பொருளாதார வலிமை மிக்க நாடுகளில் ஒன்றான ஜப்பான் இன்றையதினம் மிகப்பெரும் பேரழிவை சந்தித்திருக்கிறது.
11 மார்ச் 2011 இன்று..டோக்கியோ துறைமுகத்தில் ஏற்ப்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தாலும் (ஏறக்குறைய 8.4 ரிக்டர் அளவு) 25 அடி உயரத்திற்கு ஏற்பட்ட சுனாமி பேரலைகளாலும் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
பெரிய பெரிய கட்டிடங்களும், பாலங்களும் இடிந்துள்ளன. நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பூகம்பத்தால் ஏற்பட்ட அதிர்வால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தீப்பிடித்து எரிகின்றன..
சுனாமி அலைகளால் சாலைகள் எங்கும் வெள்ளமாக காட்சியளிக்கிறது..
கார்களும், பஸ்களும், கப்பல்கள், போட்கள் என்று பாரபட்சமின்றி வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுவிட்டன..
செண்டாய் விமான நிலையம் முழுதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது..
டோக்கியோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது..
ஜப்பான் முழுவதும் மின் இணைப்பு, மற்றும் தொலை தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டது.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மெட்ரோ ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு போக்குவரத்து செயலிழந்து விட்டது..
தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை அறியமுடியவில்லை.
எனினும் பெரிய அளவில் உயிரிழப்பு எற்பற்றிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது..
ஜப்பானில் மீட்பு பணியில் பங்கேற்க அந்நாட்டு மக்களை வேண்டியுள்ளார் அந்நாட்டு பிரதமர்..
900 மீட்ட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன..
உடனடியாக அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது
இதற்க்கு முன் டோக்கியோ நகரில் 1923 ம் ஆண்டு ஏற்ப்பட்ட பூகம்பம்தான் மிகப்பெரிய பூகம்பமாக இருந்தது..அந்த பூகம்பத்தில் ஏறக்குறைய 140000. க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது..
அதுபோல் இல்லாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் நம்மால் முடிந்த ஆதரவையும் வழங்க முயற்சிப்போம்..































