மட்டுமே நடத்தி வந்தார்..
கருணாநிதியோ, சினிமாக்காரர்களின் பாராட்டு விழாவில் மயங்கி கிடக்க, ஒரு பக்கம் விலைவாசி, மக்களை மூச்சுத்திணற செய்தது, மின்வெட்டு வாட்டியது. ரவுடியிசம் பொறுக்கியிசம் அராஜகம் செய்தது..
வருடம் முழுவதும் படிக்காத மாணவன், தேர்வு அன்று இரவில் விழுந்து படித்துவிட்டு, பாசாகியதுபோல ஜெயலலிதா தேர்தல் காலத்தில் மட்டும் தனது அரசியலை நடத்தி ஆட்சியை பிடித்துவிட்டார்..
மற்றபடி இலவசங்களை வாங்கிக்கொண்டு மக்கள் திமுகவிற்கு நல்ல பாடம் புகட்டி உள்ளனர்.
இலவச அறிவிப்புகள் இனி ஓட்டை வாங்கிதாராது என்பதை அதிமுக வினரும் உணர்ந்தால் நல்லது.
திமுகவின் இந்த படுதோல்விக்கு, விலைவாசி, மின்வெட்டு, அவர் குடும்ப உறுப்பினர்களின் - அனைத்து துறை - ஆதிக்கம் போன்ற காரணங்கள் மட்டுமேதான் காரணம். மக்களுக்கு முதல்வர் பதவிக்கு வேறு ஒரு நல்ல தலைவன் இல்லை என்ற காரணங்களினாலேயே ஜெயலிதாவுக்கு ஒட்டு போட காரணமே தவிர வேறு எந்த காரணமும் இல்லை..
அரசியல் சாணக்கியர் என்று பத்திரிக்கைகளால் வருணிக்கப்பட்ட கருணாநிதி, - பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு வேளாளர் போன்ற ஜாதிக்கட்சிகளையும், ரஜினிகாந்த், வாலி, வைரமுத்து, குஷ்பூ, வடிவேலு போன்ற சினிமாகூத்தாடிகளையும் நம்பி தான் ஒரு ஜீரோ என்று காட்டிவிட்டார்..
இடைத்தேர்தல் அரசர் என்று வருணிக்கப்பட்ட அழகிரியின் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் திமுக முற்றிலும் தோல்வியடைந்து மூக்குடைபட்டிருக்கிறது.
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களுக்கு துளிகூட ஆர்வமில்லை என்பதும் இந்த தேர்தல் காட்டிவிட்டது..
விடுதலைப்புலிகளின் தமிழகப் பிரிவான வைக்கோ என்பவனின் மதிமுகவை , ஜெயலலிதா தூக்கி எறிந்தும் அவர் இவ்வளவு பிரமாதமான வெற்றி அடைந்ததே இதற்கு உதாரணம். வைக்கோவை ஜெயலலிதா அடிமையாக வைத்திருந்த காலத்தில் அதிமுக தோல்வி அடைந்திருந்தது.
இன்னும் சொல்லப்போனால் போர்காலங்களில் சாதாரண மக்களும் பாதிப்புக்குள்ளாவது தவிர்க்க முடியாதது என்று விடுதலைப்புலிகள் அழிக்கப்படும்போது சொன்னவர்தான் ஜெயலலிதா..
இந்த தேர்தலில் மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் விடுதலிப்புலிகளின் தமிழக அமைப்பான வைக்கோலின் மதிமுக என்ற கட்சி அடியோடு ஒழிக்கப்பட்டதுதான்.
இன்னும் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் பணத்தை வைத்து அரசியல் செய்யும் அனைத்து இந்திய தேச துரோகிகளும் ஜெயலலிலதா ஆட்சிகாலத்தில் ஒழிக்கப்பட்டு தமிழ்நாடு அமைதி பெரும் என்று நம்புவோம்.
இன்னும் பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு வேளாளர் கட்சி போன்ற ஜாதிக்கட்சிகள் பிரதிநிதித்துவம் இழந்ததும் மகிழ்ச்சியான விசயமே..
இனி பொறுக்கிகளின் ஆட்டம் அடங்கும் என நம்பலாம்..சட்டம் ஒழுங்கு கருணாநிதி ஆட்சியைவிட பரவாயில்லை என்று சொல்லும்படி இருக்கும்.
மற்றபடி ஜெயலலிதா வந்தவுடன் நாட்டில் தேனும் பாலும் ஓடி, மாதம் மும்மாரி பொழிந்து ஆட்சி செம்மையாக இருக்கும் என்று சொல்ல வரவில்லை..
மேலும் ஒரு கவலையளிக்கும் ஒரு விஷயம் - எதிர்கட்சியாக விஜயகாந்தின் தேமுதிக என்ற ஒரு ஆபத்தான கட்சி வந்திருப்பதுதான்.
எந்த ஒரு தியாகம், அனுபவம், கஷ்டம் இல்லாமல், வெறும் சினிமா பின்னணியை வைத்து மட்டுமே வந்திருப்பது தமிழ்நாடு இன்னும் உருப்படாமல் போகும் என்றே தோன்றுகிறது..
குடும்ப ஆதிக்கத்தை ஒழிக்க திமுகவை தோற்கடித்த மக்கள்..கட்சியை தொடங்கும்போதே குடும்ப உறுப்பினர்களுக்கு பதவியை கொடுத்து ஆரம்பித்த ஒரு சினிமாகூத்தாடியை எதிர்கட்சியாக தேர்ந்தெடுத்திருப்பது தமிழ்நாட்டிற்கு மகா கேவலம்.
பழம்பெருமை மட்டுமே பேசிவரும் தமிழக மக்கள் எப்போது இந்த சினிமா மாயையில் இருந்து விடுபடப்போகிரார்கள் என்று தெரியவில்லை.
இந்த தேர்தல் முடிவுகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தாலும், மக்கள் இன்னும் தெளிவான பார்வையில் ஒட்டுபோட்டதாக தெரியவில்லை..
அந்த மாற்றம்கூட, ஆளுங்கட்சிக்காரன் பணக்காரனாக இருக்கிறானே என்றதொரு பொறாமையின் வெளிப்பாடுதான்..
அடுத்த ஐந்து வருடங்கள் கழித்து ஜெயலலிதா கொள்ளையடித்து விட்டார் என்று திமுக என்ற கொள்ளைக்காரனை மீண்டும் ஆட்சியில் அமர்த்ததான் போகிறார்கள்..
ஒரு மெகா ஊழலை விரட்ட மக்கள் இன்னுமொரு மகா ஊழல் ராணிக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள் - அவ்வளவுதான்..