Pages

Tuesday, August 30, 2011

தேசிய அவமானம்.

ஒரு தேசிய தலைவர் கொல்லப்படுகிறார், கொலை செய்த பயங்கரவாதிகள் இந்தியாவில் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்..அவர்களுக்கு இங்குள்ள சில தேச துரோகிகளும் உடந்தை. விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த  அந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது..

சட்டம் தன  கடமையை செய்யவிடாமல் இங்கே சில தேச துரோகிகள் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய சொல்லி இந்தியாவின் இறையாண்மைக்கு வேட்டு வைக்க மக்களை தூண்டி விடுகின்றன..

இலங்கையில் தமிழர்களை கொன்ற ராஜபக்ஷேவை இவர்களால் நெருங்க முடியவில்லை..மக்களோடு மக்களாக  பழகிய - மாலைக்கு தலையை கொடுத்த ஒரு தலைவனை - கோழைத்தனமாக கொன்று விட்டு இந்த பயங்கரவாதிகள் - தம்மை அப்பாவிகள் என்கின்றன..

விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த இந்த பயங்கரவாதிகளுக்கு இங்குள்ள் தேச துரோகிகள் உதவின..அப்பாவிகள் என்று ஓலமிடுகின்றன..செய்யாத குற்றத்திற்கு தண்டனை என்றால் கொஞ்சமாவது பயம் வேண்டாம் இந்த பயங்கரவாதிகளுக்கு? இருபது வருடங்களாக சிறையில் இருந்தவர்கள் போலவா இருக்கிறார்கள்..நன்றாக உண்டு கொழுத்து இருக்கிறார்கள்.

தமிழர்களை கொன்ற ராஜபக்சேவுக்கு தூக்குதண்டனை வேண்டும் என்று ஓலமிடும் இந்தியாவில் இருக்கும் சில கைக்கூலிகள், இந்திய தலைவனை கொன்ற பயங்கரவாதிகளை விடுவிக்க ஏன் இவ்வளவு ஆர்வம்? 
வைக்கோ , சீமான், நெடுமாறன், சீமான் போன்ற தேச துரோகிகளின் சொந்தங்கள் இந்த பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருந்தால் வலி தெரியும்.

ஆங்கங்கே மக்களை தூண்டி, தீக்குளிக்க வைக்கும் இந்த தேசதுரோகிகளை முதலில் கைது செய்து உள்ளே தள்ளி தண்டிக்க வேண்டும்.

சட்டம் தீர்ப்பளித்ததை, எதிர்க்கும் இந்த கைக்கூலிகளின் குடியுரிமையை ரத்து செய்யவேண்டும்..

கோயமுத்தூரில் குற்றபத்திரிக்கைகூட தாக்கல் செய்யப்படாமல் - ஜாமீனில் வெளிவராமல் இருக்கும் அப்பாவி மக்களைப் பற்றி அக்கறை இல்லாமல், குற்றம் நிரூபிக்கப்பட்ட கொலையாளிகளை காப்பாற்ற துடிக்கும் தேச துரோகிகள்தான் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்..

இந்த கொலையாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் தேசதுரோகிகளை இன்னும் அரசு தண்டிக்காமல் விட்டு வைத்திருப்பது தேசிய அவமானம்.

Wednesday, August 24, 2011

மாபெரும் ஊழலுக்கு வழிவகுக்கும் மாற்று ஏற்பாடா சட்டசபை மாற்றம்

சமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை மருத்துவமனைமருத்துவக் கல்லூரியாக மாற்றும் அறிவிப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தவுடனேயே அனைத்து எதிர்க்கட்சிகளும் பாராட்டின. சட்டப்பேரவையில் எல்லோரும் பாராட்டிவிட்டார்கள் என்பதற்காகவும்ஒரு சில பத்திரிகைகளும் நடுநிலையாளர்களும்கூட ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்காகவும்நாமும் நமது பங்குக்குத் தமிழக முதல்வரின் இந்த முடிவை முழுமனதுடன் பாராட்டிவிட முடியவில்லை. இந்தக் கட்டடத்தில் சட்டப்பேரவை நடத்தப் போதுமான வசதி இல்லை என்பதும்தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் 36 துறைகளையும் மாற்றுவதற்கான இடவசதி இல்லை என்பதும் எந்த அளவுக்கு உண்மையோஅதே அளவுக்கு இந்தக் கட்டடம் மருத்துவமனைக்காகக் கட்டப்படவில்லை என்பதும்கூட உண்மைதானே?

தமிழ்நாட்டில் திரைப்படம் பார்ப்போர் எண்ணிக்கை குறையத் தொடங்கிய நேரத்தில் பல ஊர்களிலும் திரையரங்குகளைத் திருமண மண்டபங்களாக மாற்ற முனைந்தார்கள். ஆனால் மணமகன்மணமகள் அறைஉணவுக் கூடம்தங்கும் அறைகள்சமையல்கூடம் என மற்ற தேவைகள் விரிந்தபோதுஇடித்து இடித்து ஒவ்வொன்றாகக் கட்டி மாளாமல்மொத்தமாக இடித்துவிட்டு திருமண மண்டபத்தைப் புதிதாகக் கட்டியவர்கள்தான் தமிழ்நாட்டில் நிறையப் பேர்.
ஒவ்வொரு தொழிலுக்கும்அத்தொழிலுக்கே உரித்தான நடைமுறைத் தேவைகளையும்,வசதிகளையும் கருத்தில் கொண்டுதான் கட்டடங்கள் வடிவமைக்கப்படுகின்றன. நூலகம் என்றாலும் சரிதிருமண மண்டபம்குடியிருப்புஷாப்பிங் மால் அல்லது பள்ளிகல்லூரி என எதுவாக இருந்தாலும் அதற்கென தனி வடிவமைப்புத் தேவையாக இருக்கிறது. இதில் மருத்துவமனை விதிவிலக்கல்ல.

ஆபரேஷன் தியேட்டர்பொது நோயாளிகளுக்கான படுக்கைகள் கொண்ட வார்டுகள்அந்த வார்டுகள் அருகே அந்தந்தத் துறை மருத்துவர்களுக்கான அறைகள்சிறப்பு நோயாளிகளுக்கான தனியறைகள்,இவர்களுக்கான பிரத்யேக மின்தூக்கிகள்பிரத்யேக தண்ணீர்க் குழாய்கள்மருத்துவக் கழிவுகளை எரிக்கும் இன்சினேட்டர்பல ஆயிரம்பேர் வந்துசெல்லும் நிலையில் அவர்களது வாகன நிறுத்துமிடங்கள்இவர்களுக்கான உணவகங்கள்இருப்பிட மருத்துவருக்கான வீட்டு வசதிகள்,ஸ்ரெட்சரைத் தள்ளிச் செல்லும் சாய்தளங்கள் என எத்தனையோ தேவைகள் மருத்துவமனைக்குத் தேவைப்படுகின்றன. இதற்காக தனியாக வரைபடம் தயாரித்துகட்டடம் கட்டுவதுதான் மருத்துவமனையின் தேவையைப் பூர்த்தி செய்யும்.

மருத்துவமனைக் கட்டட வடிவமைப்புமருத்துவமனை நிர்வாக இயல் இவற்றுக்கான சிறப்புப் பாடத்திட்டங்களும்பொறியியல்நிர்வாக இயல் பட்டப் படிப்புகளும் ஏற்பட்டுவிட்ட காலம் இது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் சிறப்பு மருத்துவமனைகளை விடுங்கள்சாதாரண மருத்துவமனைகளை வடிவமைப்பதற்கேகூடத் தேர்ந்த பொறியியலாளர்கள் வெளிநாடுகளுக்குப் போய் படித்துவிட்டு வருகிறார்கள்.
÷செயல்படாத நிலையில் இருக்கும் புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றிவிட முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்அது திரையரங்கைத் திருமண மண்டபமாக மாற்றிய கதையாகத்தான் முடியும். அதைவிட இப்போதுள்ள கட்டடத்தை முற்றிலுமாக இடித்துவிட்டுப் புதிதாக மருத்துவமனைக் கட்டடம் கட்டுவதுதான் புத்திசாலித்தனம். அப்படிச் செய்தால்அண்ணா சாலையில் ஒரு மருத்துவமனை இருப்பதைப் போன்று நோயாளிக்கு வேறு தொல்லை எதுவுமே இருக்க முடியாது.
அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டப்போவதாக முந்தைய திமுக அரசு அறிவித்தபோதுஅண்ணா சாலையில்சென்னையின் மத்திய பகுதியில் தலைமைச் செயலகம் அமைப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பற்றி தீர்க்கதரிசனத்துடன் கவலை தெரிவித்த முதல்வர் ஜெயலலிதாஇப்போதும் அதே காரணங்கள் மருத்துவமனைக்கும் பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ளாதது வியப்பை ஏற்படுத்துகிறது.
மத்திய சிறைச்சாலையைப் புழலுக்கு மாற்றியதைப் போலராஜீவ் காந்தி தலைமை மருத்துவமனையின் விரிவாக்கத்தையும் ஊருக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மருத்துவமனை கட்டப்பட்ட நேரத்தில் இருந்த சுற்றுச்சூழலும் போக்குவரத்தும் மக்கள் தொகையும் முற்றிலும் மாறானவை. அன்றைய தினம் கூவம் ஒரு நதியாக இருந்தது. இன்றோ கூவம் என்பது சென்னைப் பெருநகரின் பெரிய சாக்கடையாகத் திகழும் காலம். ராஜீவ் காந்தி தலைமை மருத்துவமனையிலிருந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் போதாதென்றுபுதிதாகக் கட்டப்பட இருக்கும் அல்லது சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட இருக்கும் அரசினர் தோட்டத்து மருத்துவமனையின் கழிவுகளும் கூவத்தில் கொட்டப்பட்டால்சென்னைப் பெருநகரின் நிலைமைதான் என்ன என்பதை ஏன் அரசு யோசித்துப் பார்க்கவில்லை?
எல்லோரும் ஊருக்குள் வந்தாக வேண்டும் என்று தெரிந்திருந்தும்போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகபொய்க் காரணங்களுடன்பேருந்து நிலையங்களை ஊருக்கு வெளியே கொண்டு செல்கிறோம். நோயாளிகள் அமைதியானமாசற்ற சூழலில் இருக்க வேண்டியவர்கள் என்று தெரிந்தும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நகரத்தில் இரைச்சலுக்கு நடுவே கொண்டு வருகிறோம். ஏன் இந்த முரண்?
அரசினர் தோட்டத்தில் முந்தைய திமுக அரசால் கட்டப்பட்ட தலைமைச் செயலக வளாகம்அரசு அலுவலகங்கள் செயல்படுவதை முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்ட கட்டடம். அதில் தலைமைச் செயலகம் செயல்படுவதில் சிரமம் இருக்கலாம். ஆனால்அது அலுவலக வளாகம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் அத்தனை அரசு அலுவலகங்களையும் அங்கே மாற்றிஅது ஏன் ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகமாக மாற்றப்படக் கூடாது?

Sunday, August 21, 2011

தமிழ் சினிமா, தமிழ் தொடர்


சூது, வாது இல்லாத பாத்திரங்களே இல்லை. பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம்.
உன் புருஷன் உன்னை ஏமாற்றி மற்றவனுடன் வாழ்ந்தால், விடாதே... நீயும், உன் புருஷனை ஏமாற்றி, மற்றவளின் புருஷனுடன் வாழ்ந்து காட்டி, உன் புருஷனுக்கு புத்தி புகட்டு.
ஓரகத்தியுடன் சண்டையா...உடனே உன் தங்கையை, உன் மச்சினனை மயக்கச் செய்து, அவனை வயப்படுத்தி, ஓரகத்தியை பழிவாங்கு. அவன் சாம்ராஜ்யம் அழியணும்; நான் முன்னுக்கு வரவேண்டும். சாகும் தருவாயில், மகளிடம் அப்பன் கேட்கும் உதவி...
என் குடும்பத்தை நாசமாக்கிட்டான் அவன். நயவஞ்சகத்தால், கூட இருந்து குழி பறித்து, அவன் குடும்பத்தில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையிலும்; பெற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையிலும்; உடன்பிறப்புகளுக்கு இடையிலும் பிரிவு ஏற்படுத்தி, ஒருவருக்கு ஒருவர் பகைவராக்கி, அந்த குடும்பத்தை நாசம் செய்ய வேண்டும். இதுவே என் கடைசி ஆசை; அப்போது தான், என் ஆத்மா சாந்தி அடையும்...'
நீ தான் மணமேடையில், சண்டை செய்து, உன்னை மணக்க இருந்தவளின் திருமணத்தை நிறுத்தி விட்டாயே! அதன் பின், மற்றொருவளுக்குத் தாலி கட்டி, மணம் செய்து குடும்பம் நடத்துகிறாயே! நீ கைவிட்ட பெண்ணை நான் மணம் செய்து கொள்ள, நீ யார் என்னை எதிர்ப்பது?' இதற்கு ஒன் லைன் பதில்: "என்ன பெரிய தாலி? இப்ப கூட நான் கட்டிய தாலியை அறுத்து எறிந்து விட்டு, முன்னவளை கட்டிக்குவேன். நீ இதுல குறுக்கிடாதே!'
அரசியல்வாதிகளுக்கும், தாதாக்களுக்கும், போலீசுக்கும் உள்ள ஒட்டுறவு.
இவர்கள் நாட்டின் நடப்பைச் சொல்கின்றனரா? இல்லை, மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கின்றனரா?
அம்மம்மா... எங்கு சென்று ஒளிந்தது நம் நாட்டுக் கலாச்சாரம்? நம் கலாசாரத்தின் உயர்வு என்ன? நமக்கு அவை புகட்டிய அறிவுரைகள் என்ன? நாம் எங்கு செல்கிறோம்?
உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், அகிம்சை, நட்பு, மரியாதை, இன்சொல், வன்சொல் களைதல், ஒழுக்கம், பணிவு, அடக்கம் எல்லாம் எங்கு சென்றன? மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகியதால், "டிவி'யில் தமிழ் சினிமா, தமிழ் தொடர்களைப் பார்ப்பதை நிறுத்தி விட்டோம். என் மன எண்ணங்களை கொட்டித் தீர்த்து விட்டேன்!
என்றும், இன்னும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் எழுதலாம். ஏதாவது ஒரு தனியார், "டிவி'யாவது, நம் பண்பாடுகளை நிலைநிறுத்தும் விதமாக, ஒரே ஒரு தொடராவது சோதனை முயற்சியாக எடுத்து ஒளிபரப்புமா?.

நன்றி : பயனுள்ள தகவல்கள் .

Friday, August 19, 2011

கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.sமியூசிக் ஆகிய சேனல்களில் இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.




பாதி ரஜினி முகத்தையும்
பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?'என்பதுதான் அது.

...
இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.
உடனேயாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிடஅவர் 'கவுண்டமணியும் செந்திலும்என பதில் சொல்கிறார்.ரஜினியையும்கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்என்ன கூத்து இது?
தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இதுஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்உண்மையிலேயே கொடுக்கிறார்களாஅவர்களின் நோக்கம் என்னஇதன் பின்புலம் என்னஎன்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.
இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும்உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம்பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.
திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என்உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள்,குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:

1.
இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர்,ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.

2. 
ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.

3.
கால் வெயிட்டிங்கிற்குப் பதில்நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால்கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும் பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.

4.
நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.

5.
இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல்வேறு ஒரு நிறுவனத்திடம் இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள். 
இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.
இதைப் படித்தபிறகாவதுஇம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்.


டிஸ்கி : இது பயனுள்ள தகவல்கள் என்ற ஈமெயில் மூலம் எனக்கு வந்தது
                From: Aneez Munower

Monday, August 15, 2011

கருப்பு என்றால் கேவலமா?

அடிமைப்படுவதிலும், உணர்ச்சிவசப்படுவதிலும் தமிழனை மிஞ்ச ஆளில்லை...

அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது, பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதில், `நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரயிலில் சென்றேன். 

இந்த பயண நேரம் 24 மணி நேரம்தான். ஆனால், 72 மணி நேரம் ஆகியும், அந்த ரெயில் ஒரிசா போய்ச் சேரவில்லை. அதனால், எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகி விட்டது' என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார்.

நெல்சன் மண்டேலா கறுப்பின மக்களுக்காக போராடி வென்றபோது, அவருக்கு விருது கொடுத்து மகிந்ததோம்..

அமெரிக்கா ஒபாமா ஜனாதிபதியாக வென்றபோது விடுதலைப்புலி அடிமை  வைகோ ஏதோ இந்தியாவின் ஜனாதிபதி போல - அவரைப்பற்றி ஒரு புத்தகம் காப்பி அடித்து எழுதி விளம்பரம் தேடினார்.

 இங்குள்ள சினிமா கூத்தாடிகள் கருப்பாக இருப்பதை புகழ்ந்து "கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு" என்ற ஆபாச கவிதைகள் எழுதி மகிந்தனர்.

அதுமட்டுமல்ல இந்த அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ் அந்த விழாவில் பேசும்போது கூட இந்த அடிமைகள் கைதட்டி மகிழ்ந்திருக்கின்றன..

எவனோ ஒரு அரசியல் வியாதி தனது சுய விளம்பரத்திற்காக தமிழ்நாட்டினரை  உசுப்பேத்திவிட, இதை இன்னும் பெரிதாக்கி, தமிழனை கருப்பு என்று "அவமானப்படுத்தி" இருப்பதாக இன்று லேட்டஸ்ட் தமிழ் வியாபாரிகள் குதிப்பது வேடிக்கையாக உள்ளது..

கருப்பாக இருப்பது கேவலமா?

கருப்பு இல்லையென்றால் வெள்ளையோ அல்லது மற்ற நிறங்களோ கிடையாது எனபது இந்த லேட்டஸ்ட் தமிழ்பற்று வியாபாரிகளுக்கு தெரியாதா?

வெள்ளைதான் உயர்ந்தது, கருப்பாக இருப்பது கேவலம் என்று தாழ்வு மனப்பான்மையுடன் நினைத்துக்கொண்டிருக்கும் வரை தமிழன் என்றும் அடிமையாகத்தான் இருப்பன்..








Sunday, August 7, 2011

டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம்..


என்னதான் ஆயிரம் சந்தர்பவாதி என்று சொல்லப்பட்டாலும், ஜாதி வெறியூட்டி கட்சி வளர்ப்பவர் என்று விமர்சிக்கப்பட்டாலும், ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு நிலையை எடுப்பவர் என்று அறியப்பட்டாலும், பாமக கட்சியின் நிறுவனர் ராமதாசின் மூன்று நிலைப்பாடுகள் முழுதும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியது மட்டுமல்ல ஆதரவளிக்கக்கூடிய ஒன்றுகூட..

சாராயம், புகைப்பிடித்தல் மற்றும் சினிமா போன்ற சமூக சீர்கேடுகளுக்கு அவர் என்றும் ஒரு வலுவான எதிர்ப்பு காட்டி வருவது வரவேற்க்கத்தக்கதே..

 மரம் வெட்டுதல், இன்னும் அரசின் சில நல்ல திட்டங்களுக்கு கூட தேவையற்ற எதிர்ப்பு (துணை நகரம், விமான நிலைய விரிவாக்கம் - போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது) போன்ற  மக்கள் விரோதப்போக்கில் செயல்பட்டாலும், மது, புகை, சினிமா போன்றவைகளி அவர் கடுமையாக எதிர்த்து வருவது பாராட்டத்தக்கது.

இதோ, உள்ளாட்சி தேர்தல்களுக்கு பிறகு, "டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம்" என்று ஒன்றை அறிவித்திருக்கிறார்.

மக்கள் நலனை பேணவேண்டிய அரசுகளே, மூலைக்கு மூலை சாராயக்கடைகளை திறந்து வைத்துக்கொண்டு, அந்த விஷத்தை விற்கும் கேவலத்தை செய்துகொண்டிருக்கின்றன.
இதை எதிர்க்க வேண்டிய எதிகட்சிகளே, குடிக்கு ஆதரவான நிலையில் இருப்பதால் குடிகாரர்களின் எண்ணிக்கையும், அநியாயமும், பொறுக்கித்தனமும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கின்றன.
சாலையோரங்களில் அநாகரீகமான முறையில் நாய் போன்று கத்திகொண்டிருப்பது, கூச்ச்சளிட்டுக்கொண்டிருப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற கேவலங்களை மனிதன் என்ற மிருகங்கள் செய்துகொண்டிருக்கின்றன.

இவைகளை களைவது மட்டுமே சமூக உயர்வுக்கு நல்ல வழிவகுக்கும்..

டாக்டர் ராமதாஸ் சொன்னமாதிரி எந்த விட அடக்குமுறைக்கும் பயப்படாமல் இந்த சாராயக்கடைகளை அடித்து நொறுக்கி ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி இந்த சமூக அவலங்களை அகற்றினால் நாளைய சமுதாயம் அவரை நன்றியுடன் நினைவுகூறும்.

Wednesday, August 3, 2011

பிரபல பதிவரை காணவில்லை...




முதலில் மங்குனி அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள்..

"அன்புள்ள  மங்குனி அமைச்சரே..
உங்களது பதிவுகளை காணாமல் பதிவுலகம் களையிழந்து காணப்படுகிறது...இறுதியாக  என்னையும் உன்னைய மாதிரி கேனன்னு நினைச்சுக்கிட்டியா ??? 
என்ற வரலாற்று சிறப்புமிக்க பதிவை பதிந்த பிறகு உங்களது பதிவுகள் தொடர்ந்து வெளிவராமல் இருக்க நாங்கள் என்ன பாவம் செய்தோம்?

உங்களது ஜூனியர் தானே உங்களை அவ்வாறு கேட்டான்? மங்குனிக்கு பிறந்தது மக்காகுமா?

இதற்காகவேல்லாமா குவார்டர் அடித்து குப்புறப்படுப்பது?  அல்லது இதற்காகவா "பதிவுலகத்துறவரம்" மேற்கொள்வது? 

"உனது ராஜாங்கம் இதுதானே..ஒதுங்கக்கூடாது நல்லவனே (?)" என்று உங்களது கோடானு கோடி (?) ரசிகர்கள் சார்பாக வேண்டுகிறோம்..

மங்குனி எழுந்து வா மங்குனி..உன் மொக்கைகளை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.."

மீபத்தில் பதிவுலகில் பதிவுகள் (மொக்கை?) பதிந்து பரபரப்பாக விளங்கிய பிரபல பதிவர் மங்குனி அமைச்சரை பலநாட்களாக காணவில்லை..

தொடர்ந்து மொக்கை பதிவுகளாக பதிந்து, கவனிக்கத்தக்க பிரபல பதிவராக விளங்கிய மங்குனி அமைச்சருக்கு என்னவாயிற்று என்று அவர்களது நண்பர்கள் யாராவது விளக்கினால் நல்லது.