Pages

Tuesday, November 23, 2010

விஷத்தை விற்பனை செய்யும் தமிழக அரசு!

தீமை என்று தெரிந்த பிறகும் அதைத் துணிந்து செய்யும் உயிரினம் மனிதனைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது.


தமிழகத்தில் நீண்டகாலமாக எழுப்பப்படும் கோஷம் "மது விலக்கு'. இளைஞர்களின் இப்போதைய கொண்டாட்டங்களில் "மது விருந்து' தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது.புத்தாண்டு மற்றும் பண்டிகை, திருவிழாக்களின்போது களைகட்டும் பார்ட்டிகளால் மது விற்பனையில் புதிய சாதனை படைக்கப்படுவதே இதற்குச் சான்று.முன்பெல்லாம், திரைப்படங்களில் கதாநாயகன் சோகமாக இருக்கும்போது மது அருந்துவதாகக் காட்சிகள் வரும். அதற்கே, ஊடகங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்த காலம் உண்டு.ஆனால், இப்போது, குடும்பத்தோடு பார்க்கும் டி.வி. சீரியல்களிலேயே மது அருந்துவதாக வரும் காட்சிகள் சர்வசாதாரணமாகி விட்டன.தீய சேர்க்கையால் வளர் இளம் பருவத்தினர் 13, 14 வயதிலேயே மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.விருந்தாளியாக வீட்டுக்குள் நுழையும் மது, நாளடைவில் மோசமான எஜமானனாகி, குடும்பத்தையே நாசமாக்கி விடுவதை பல வீடுகளில் காணமுடிகிறது.கிருமிகளைவிட வேகமாக, தமிழகத்தில் போதைக் கலாசாரம் பரவி வருகிறது.


இப்பொழுதெல்லாம் எந்த ஒரு நிகழ்வுக்கும் முடிவில் சாராயம் ஒரு முக்கியமான அங்கமாகி விட்டது...கல்யாணமா ..? பேச்சிலர் பார்ட்டி என்று குடியாய் குடிக்கிறார்கள்.! வெளிநாட்டு தயாரிப்புகளின் அறிமுக நிகழ்ச்சியா?  buffet  என்ற பெயரில் சாராயம் பரிமாறப்படுகிறது!. மரணம் நிகழ்ந்து விட்டதா? குடித்துவிட்டு பேயாட்டம் போடுகிறார்கள்..! விளயாட்டில் வெற்றியா? ஷாம்பெயின் வழங்கி  குடிக்க சொல்லுகிறான்.. ! சாதாரண நண்பர்கள் மீட்டிங் என்றாலே அது சாராயக் கடைக்கு செல்வதுதான் என்றாகிவிட்டது.! குடிக்காதவன், குடியை நிறுத்தியவனை நண்பர்கள் சேற்றுக் கொள்வது இல்லை.."டே அவன் வேலைக்கு ஆகமாட்டாண்டா..!" என்ற ஏளனம் வேறு..பீர் மட்டும் குடிப்பவன் கூட அவர்கள் மத்தியில் இளப்பம்தான்..  இப்படி எங்கும் சாராயம் எதிலும் சாராயம் என்று ஆகிவிட்டது தமிழர்கள் என்று ஒப்பாரி வைப்போரின் கலாசாரம்..இதில் கள்ளுக்கடைகளை திறக்க சொல்லி ஒரு குடிகாரக் கூட்டம் அரசியல் செய்து கொண்டிருக்கிறது

கிராமங்களில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்காக பெரிய கூட்டமாக மக்கள் நிற்பார்கள்..அதுபோன்று இப்போது அரசு நடத்தும் டாஸ் மாக் சாராயக்கடைகளில் இந்த குடிகாரர்களின் கூட்டத்தை காணமுடிகிறது..



அரசு பேருந்துகளில் ஐம்பது காசு ஏற்றிவிட்டால் தாம் தூம் என்று குதிக்கிற இந்த குடிகாரக் கூட்டம், தினமும் குறைந்தது 300 ரூபாய்க்காவது குடிக்காமல் வீட்டுக்கு  போகாது..


"எக்கேடோ கெட்டு ஒழியுங்கள்..!' என்ற மனோபாவத்தில், வருமானம் ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு, காணும் இடமெல்லாம் மதுக் கடைகளைத் திறந்துவிட்டு போதைப் பிரியர்களை அரசு குஷிப்படுத்தி வருகிறது. இரவானாலே, இவர்களின் தள்ளாட்டத்தால் பெண்களும், அப்பாவிகளும் வீதிக்கு வரவே அச்சப்படுகின்றனர்.



1983-84-ல் டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருமானம்
139 கோடி. இப்போதைய நிலவரப்படி 16 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இந்த வருட தீபாவளி பண்டிகையின் போது 150 கோடி என்ற இலக்கைத்தாண்டி 300 கோடிக்கு விற்கப் பட்டதாக சொல்வது மகிழ்ச்சி அளிப்பதைவிட பல குடும்பங்கள் அதனால் பாதிக்கப் பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த நிதி, அரசின் திட்டங்களுக்குத் திருப்பி விடப்பட்டாலும், இந்த அசுர வளர்ச்சியை தமிழனின் சாதனை என்பதா..? வேதனை என்பதா.?பட்டி தொட்டியெங்கும் சுமார் ஆறாயிரத்துக்கும் மேலான மதுக்கடைகள் திறக்கப்பட்டு ஏழை பாட்டாளிகள் குடித்தே அழிந்து கொண்டிருக்கின்றனர்.



குடிப்பழக்கம் ஒரு நோய்' என உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மனிதனை மெல்ல, மெல்லக் கொல்லும் ஆட்கொல்லி விஷம்தான் "மது' என்பது நிரூபணமாகி விட்டது.பெரிய குடிகாரன்னு தெரிஞ்சிருந்தா என் பெண்ணைக் கொடுத்தே இருக்க மாட்டேனே..!' என எத்தனையோ வீடுகளில் புலம்பல் சத்தங்கள் கேட்கின்றன.ஏழைகள்.. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் ஈட்டும் வருமானத்தின் பெரும்பகுதி மதுக்கடைகளுக்கே செல்வதால், அபலைப் பெண்கள் குழந்தைகளுக்குச் சத்தான உணவைத் தரமுடியாமல் தவிக்கின்றனர்...!கணவன்மார்களின் போதைப் பழக்கத்தால் அவர்களது வளர்ச்சி முடங்கிப் போய், கடைசிவரை ஏழ்மைக் கோட்டைத் தாண்ட முடியாமலேயே போய்விடுகிறது. அந்த அளவுக்கு "மது' மனிதனின் பகுத்தறிவை இழக்கச் செய்து தரித்திரத்தில் ஆழ்த்திவிடுவதை, சரித்திரத்தில் இடம்பெறத் துடிக்கும் ஆட்சியாளர்கள் உணர வேண்டும்..!ஆயிரக்கணக்கான கடைகளைத் திறந்துவிட்டு "குடி குடியைக் கெடுக்கும்',"மது வீட்டுக்கும்,நாட்டுக்கும் கேடு' போன்ற சம்பிரதாயமான எச்சரிக்கை வாசகங்களை எழுதி வைத்தால் மது அருந்துவோர் ஒருபோதும் திருத்தப் போவதில்லை.குடித்துக் குடித்தே உடல்நலம் குன்றி, அவர்கள் மயானத்துக்குப் போகும்வரை, அரசின் வருமானத்துக்கும் குறைவிருக்கப் போவதில்லை.சமூகத்துக்கு பெருந்தீங்கை விளைவிக்கும் மதுக்கடைகளை மூடுக' என உரத்துக் கோஷம் எழுப்பிய ஓர் அரசியல் கட்சியும் எதிர்காலக் கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு அமைதியாகி விட்டது.பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகளால் எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டும் ஆட்சியாளர்கள் தரப்பில் கனத்த மெüனமே நீடிக்கிறது.படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும்..!' என எப்போதோ வெளியிடப்பட்ட அறிவிப்பையடுத்து, மதுக்கடைகள் இரவு 10 மணிக்கே மூடப்பட்டன. ஆனால், மற்றொருபுறம் ஏராளமான பார்கள் திறந்துவிடப்பட்டு நள்ளிரவைத் தாண்டியும் மது கிடைப்பதாகக் கூறுகின்றனர்.மதுக்கடைகளை மூடிவிட்டால், அதன் சில ஆயிரம் ஊழியர்கள் எங்கே போவார்கள்..? என்ற ஆதங்கம் இருக்கட்டும்..!ஆனால், மதுக்கடைகளை மூடாவிட்டால் போதையில் சீரழியும் லட்சக்கணக்கான மனிதர்களால் நாதியின்றி வீதிக்கு வரப்போகும் தாய்மார்களும், குழந்தைகளும் எங்கே போவார்கள்..?இதை உணர்ந்தாவது, தமிழகத்தைப் போதை அரக்கனின் பிடியிலிருந்து விடுவிக்க வெகுசீக்கிரமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு விஷம் விற்பனை செய்தால் மக்கள் வாங்கி குடிப்பார்களா? மனிதர்களின் தனி மனித ஒழுக்கம் , சேமிப்பு, கலாசாரம், பண்பாடு மறந்தது .கற்பை பற்றி நடிகர், நடிகைகளிடம் உபதேசம் வாங்கி நிதிபதிகள் தீர்ப்பு சொல்கின்றனர். வேலை பார்ப்பவர்கள் ஆண்களும் பெண்களும் பார்ட்டி என்று சொல்லி குடிக்கின்றனர். மது குடிப்பதை ஆள்வோர் தடுப்பார்கள் என்ற நம்பிக்கை தகர்ந்து கொண்டே வருகிறது. குடிப்பதை நிறுத்துவதும் கட்டு பாட்டுடன் ஒழுக்கமாக இருப்பதும் மக்களின் கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொண்டால் எங்கும் மகிழ்ச்சியே..

நன்றி   http://velecham.blogspot.com/


Sunday, November 21, 2010

சினிமாவுக்கு மார்க்கு போட ஆனந்த விகடனுக்கு என்ன தகுதி? - ராஜேந்தர் ஆவேசம்


னந்த விகடன் ஆபாச விகடனாகி பல வருசங்கள் ஆகிவிட்டது..அதை இன்னும் ஒரு நடுநிலைமைப் பத்திரிகை என்று நம்புவோருக்காக இந்த பதிவு.


முழுக்க முழுக்க சினிமாப் பத்திரிக்கையாக மட்டுமில்லாமல் ஒரு கேடுகெட்ட ஆபாச புத்தகமாக வெளிவரும் ஆனத விகடன், சினிமாக்காரர்களை  வி ஐ பி என்று போட்டு தனது தரம் இதுதான் என்று காட்டி வருகிறது..




வியாபாரத்திற்க்காக மிகவும் கேவலமான பத்திரிக்கையாக வெளிவரும் ஆனந்த விகடன் திரைப்படக் கலைஞர் மற்றும் அரசியல்வாதியான  டி. ராஜேந்தர் ஒரு புதிய டி வி ஆரம்பிப்பத்று பற்றி ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறது..



அந்த கேவல விகடனை டி ராஜேந்தர் வறுத்தெடுப்பது இந்த டி. ராஜேந்தர் Vs. ஆனந்த விகடன்  என்ற இணைப்பில் பார்க்கலாம்..

அதை பார்க்க இங்கே  க்ளிக் செய்யவும்.



பூனைக்கு ராஜேந்தர் மணி கட்டி இருக்கிறார்..பார்ப்போம்..!

Monday, November 15, 2010

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் டைரக்ஷன் - கலைஞர் மு.கருணாநிதி

தினகரன் நாளிதழ் வெளியிட்ட ஒரு கருத்துக் கணிப்பால் கலைஞர் கருணாநிதி குடும்பத்திற்கும் - சன் டி வி (மருமகன்கள் டி வி?) குழுமத்திற்கும் ஏற்பட்ட குடுமிப்பிடி குடும்பச்சண்டையில் மத்திய மந்திரி பதவியை இழந்தார் தயாநிதி மாறன்..அதன் பிறகு அந்த -தொலை தொடர்பு துறைக்கு அமைச்சரானவர் ஆர். ராசா.


அதன் பிறகுதான் 1999 இல் இருந்து அதாவது பிரமோத் மகாஜன் பொறுப்பிலிருந்தபோது பின்பற்றப்பட்ட முறையே அலைவரிசை ஒதுக்கீடு முறையில் இப்போதும் பின்பற்றபடுவதாக தி.மு.க அறிவித்து வரும் - அந்த ஸ்பெக்ட்ராம் ஊழல் விஷயம் பரப்பானது..தினகரன் நாளிதழில் இதற்கென்றே ஒரு பக்கம் ஒதுக்கினார்கள்..


இதற்கு பிறகு கலைஞர் கருணாநிதி குடும்பத்திற்கும் - சன் குழுமத்திற்கும் இணக்கம் ஏற்பட்ட பின்பு கூட ஆர் ராசா அந்த பதவியிலேயே தொடர்ந்தார். அதன் பிறகு சன் குழுமம் அந்த செய்தியை அடக்கிவாசிக்க ஆரம்பித்தது..(வாசிக்கவே இல்லை)..


பின்பு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது கூட ராசாவே அதே பொறுப்பில் தொடர்ந்தார். அப்போதே இது பற்றி கேள்வி எழுந்தது..ஏன் தயாநிதி மாறனை தொலை தொடர்புத்துறைக்கு அமைச்சராகவில்லை என்று..



இதில்தான் கலைஞரின் ராஜதந்திரம் (இதற்கு பெயர் "தந்திரம்தான்") வெளிப்பட்டது.

இதில் ராசாவை பலிகடாவாக்க நினைத்துதான் ராசாவே இந்த பதவியில் தொடரவைக்கப்பட்டார் என்று பேசப்பட்டது..இதோ இப்போது "அப்பன் குதிருக்குள் இல்லை என்று கலைஞரே ராசாவை பலிகொடுத்து - அறிக்கையும் வெளியிட்டு விட்டார்..



ராசா ராஜினாமாவை தொடர்பாக தி.மு.க., தலைமை கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "" பார்லிமென்ட்டின் ஜனநாயக நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறவும், நாட்டு மக்களுக்கு தேவையான பிரச்னைகள் விவாதித்து முடிவெடுக்கப்பட வழிவகுத்திடும் வகையில், ராஜா அமைசசர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென்று தி.மு.க., முடிவெடுத்து அவருக்கு அறிவுறுத்தியுள்ளது,'' என, தெரிவிக்கப்பட்டது.


இதில் ராசா ஒரு கருவியாக பயன்படுத்தப் பட்டிருக்கிறார் என்று அப்பட்டமாக தெரிகிறது- பாவம்..!!!
 
 
ஒரு காமெடி பீசு : செல்வி ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டில் படுத்துக்கொண்டு ஒரு அறிக்கை விட்டார்...


"ராசாவை பதவியில் இருந்து நீக்கினால் - அதன் காரணமாக தி .மு. க தனது ஆதரவை மத்திய அரசுக்கு விலக்கிகொண்டால் அ.தி.மு.க ஆதரவளிக்கும்" என்ற காமெடியான அறிக்கையைகூட கருணாநிதி முறியடித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும்..

Friday, November 12, 2010

ஹோட்டல்களில் சாப்பிடுவோர் கவனிக்க..!!!


நோய் ஏற்படுவதைத் தடுக்க நான்கு விஷயங்களில் சுகாதாரம் மிக அவசியமான முதன்மை இடத்தில் இருக்கிறது. எந்தவொரு உணவுக்கூடமும்-நட்சத்திர ஓட்டல்கள் முதல் சாலையோர கையேந்தி பவன் வரை-உண்பவர் உடல்நலன் கெடும் எனத் தெரிந்தே உணவுப்பொருள்களை வழங்குவதில்லை. அவர்கள் தரும் உணவுப்பொருள் உடலுக்குக் கேடாக மாறிப்போவது நான்கு காரணங்களால்தான்.

1.அவை-உணவு வழங்குவோர்,
2. கையாள்பவர்,
3.சமையலரிடம் சுகாதாரமின்மை,
4.வழங்கப்படும் குடிநீர்காற்றில் மிதந்து உணவில் கலக்கும் தூசிபொட்டலம் கட்டப் பயன்படும் பொருள்கள்.
ஓட்டல்களில் உணவு வழங்குபவரின் அழுக்கு உடைஅவர் கைகளைத் துடைக்கும் (ஏற்கெனவே அழுக்கடைந்த) துணிகுடிநீர் ஊற்றப்படும் டம்ளர் அனைத்தும் கிருமிகளின் உறைவிடமாக இருக்கின்றன. பொட்டலம் கட்டப்பயன்படுத்தும் நாளிதழ்களின் அச்சு மையில் உள்ள காரீயம்உணவை விஷமாகச் செய்துவிடுகிறது. இந்தச் சிறிய விஷயங்களில் ஒழுங்குமுறையைசுகாதார விழிப்புணர்வை உணவுத் தொழில் புரிவோரிடம் ஏற்படுத்த முடிந்தால்மருத்துவமனைகளைத் தேடும் நோயாளிகள் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துவிட முடியும்.

ஓட்டலில் உணவு வழங்குவோர்கையாள்வோர்சமையலர்களுக்கான உரிமம் வழங்கும் திட்டத்தைக் கடுமையாகவும்கட்டாயமாகவும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  நிலையான ஓட்டல்களில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே இந்த உரிமம்பயிற்சி என்பது போதாது. ஏனென்றால்இன்றைய நாளில் தமிழகம் முழுவதும் கையேந்தி பவன்கள் ஆயிரக்கணக்கில் அதிகரித்துவிட்டன. முன்பெல்லாம் வெறும் கூலித் தொழிலாளிகள் மட்டுமே சாப்பிடுவார்கள் என்ற நிலைமை மாறி,  தற்போது நடுத்தர வருவாய்ப் பிரிவினர்கூட கையேந்தி பவன்களில் சாப்பிடுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. இங்கே சாப்பிடத் தயங்குவோர் பொட்டலம் கட்டிக்கொண்டு வீடுபோய்ச் சாப்பிடுவதும் அதிகரித்து வருகிறது.
  



இதற்குக் காரணம்,  ஒரு சாதாரண ஓட்டலில் விற்கப்படும் உணவுப் பொருள் விலைக்கும்,  கையேந்தி பவனில் கிடைக்கும் உணவுப் பொருள் விலைக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதுதான். இதற்குத் தொழில்ரீதியாகவும்முதலீடு ரீதியாகவும் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் யார் எங்கு சாப்பிட்டாலும் அவரது உடல்நலன் கெடாதபடி சுகாதார உணவாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். இதை நிறைவேற்றும் பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கிறது.
கையேந்தி பவன்கள் இன்றைய காலத்தின் கட்டாயம். அவற்றுக்கு அதிகாரிகள் மூலம் நெருக்கடி கொடுப்பதைக் காட்டிலும்அவை முறையாகவும் சுகாதாரமாகவும் செயல்படும் வகையில் ஒழுங்குபடுத்துவதும்,  இதில் ஈடுபட்டு இருப்போருக்கு சுகாதாரம் குறித்த முறையான பயிற்சி அளிப்பதும்தான் அரசு இன்று செய்ய வேண்டியது.
ஓட்டல்களைக் கண்காணிக்க உணவு ஆய்வாளர் எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் இருக்கிறார் என்றாலும், இன்றைய நாளில் அவரது தீவிரக் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலில்முன்னெப்போதையும் விட மிக முக்கிய சமூகப் பொறுப்பு அவருக்கு இப்போது உள்ளது. இது வெறும் பதவி என்பதைக் காட்டிலும் மேலான சமூகக் கடமை என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால்நோய்த்தொற்றுகள் பலவற்றைத் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்திவிட முடியும்.
  

கையேந்தி பவன்களுக்கான நல்ல குடிநீரை உள்ளாட்சி அமைப்புகளே கட்டணம் பெற்று லாரிகள் மூலமாக வழங்குதல்உணவுக் குப்பைகளை உடனுக்குடன் வாரிச்செல்லுதல் போன்றவை நகரச் சுகாதாரத்துக்கு மட்டுமன்றி,  கையேந்தி பவன் நடத்துவோர் மற்றும் அங்கே உணவு உண்போருக்கும் நன்மை தரும்.
உணவின் சுவை,  உணவின் வகைஅவை சமைக்கப் பயன்படும் உணவுப்பொருள்உண்ணும் சூழல்மின்விசிறி அல்லது குளிரூட்டு வசதிபொருளின் விலை இவை அனைத்தும் இடத்திற்கேற்ப மாறுபடலாம். ஆனால்எல்லா நிலைகளிலும் சுகாதாரமான உணவு என்பதில் மாறுபாடு இல்லாதபடி பார்த்துக் கொள்வது அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையாகும்.
-- 


நன்றி - http://velecham.blogspot.com/ 
.
வெளிச்சம்

Monday, November 8, 2010

ஒவ்வொரு பத்திரிக்கையாளனும் வெக்கப்பட வேண்டிய விசயம்



இந்த அதிர்ச்சியடைய வைக்கும் செய்தி தமிழ் மலர் மின் நாளிதழ் என்ற வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது..அவர்களின் அனுமதியுடன் இதை வெளியிடுகிறேன். 


லஞ்சம் வாங்கக்கூடாது, இயன்றவரை தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை கட்டுப்படுத்திவிடவேண்டும் என்ற கொள்கை உடையவர் அந்த வட்டாட்சியர்.


தீபாவளிக்கு அந்த அதிகாரியை கோவை நிருபர் பட்டாளம் சந்தித்தது.

தனக்கு வாழ்த்து சொல்ல வந்ததாக எண்ணிய வட்டாச்சியருக்கு அதிர்ச்சி.


‘‘இதற்கு முன்பு இருந்த வட்டாச்சியர்கள் தீபாவளி தோறும் நிருபர்களுக்கு அன்பளிப்பாக போனஸ் தொகை தருவார்கள். அதுபோல நீங்களும் ஏற்பாடு செய்யுங்கள் என்றுள்ளனர்.’’

அது என்ன நிருபர் போனஸ் தொகை என்று அதிகாரிகளிடம் விசாரித்தபோது அதிர்ச்சியடைந்து விட்டார் தாசில்தார்.

நிருபர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.1000 கவரில் வைத்து கொடுக்கவேண்டும். 150 நிருபர்கள் உள்ளார்கள், நிருபர்களுக்காகவே பொதுமக்களிடம் ஆண்டுதோறும் தீபாவளி வசூல் (லஞ்சம்) வாங்குவோம். என்றுள்ளனர் ஊழியர்கள்.


அதிர்ச்சியடைந்த தாசில்தார் சில நிருபர்களை அழைத்து தனக்கு சம்பளம் 20 ஆயிரத்துக்கும் குறைவுதான். பணியில் வேலைக்கு சேர்ந்து 34 வருடங்கள் ஆகிறது. இதுவரை யாரிடமும் லஞ்சம் வாங்கியதில்லை. என்னால் தீபாவளிக்கு வாழ்த்துக்களை மட்டும் தான் சொல்ல முடியும். வேறு எதாவது கையெழுத்து போன்ற உதவிகள் இருந்தால் வாருங்கள் செய்து தருகிறேன் என்றுள்ளார்.

நீங்கள் ரொம்ப யோக்கியமான அதிகாரி என்பது எங்களுக்கு தெரியும். தாசில்தார் அலுவலகத்துக்குள் இருக்கும் கடைகளில் இருந்து உங்களுக்கு எவ்வளவு பங்கு வருகிறது என்பதும் எங்களுக்கு தெரியும். தீபாவளிக்கு பின்னர் பத்திரிக்கையில் செய்தியை பார்த்துக்கொள்ளுங்கள் என்று மிரட்டி சென்றுள்ளனர்.

இந்த மிரட்டல் குறித்து வேறு சில பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் தனது உயர் அதிகாரிகளிடமும் கூறியுள்ளார்.

அவர்களிடம் இருந்து வந்த பதில் தான் அதை விட அதிர்ச்சி

பத்திரிக்கையாளர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். கலெக்டர் அலுவலகத்தில் இருந்தே கவர் போகும்போது உங்களுக்கு கொடுக்க என்ன தயக்கம். உடனடியாக ஏற்பாடு செய்து பத்திரிக்கையாளர்களுக்கு கவரை கொடுங்கள் என்றுள்ளனர்.

34 ஆண்டுகளாக என் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரையும் சமாளித்து, லஞ்சம் வாங்காமல் இருந்து விட்டேன். இந்த பத்திரிக்கையாளர்களை எப்படி சமாளிப்பது?

நீண்ட யோசனைக்கு பின்னர் முடிவெடுத்தார் தாசில்தார்.

தனது ஊழியர்களை அழைத்து வண்டியை எடுங்கள் இன்ஸ்பெக்சன் போகவேண்டும். அப்படியே மொய் கவரையும் ரெடி பண்ணுங்கள் என்றார்.

நிருபர்களுக்கு ரூ.500 கவரில் கொடுக்கப்பட்டது.

....................................

இது ஒரு அதிகாரியின் நிலையல்ல, தமிழகம் முழுவதும் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதே நிலை தான்.

ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் மிகவும் வெட்கப்படுகிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை.

லஞ்சத்தை நிச்சயம் ஒழிக்க முடியாது.

நன்றி

தமிழ் மலர் மின் நாளிதழ்


Saturday, November 6, 2010

ஒபாமா வருகை - வீணாகும் பொருளாதாரம் - பறிபோகும் சுயமரியாதை

அமெரிக்க அதிர்பர் ஒபாமா வருகையை ஒட்டி இந்தியா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. (ஆமாம்...வரலாறு கண்ட பாதுகாப்பு யாருக்குதான் போடுவார்கள்?) அவருக்காக - மும்பை தாஜ் ஹோட்டல் முழுவதும் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது பாதுகாப்புக்காக அமெரிக்க விமானப்படை, கப்பல் படை எல்லாம் மும்பையை முற்றுகை இட்டுள்ளன. சொல்லப்போனால் மும்பை டெல்லி போன்ற நகரங்கள் ஒபாமா வருகைக்கு நான்கு நாளைக்கு முன்பேயும், அவர் இந்தியாவில் தங்கி இருக்கப்போகும் நான்கு நாட்களும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கப்போகிறது. அதாவது ஒரு நாட்டின் ஜனாதிபதி இந்தியாவிற்கு வருவதற்காக நமது நாட்டையே அவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் ஒரு அவலத்தை செய்திருக்கிறார்கள்..இதற்குத்தானா இவ்வளவு பாடுபட்டு சுதந்திரம் வாங்கினார்கள்?


நமது பிரதமரும்தான் முக்கால்வாசி நாட்கள் ஒவ்வுறு நாடாக பயணம் செய்து கொண்டிருக்கிறார்..இப்படித்தான் ஒவ்வொரு நாட்டிலும் ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கின்றவா? அவரகளது நாட்டை நம் கட்டுப்பாட்டில் வைத்துகொள்கிறோமா?

ஏன் இந்த அடிமை புத்தி?

இன்னும் சொல்வதென்றால் நமது மத்திய அமைச்சர்கள் அமேரிக்கா சென்று, அங்குள்ள குடியுரிமை அதிகாரிகளால் ஆடைகளை களைந்து சோதனை செய்யப் பட்டிருக்கிறார்கள்..

இவ்வளவு கேவலப்பட்டும் ஏன் ஒபாவுக்கு இப்படி ஒரு மரியாதை?

அவர் அமெரிக்காவுக்குதானே அதிபர்? உலகத்துக்கு இல்லையே?
இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கேவலப்படுத்தும் அளவுக்கு ஒபாமாவுக்கு சிறப்பு கார் ஒன்று..எல்லாவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நிறைந்ததாம். இங்குள்ள ஆபாசப் பத்திரிக்கைகள் அதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதி புளங்காகிதம் அடைந்துகொள்கின்றன..த்தூ..வெட்கம்கெட்டவர்களே..!


இந்தியாவின் பாதுகாப்பில் நம்பிக்கை இல்லையென்றால் ஏனடா இங்கே வருகிறீர்கள்..



ஒரு நாளைக்கு ஒபாமாவிர்கான செலவு எவ்வளவு தெரியுமா?


சுமார் இந்திய பணம் 900 கோடி ரூபாய்..அப்படி என்றால் நான்கு நாட்களுக்கு? 3600 கோடி ரூபாய்களாகும்.


இதெல்லாம் யாருடைய பணம்? அல்லது எதற்காக இந்த செலவு?

இப்படி இவ்வளவு செலவு செய்து, சுயமரியாதையும் இழந்து நிற்கிறது இந்திய அரசு..



அப்புறம் :

நமது நாட்டில் நேற்றைய தினம் தீபாவளி..

எல்லா மக்களும் உறவினர்களுடன் - இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையான படங்களுடன் - டி விக்களை பார்த்த வண்ணம் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி இருப்பீர்கள்..


வருடம் பூராவும் உழைத்ததற்காக முதலாளிகளிடம் உரிமையாக போனஸ் பெற்று, ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு பட்டாசு வாங்கி கொளுத்தி மகிழ்ந்திருப்பீர்கள்..

சாலையில் வருவோர் போவோர்பற்றி கவலைப் படாமல் வெடிகளை வெடித்து தீபாவளியை கொண்டாடி இருப்பீர்கள்...

ஒபாமாவுக்கான செலவு மட்டுமல்ல - ஒவ்வொரு வருடமும்


தீபாவளிக்கும்தான் இவ்வாறு காசு கரியாகிக் கொண்டிருக்கிறது..


 

Monday, November 1, 2010

பணக்காரனுக்கு வக்காலத்து வாங்கும் பதிவல்ல!!


எனது சென்ற (பெண்கள் படிக்ககூடாத (பெண்களை பற்றிய) ஒரு பதிவு! பதிவில் சென்னையில் சாலையோரத்தில் வசிப்போரை விமர்சித்ததில் - சற்று அதிகமான கண்டனங்களை பெற நேர்ந்தது.

எனவே இதில் எனது நிலைப்பாட்டை விளக்க விரும்புகிறேன்.

பெரும்பாலான பதிவர்கள், பணக்காரர்கள் என்றால் அவர்கள் மிகவும் கொடூரமானவர்கள் என்றும், ஏழைகள் என்றால் அவர்கள் மிகவும் நல்லவர்கள் என்றும் - அது தவறு என்று தெரிந்தும் - அவ்வாறு பதிவிடுவதே நடுநிலைமை என்ற விதத்திலேயே பதிவுகளையும், மற்றும் பின்னூட்டங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

பணக்காரன் அதிக லாபமீட்டினால் "அவன் ஏழைகளின் வயிற்றிலடித்து சம்பாதிக்கிறான்" என்றும், ஏழையாய் இருப்பவன் பொறுக்கித்தனம் செய்து திருடினாலோ, கொள்ளை யடித்தாலோ, வழிப்பறி செய்தாலோ, வயிற்றுப் பிழைப்புக் காகத்தான்  செய்கிறான் அவனுக்கொரு வேலை இருந்தால் இப்படியெல்லாம் செய்வானா? என்று வியாக்கினம் செய்வதுதான் - நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொள்வோரின் விதண்டாவாதமாக இருக்கிறது.

இது எம் ஜி ஆர் கால சினிமாக்களில் இருந்து தொன்று தொட்டு வரும் ஒருவித திணிப்புதான் என்று சொல்லவேண்டும்..
காரணம் சாலையோர மக்கள்தான் கள்ள வோட்டு போடவும் அடாவடித்தனம் செய்யவும் உபயோகப் படுத்தபடுகிறான்.


சமீபத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற ஒரு தமிழ் திரைப்படம் (அங்காடித் தெரு) இதைத்தான் பிரதிபலித்தது.


அதிகார வர்கத்தில் உள்ளவன் இரக்கமே அற்ற மிருகமாகவும், ஏழை என்பவன் எந்த பாவமும் அறியாத புண்ணிய ஆத்மா எனபது போலவும் சித்தரிக்கப்பட்ட அந்த படம்தான் பதிவர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது..
ஆனால் அதே படத்தில், இயக்குனர் அவரையும் அறியாமல்  ஒரு காட்சி வைத்திருந்தார்..

ஒரு பையனை அவன் தந்தை கண்டிப்பார்...ஒழுங்காக படிக்கவில்லை, பரீட்சையில் சரியான மார்க் வாங்கவில்லை என்று..
அதற்க்கு அந்த பையன இன்னொருவனை அடிப்பான்..எதற்கு என்று கேட்பதற்கு, " இந்த நாய் ஒழுங்கா எழுதி இருந்தால் (தந்தையைக் காட்டி) இந்த நாய் என்னை இப்படி அடித்திருக்குமா?" என்று தந்தை மீது அந்த ஏழை எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறான்  என்பதை காட்டுவான்..


தெருவில் வசிப்போர்தான் இந்த மாதிரி எந்த ஒரு மரியாதை அன்பு பாசம் எனபது இல்லாமல் பெற்றோரை மிகவும் கேவலப்படுத்துவார்கள்..

இதுபோன்ற காட்சிகளை வைத்து மக்களை வழிகெடுக்கும் சினிமாக்கள்தான் அதிகம்..
விவேக், வடிவேலு,கருணாஸ், கஞ்சா கருப்பு போன்ற காமெடி நடிகர்களும் இது போன்ற பெற்றோரை கேவலப்படுத்துவதில் முன்னோடிகளாக இருக்கின்றனர்..
இந்த கேவலமான சினிமாக்களுக்கு வெறி பிடித்த ரசிகர்களாக இருப்பவர்கள் சாலையோரவாசிகளே..

ரஜினிக்கும், அஜித்துக்கும், விஜய்க்கும் சாலைகளில் ரசிகர் மன்றம், தியேட்டர்களில்  ஆளுயர கட் அவுட்டுகளும் அவர்களுக்க் பாலாபிஷேகம், பீராபிஷேகம் பண்ணுவதும் இவர்கள்தான்..ஏழைகள் பாட்டாளிகள் என்போருக்கு, சாராயத்திற்கும், நடிகர்களுக்கு கட் அவுட், பீராபிஷேகம் பண்ணுவதற்கும்  ரஜினி பட டிக்கெட்டை ருபாய் ஆயிரத்திற்கு மேலும் வாங்குவதற்கு பணம் எங்கே இருந்து வருகிறது? 


ஒரு பணக்காரன் ஒரு தொழில் செய்கிறான்..அவன் மற்றவர்கள் வாழவேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு தொழிலை செய்வதில்லை..தானும் சம்பாதிக்கவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு முதலாளியின் நோக்கம்..
அவனிடம் முதலில் காலை கையைப்  பிடித்து வேலைவாங்குவது..பிறகு தனது நிலையை உறுதிப் படுத்திக்கொண்டு, சம்பள உயர்வு, வேலை நிறுத்தம் என்று யூனியன் சேர்த்துக்கொண்டு அந்த முதலாளியை - தனக்கு தனது கஷ்டத்திற்கு வேலைதந்து உதவிய முதலாளியை போண்டியாக்குவது..இதுதான் இந்த ஏழைகளின் நியாயம்..

ஏழையாய் இருப்பவன் நல்லவனாக இல்லையா என்று கேட்கலாம்..நான் ஏழைகளை சொல்லவில்லை..சாலையில் வசித்துக் கொண்டு, தினமும் குடித்துக்கொண்டு, சாலையிலேயே கழிந்து கொண்டு, மனைவி குழந்தைகளை மிருகங்களை விட கேவலமாக அடித்துக் கொண்டு, (அதற்க்கு அந்த மனைவியும், ஏன் குழந்தைகள் கூட சளைத்தவை அல்ல ) ரோட்டில் போகும் மற்றவர்களை பற்றி சிறிதும் கவலைப் படாமல் கூத்தடித்துக் கொண்டு, பான் பராக் துப்பி கொண்டு, இப்படி எல்லா அசிங்கங்களையும் செய்துகொண்டு இருக்கும் இவர்களை பற்றிதான் சொல்ல வருகிறேன்.

ஒவ்வொருத்தருக்கும் அந்தரங்கம் என்று ஒன்று உண்டு..அது எவ்வளவு அசிங்கமாக கேவலமானதாக இருந்தாலும், அது வெளியில் தெரியாதவரை அசிங்கமில்லை...

ஆனால் இந்த சாலையில் வசிப்போர்தான், மலம் கழிப்பது முதல் மற்றவர்களுடன் படுப்பதுவரை, கூச்சமின்றியும் வெட்கமின்றியும், சாலையில் செல்வோரைப் பற்றிய எந்த ஒரு கவலையும் இன்றி பகிங்கரமாக இந்த அசிங்கங்களை செய்கின்றனர்.
பெற்ற குழந்தைகளுக்கு அம்மா அப்பா என்று சொல்லிகொடுக்கிரானோ இல்லையோ "ங்கோத்த ..ங்கொம்மா " என்று கண்டிப்பாக சொல்லிகொடுத்து " அதுகளையும்" தங்களைப்போல் பொறுக்கியாக வளர்வதில் மகிழ்கிறான்..

இவர்கள் வீடுகளில்லாதோர் இல்லை..இவர்களுக்கென்று வீடுகள் இருக்கும்..அரசு இலவசமாகக் கொடுத்ததோ, அல்லது இவர்களது சொந்த வீடாகவோ இருக்கலாம்..அதை வாடகைக்கு விட்டு விட்டு, இங்கே சாலைகளில் குடித்துக்  கொண்டு பொறுக்கித்தனம் செய்து கொண்டிருப்பான். இது எனது கற்பனை அல்ல...அவர்களிடமே நான் கேட்டு அறிந்தது..


அப்படியே சாலையில் வசிப்போருக்கென்று கழிவறைகளும் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது...இதையெல்லாம் உபயோகப்படுத்தாமல், அவர்களும் சாலையோரங்களை அசிங்கப் படுத்தி, தமது குழந்தைகளையும் அதே போல பழக்கப்படுத்தி ..வருங்கால இந்தியாவை இன்னும் பின்னோக்கி செல்ல  வைக்கிறான்..



சாலையில் நீங்கள் நடந்து கொண்டிருப்பீர்கள்...அவன் நடுரோட்டில் கற்களை இருபுறமும் அடுக்கி வைத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பான்..நீங்கள் ஒரு மனிதனாகவே அவனுக்கு புலப்பட மாட்டீர்கள்..உங்கள் தலையில் பந்து பட்டு, மண்டை உடைந்தாலும் அது உங்களது  தவறுபோல உங்களையே பாய்ந்து பிராண்டுபவந்தான் சாலையில் வசிக்கும்  பொறுக்கிகள்..


வடசென்னை பகுதிகளில் இவர்களை "தரைப்படை" என்றே அடைமொழி வைத்து அழைக்கிறார்கள்..

சாலையில் நாம் நிம்மதியாக நடந்து செல்ல முடியாது..ரிக்ஷா ஓட்டுபவன் வேண்டுமென்றே இடிப்பது போல வந்து நிற்பான்.. அப்படியே இடித்துவிட்டு நமக்கு முன்னே நம்மையே அசிங்கமாக திட்டி ஏதோ நாம்தான் தவறு செய்தமாதிரி ஒரு சூழலை எற்படுத்திவிடுவான்.

ஒருவன் செல்போனில் பேசிக்கொண்டு சென்றால் இவனுக்கு எரியும்..ஏதோ இவன் காசில் நாம் செல்போன்  வாங்கி பேசுவதுபோல நம்ம எதிரி போல  பார்த்து.."தோ செல்போனே பேசிக்கினு போறான் பாரு" என்று நம்மையே நக்கலடிப்பான்..

மீன்பாடி வண்டி என்று ஒரு வண்டி..வடசென்னைப் பகுதிகளில் முக்கால் வாசி டிராபிக் குளறுபடிகளுக்கு இந்த வண்டிகளே காரணம்..இதை ரொம்பவும் திமிர்த்தனமாக ஓட்டுவது இந்த தரைப்படைகளே...அதுவும்  7- 8  வயதுகூட நிரம்பாத சிறுவர்களும் சிறுமிகளும்..

ஒருவன் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு இடம் வாங்குவான்..அந்த பழைய இடத்தை இடித்துவிட்டு புது இடம் கட்டுவதற்கு இடித்து வைத்து இருப்பான்..அதற்குள் இவைகள் அதனை ஆக்கிரமித்துவிட்டு - காலி காலிசெய்வதற்கு  ஐம்பதாயிரம் ரூபாய் ஒருலட்ச ரூபாய் என்று அடாவடி செய்து பிடுங்கிக்கொண்டுதான் காலி செய்வார்கள்..இவர்களுக்கு பொறுக்கிகளும் உடந்தை..

தெருவோரங்களில் உள்ள கோவில்களுக்கு திருவிழா என்ற பெயரில் அடாவடியாக பணம் வசூலித்து குடித்து கும்மாளமிடுவது
அந்த திருவிழா என்ற பெயரில் ஒரு தெருவையே ஆக்ரமித்து ஸ்பீக்கரில் ஆபாசப் பாடல்களை அலறவிட்டு ஆபாச நடனமாடுவது..இதெல்லாம்தான் அவர்களது லைப் ஸ்டைல்.


அதுவும் தீபாவளி காலங்களில் நீங்கள் சாலையில் நடந்து செல்லும்போது, உங்களை ஒரு மனித ஜென்மமாகவே கருதாமல் உங்கள் காலுக்கடியிலேயே பட்டாசை வெடிக்கும்  மிருகங்கள்தான் அந்த பொறுக்கிகள்..இந்த அனுபவத்தை பெறாத சென்னை வாசி ஒருவராவது உண்டா?

நான் நேரிடையாக சந்திக்க நேர்ந்த அனுபவங்களில் மிகவும் கேவலமான ஒன்று..

எப்போதும்போல சாலையில் அவர்களின் கூச்சல்...சண்டை போன்று இருக்கும்..கிட்டே  சென்று "ஏய் யே..!" என்று கத்திக் கொண்டே இருப்பார்கள்..ஆனால் எல்லாம் வெத்துவேட்டு..மோதிக்கொள்ளமாட்டார்கள்..
ஆனால் இது ஒரு பெண் ஆவேசமாக..- அவர்களின் பாரம்பரிய கேவலமான தமிழ் சொற்களால் ஒருவனை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்..
அவள் திட்டி கொண்டிருந்தது தனது சகோதரனை..
இரவில் படுக்கும்போது தனது சகோதரியிடமே  தவறாக  நடந்திருக்கிறான்.."அது"வும் இரவெல்லாம் சும்மா இருந்து ஒத்துழைத்துவிட்டு  காலையில் தன் தாயிடம் இது பற்றி கத்திக்கொண்டிருந்தாள்..
இதற்க்கு அந்த தாய் சொன்ன பதில்தான் மிகவும்கேவலம்..
"அய்யே...ஊராமூட்டனா உம்மேல படுத்தான்...கூடப் பொறந்தவந்தானே..சும்மா கெட..!"
இதற்க்கு சிரிப்பதா..அழுவதா? 


பக்கத்தில் யார் படுத்தாலும் அவனோ அவளோ அன்றிரவு அவன்தான் அல்லது அவள்தான் மனைவி அல்லது கணவன்..




அவன் உழைக்கிறான் என்று சொல்கிறார்கள்..உழைக்கிறான்தான் ..ஆனால் அவன் கேட்கும்  கூலி எவ்வளவு அடாவடி என்று உங்களில் யாருக்காவது தெரியாமல்  இருக்குமா? 
ஆட்டோவில் மீட்டருக்குமேல் காசு கேட்பவன்  பணக்காரன் அல்ல..
ரோட்டில் பிக் பாகெட் அடிப்பவன் பணக்காரன் அல்ல
த்தியைக் காட்டி வழிப்பறி செய்பவன் பணக்காரன் அல்ல..
வீடுகளில் கொள்ளை அடிப்பவன் பணக்காரன் அல்ல
சாராயக்கடைகளில்  கூட்டம் கூட்டமாய் சாராயம் வாங்கி ரோட்டிலேயே வைத்துக் குடித்துக்கொண்டு நிர்வாணமாய் சாலையில் படுத்து உருளுபவன்  பணக்காரன் அல்ல..
பெற்ற குழந்தையையே நாயை அடிப்பதுமாதிரி அடித்து தூக்கி எறிபவன் பணக்காரன் அல்ல
கட்டிய (கட்டியவளோ ஒட்டிக்கொண்டவளோ) மனைவியுடன் நடுரோட்டில் சரிக்கு சரி யை சண்டை வளர்த்து ஊரைக்கூட்டி அசிங்கம் செய்பவன் பணக்காரன் அல்ல..
கூலிக்கு காசு வாங்கிக் கொண்டு, தனக்கு சம்மந்தம் இல்லாதவனை கொல்லும் இரக்கமற்ற மிருகங்களான  கூலிப்படை பணக்காரன் அல்ல..
அப்படியே அவனவன் பணக்காரனாக இருந்தால் கூட அவன் இந்த மாதிரி ஈனத்தொழில் செய்துதான் பணக்காரனாக இருப்பான்..


சாலையில் வாசிப்பவனில் நல்லவன் இருப்பான்..ஆனால் யாரையும் இவன் ஏழை என்று அனுதாபப் படவோ, அவகளுக்காகவோ இரக்கபடவோ முடியாத வகையில்தான் அவர்களது அனைத்து நடவடிக்கைகளும் அமைந்திருப்பதை அனுபவத்தால் உணர்ந்தவன் நான்..


இந்த பதிவுக்கு நிறைய கண்டனங்கள் வரும்...வெறும் புத்தகங்களை படித்துவிட்டும், தமிழ் படங்களை பார்த்துவிட்டும், பணம் படைத்தவன் எல்லாம் கொடுமைக்காரர்கள் எனவும், சாலையில் வசிப்பவன் கஞ்சிக்கில்லாதவன் என்றும் அப்பாவி, நியாயமானவன் என்றும்  வியாக்கியானம் பேசுவோர் இதற்க்கு பதில் எழுதுவார்கள்.. தினமும் சாப்பிட என்று காசு வாங்கி சாராயக்கடைகளில் நிற்பவர்களையும் (ஆண் பெண் என்று பேதமில்லாமல்) எனக்கு தெரியும்..

எனது அனுபவத்தில் இன்னும் இவர்களைப் பற்றிய அசிங்கங்கள் ஏராளமாக உண்டு...பிளாக்கில் சொல்லக்கூடியதே இவ்வளவுதான்..நானும் " சாரு " போல தரம் தாழ்ந்து போக விரும்பவில்லை..
அவர்கள் நல்லது செய்கிறார்கள் என்று ஏதாவது ஒன்றை.. இந்த வியாக்கியானவாதிகள் சொல்லட்டும்  பார்க்கலாம்..
இது பணக்காரனுக்கு வக்காலத்து வாங்கும் பதிவல்ல...
சாலையில் வசித்துக்கொண்டு பொறுக்கித்தனம் செய்துகொண்டிருப்போரின்  குணநலன்களை சுட்டிக்காட்டும் பதிவுதான்..


பணக்காரர்களிலும் மேற்கண்ட குணமுள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..

ஆனால், பொதுமக்களுக்கு இடைஞ்சலாக, அன்றாடம் பெரும் தொல்லையாக இருப்பவர்கள் சாலையோர பொறுக்கிகளே..

ஒரு ஆச்சாரியம்..:
நாம் நமது வீட்டில் குடியிருப்போம். நமது வீட்டுக்கு கீழே சாலையோரவாசிகள் குடி இருப்பார்கள்..நமக்கு ரேஷன் கார்டுக்கும், ஓட்டர் ஐடென்டிடி கார்டுக்கும் அல்லாடிக் கொண்டிருப்போம்..அதிகாரிகள் ஏகப்பட்ட என்கொயரிகள் கேட்பார்கள்..ஆனால் இந்த சாலைவாசிகளுக்கு மட்டும் நமது முகவரியில் ரேஷன் கார்ட் மற்றும் ஓட்டர் ஐடென்டிடி கார்ட் இருக்கும்..இது எப்படி என்று இதுவரையில் எனக்கு புலப்படவில்லை..