Pages

Saturday, March 17, 2012

பிஞ்சுக்களை கொன்ற மாபாதகர்கள்...- இவர்களுக்கு என்ன தண்டனை?



வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் வெறிபிடித்த அலைந்த பாசிச விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள் பல.

சர்வதேச சமூகமும்இ மேகத்திய ஊடகங்களும் விடுதலைப் புலிகளின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இந்த அக்கிரமங்களை இதுவரை கண்டுகொள்வில்லை. முஸ்லிம் சமூகமும் புலிகள் மேற்கொண்ட அந்த அராஜக நிகழ்வுகளை உலகிற்கு உரியவகையில் எடுத்துக்கூற தவறியுள்ளது.

இந்நிலையில்தான் இன்று புதன்கிழமை பிரிட்டனில் இருந்து செயற்படும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கை அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்ததாககூறி சில ஆவணப்படங்களை காண்பிக்கவுள்ளது.

முஸ்லிம்களாகிய நாமும் சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களுக்கு பயங்கரவாதப் புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களையும்இ போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தும் செயற்பாட்டில் குதிக்கவேண்டும். புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களை உங்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட ஏனைய இணையத் தளங்களிலும் பதிவுசெய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்..!!


இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.

'யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்'
இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.

ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14இ844.

யாழ்ப்பாணம்இ முல்லைத்தீவுஇ வவுனியாஇ மன்னார்இ கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள்இ முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள்.

முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சிஇ மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்.

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்.


இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர்இ பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள்இ 36 பேர் பெண்கள்இ 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது.

1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறைஇ முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறைஇ அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர்.

இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.

வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம்இ அநுராதபுரம்இ குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது.




நன்றி : யாழ் முஸ்லிம்

Tuesday, March 13, 2012

மின்வெட்டை எப்படி சமாளிக்கலாம்?

கடந்த கருணாநிதி ஆட்சிக்காலத்தில், மின்வெட்டு இருந்த போது விமர்சித்து, அதன் காரணமாகவே கருணாநிதி ஆட்சியை இழந்தார் என்று கருதியவர்கள் எல்லாம் இன்று வாய் மூடி மௌனியாக - இருக்கின்ற காரணம் என்ன? சென்ற ஆட்சிக்காலத்தை விட, இம்முறை மின் வெட்டு மேலும் அதிகரித்திருக்கிறது...


சென்னையில் தினமும் இரண்டு மணி நேரங்கள் மின்வெட்டு வைத்திருப்பதால் மின்சாரம் சேமிக்கப்படுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை..காரணம், இரண்டு மணி நேரம் கழித்து மின்சாரரம் வந்தவுடன், காத்திருந்து, ஏசி, பிரிட்ஜ், வாஷின் மெசின் , மின் விசிறி என்று அனைத்தையும் அனைவரும் ஒரு சேர உபயோகிப்பதால், அந்த இரண்டு மணிநேரம் சேமித்த மின்சாரம் அதைவிட அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது என்பதே உண்மை..

இதை தவிர்க்க, மின்சாரத்திற்கு ரேஷன் முறையை கொண்டு வரலாம்..
அதாவது, ஒரு வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு யூனிட் மின்சாரம் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்றும் அதற்குமேல் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அறிவித்தால் மக்களிடையே விழிப்புணர்வும், அதே போன்று மின்சார சிக்கனமும் ஏற்படலாம்..

கூடங்குளம் அணு மின் நிலையத்தை ஒரு சில பயங்கரவாதிகள் செயல்படுத்தப்படாமல் செய்து வருவதால் அவர்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவேண்டும்..

இருந்தாலும், நமது தமிழகத்திற்கு  தேவையான மின்சாரத்தின் அளவு 11  ஆயிரம் மெகாவாட் ஆகும்..கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்பட ஆரம்பித்தாலும், அதன் மூலம் உபரியாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கும் என்கிறார்கள்..இப்போது தமிழகத்தில் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது..எனவே கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படும்போது நமக்கு மேலும் இரண்டாயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது..வரும் காலங்களில் மின்சாரத்தேவை மேலும் அதிகரிக்கும்..மக்கள் தொகை பெருக்கத்தாலும், தொழில்சாலைகள் பெருக்கத்தாலும், புதிய புதிய மின் சாதனங்களாலும், இன்னும் மின்சாரம் அதிகமாக தேவைப்படும்..
சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு திட்டம் தீட்டி இருக்கிறது..அதன் மூலம் ஓரளவு மின்சார தேவைகள் நிறைவேறினாலும், வருங்காலத்தேவைகளை மனதில் கொண்டு..மின்சாரம் ரேஷன் முறையில் விநியோகிப்பது உபயோகமாக இருக்கும் என தோன்றுகிறது...

Monday, March 12, 2012

படையப்பா - விமர்சனம்

ரஜினிகாந்தின் கடைசி ஒரிஜினல் வெற்றிப்படம் என்றால் அது படையப்பாவை சொல்லலாம்..

அந்த படம் ரஜினிக்காக ஓடியதில்லை என்று ரஜினி - மற்றும் அதை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் உட்பட அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், வேறு வழியின்றி எல்லா ஜால்ராக்களும் ரஜினியையே புகழ்ந்து வருகின்றன..
படையப்பா முழுக்க முழுக்க ஓடியதன் காரணம், ரம்யா கிருஷ்ணன் - அப்போது தமிழக மக்களின் பெரும் எதிர்ப்பை சம்பாதித்திருந்த ஜெயலலிதாவை இமிட்டேட் செய்து நடித்திருந்ததே காரணம்..
இதில் ரஜினி, சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா, அப்பாஸ், ஸ்ரீதேவி போன்றோர் நடித்திருந்தனர்..

இனி விமர்சனத்தை பார்ப்போம்...
படையப்பா படத்தின் காமெடி ஸீன் 1

படத்தின் முதல்காட்சியில் பாம்பு ஒன்றை கண்டு ஊர் மக்கள் பயந்து ஓடுகின்றனர்..வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு வந்த - நீலாம்பரி என்ற கோடீஸ்வரப் பெண் அந்த பாம்பை அடித்துக்கொல்வதர்க்கு ஆட்களை அனுப்புகிறாள்..அது புற்றுக்குள் சென்று விடுகிறது..அந்த புற்றை இடிக்க சொல்லும்போது - கதாநாயகனின் அறிமுகம்..அவர் அந்த புற்றுக்குள் கையை விட்டு (?) பாம்பை பிடித்து முத்தமிட்டு விடுகிறார்..

இதைக்கண்டு வியந்த - நீலாம்பரி அவனது பெயரை கேட்கிறாள்..பெயரைக்கேட்டால் ஒழுங்காக பெயரை சொல்லவேண்டியதுதானே...

"சிங்கத்தை புடிச்சு சொவுத்துல ஏறு..சொவத்துல ஏறி வானத்துல ஏறுன்னு " (சிங்க நடை போட்டு சிகரத்துல ஏறணுமாம்..அப்புறம் வானத்துல ஏறணுமாம்).... ன்னு பாட்ட  பாடிக்கிட்டு ஏதேதோ உளறிக்கொண்டு போகிறான் கதாநாயகன்..

அப்புறம் ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட நாலைந்துபேர் அந்த இளைஞனின் (?) நண்பர்கள் என்ற பெயரில் காமடி என்ற பெயரிலும் நம்மை  போட்டு சாகடிக்கிறார்கள்..அது போக அதில் வருவோர் - கல்யானமாகாதோர் என்று காட்டுவது கொடுமையிலும் கொடுமை..
                                                      படையப்பா படத்தின் காமெடி ஸீன் 2

அப்புறம் - நீலாம்பரி வீட்டு வேலைக்காரியும், நீலாம்பரியும் - படையப்பா என்ற கதாநாயகனை போட்டி போட்டு காதலிக்கிறார்கள்..இதற்கிடேயே - ஒரு கட்டத்தில் படையப்பா - நீலாம்பரியின் முறைப்பையன் எனபது தெரியவர அவர் வீட்டுக்கு வரவழைக்கிறார்கள்..அரசியல்வாதியான நீலாம்பரியின் அண்ணன் முன்னாடியே - நீலாமபரி - படையப்பாவை பயங்கரமாக ஜொள்ளு விடுகிறாள்..இதை அறிந்த அண்ணனும் -அதற்க்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒதுன்கிறான்..நமக்கே வெட்கமாக இருக்கிறது..

படையப்பாவின் தந்தையின் (சிவாஜி)  - சித்தியின் மகன் மணிவண்ணன்..சிவாஜியின்  சொத்தை பங்கு கேட்க, மொத்த சொத்தையும் அவரிடமே கொடுத்துவிட்டு, சிவாஜி அந்த ஏக்கத்திலே மரணமடைகிறார்..கவனிக்க சிவாஜினியின் மரணத்திரிக்கு காரணம் அவரது தம்பி மணிவண்ணன்தான்..
இதானால் ரஜினியும் அவரது தாய் மற்றும் தங்கையுடன் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு தந்தையின் சொத்தில் குடிசைகட்டி குடியேறுகிறார்கள்..
                                                      படையப்பா படத்தின் காமெடி ஸீன் 3

அங்கே கிரானைட் கிடைக்கிறது..அதை அறிந்த மணிவண்ணன் அந்த இடத்தையும் ரஜினியிடம் எழுதி கேட்கிறார்..மறுக்கும் ரஜினியை கொல்ல அடியாட்களை ஏவுகிறார்..இதையும் கவனிக்கவும்....அடியாட்களை ஏவினால் கதானாயகனுக்குதான் பல கலைகள் தெரியுமே..அவர்களை அடித்து நொறுக்கிபோட்டு வெளியேறிவிடுகிறார்..

அதன்பிறகு தனது இடத்தில் கிரானைட் தோண்டி எடுத்து உலகிலேயே பெரும் செல்வந்தனாகவும், தாதாவாகவும் மாறுகிறார்..அதுவும் ஒரே பாட்டின் மூலம்..இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்...ரஜினி தான் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக தனது நிலத்தில் கிரானைட் தோண்டி எடுத்து விற்று பணக்காரனாகிறார்..
இதற்க்கு ஜால்றாவுக்கேன்றே பிறந்த வைரமுத்து எழுதுவது - " இன்னோர் மனிதனைக்கொன்று புசிப்பவன் அரக்கனடா...யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்..ஊருக்கே வாழ்ந்து மறைபவன் புனிதன்..நேற்றுவரைக்கும் நீ மனிதனப்பா ..இன்று முதல் நீ  புனிதனப்பா.." என்று ஒரு பாட்டை எழுதி இருக்கிறார்..
இதில் என்ன புனிதத்தை கண்டார்கள்  என்று தெரியவில்லை.. கேவலமாக இருக்கிறது..
இவர் நிலத்தை தோண்டுவதை பார்க்க ஊரே கூடி வந்து நிற்கிறது..வேடிக்கையாக இருக்கிறது..

இதற்கிடையே நீலாம்பரியை கல்யாணம் செய்வதாக கூறி  பெண் பார்க்க வரும் ரஜினியின் தாய், எல்லார் முன்னிலையிலும் அவளை அவமானப்படுத்தி- வேலைக்காரியை கூட்டிக்கொண்டு செல்கிறாள்..இதன் காரணமாக இரு குடும்பத்திற்கும் பகமை வருகிறது..
                                            படையப்பா படத்தின் உச்சகட்ட காமெடி ஸீன் 4

ரஜினியின் தந்தை மரணத்திற்கும் காரணமான , மற்றும் அவரை ஆளை வைத்து கொல்ல முயற்சித்த மணிவண்ணன் பிறகு ரஜினியிடம் கூட சேர்ந்து ஜால்ரா போடுவது  அவரை ரஜினி கூடவே வைத்திருப்பதும் - திரைக்கதையின் ஓட்டை..
இதன் பிறகு ரஜினியின் மகள் -நீலாம்பரியின் அண்ணன் மகனை லவ் பண்ணுவதும் அதன் காரணமாக ரஜினியும் ரம்யா கிரிஷ்ணனும் மீண்டும் சந்திப்பதும் - ஆஸ் யூஷுவல் சினிமா..இதில் எந்த சிறப்பும் இல்லை..
                                                       செயற்கையாக திணிக்கப்பட்ட காட்சி.

ரஜினி அந்த படத்தில் ஒரு பணக்காரரின் மகன், தனது நிலத்தில் கிரானைட் எடுத்து பணக்காரராகிறார்..அவ்வளவுதான்..
ஒரு காட்சியில் மணிவண்ணன் வீட்டை கடனுக்காக காலி செய்யும் மன்சூர் அலிகான், ரஜினியின் எச்சரிக்கையை தொடர்ந்து, " ஐயோ..நானெல்லாம் லோக்கலு,அவரு இண்டர்நஷனல்" என்று அலறி அடித்து ஓடும் அளவுக்கு அந்த கதையில் ரஜினி ஒன்றும் கிழித்து விடவில்லை.. - அந்த படம் வெளிவரும் முன்பு - மன்சூர் அலிகான் ரஜினியை விமர்சித்திருந்த காரணத்திகாக - சம்மந்தமே இல்லாமால் திணிக்கப்பட்ட ஒரு காட்சி அது..


பெற்ற பெண்ணை பலபேர் முன்னிலையில் அங்க அவயங்களை ஆபாசமாக காட்டும் பாரத நாட்டியத்தை  ஆடவிட்டு தாத்தா பாட்டி, தாய், தந்தை, சகோதரன் என்று குடும்பமே ரசிக்கும் "மின்சாரக்கண்ணா" என்ற பாடல் எந்த குடும்பத்தில் நடக்கிறது என்று தெரியவில்லை....


ஒருவன் தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக இருபது வருடங்களுக்கு மேலாக தனியறையில் உகலத்தொடர்பு இல்லாமல் ஒரு பெண் ஒரு அறைக்குக்குள் அடைப்பட்டு கிடந்தாள் எனபது உலகமகாப்புருடா..அப்படி ஒருத்தி  இருந்தால் அவள் தோற்றமே மாறி, மனநோய் பிடித்துவளாகத்தான் வெளியே வர முடியும்..
                                               20 வருடங்கள் தனிமை சிறையில் அடைபட்டு கிடந்த பெண் 

அதுவும் -தன் அத்தையை  முதன் முதலாக பார்க்கும் ஒருவன்  "அத்தே நீங்க சூப்பர் பிகர் "என்று கம்மென்ட் அடிப்பது படு ஆபாசம்..

ஒரு கட்டத்தில் " ஓஹோ ஹோ ஹோ..கிக்கு ஏறுதே" என்று குடும்பமே குடித்துவிட்டு கூத்தடிக்கும் காட்சியும்  - வயதானவர்கள் ஆடிப்பாடும் வேடிக்கையும் உண்டு..

இதையும் ரஜினியின் முக்கிய படங்களாக இன்றுவரை சொல்வதும் ஆபாச பத்திரிகைகளின் வியாபார தந்திரம்தான்..

Friday, March 9, 2012

மூன்று முகம் - விமர்சனம்...

எவ்வளவு நாளானாலும், திரைப்பட விமர்சனங்களுக்கு பதிவுலகில் கிடைக்கும் வரவேற்பே தனி...
அதுவும் பழைய படங்களுக்கு இன்று விமர்சனம் எழுதினால் ?
பழமையான நினைவுகள் என்றும் பசுமையாக இருக்கும்போது அதை மீண்டும் அசை போடுவது ஒரு அலாதியான சுகம்தான்...
மூன்றுமுகம் என்ற ரஜினி நடித்த திரைப்படத்தை பலதடவைகள் மீண்டும் மீண்டும் பார்த்தவன் நான்...அப்போது பள்ளி பருவம்..ஸ்கூலுக்கு கட் அடித்துவிட்டு அந்த படத்தை பலமுறை பார்த்து இருக்கிறேன்..
அந்த படத்தில் வரும் அலக்ஸ் பாண்டியன் என்ற கதா பாத்திரம் மிகவும் பிரபலம்..
ஆனால் இப்போது நினைத்தால் அந்த படத்தில் எவ்வளவு பெரிய திரைக்கதை ஓட்டைகள் என்று நினைக்கும்போது, ஆச்சரியமாக உள்ளது..நாம்தான் சிறுவயது பருவமாக இருந்தாலும் அப்போதும் இதே ஆபாச விகடன் குமுதம் போன்ற பலான புத்தகங்கள்
வெளியாகிக்கொண்டுதாநிருந்தன...அவர்களுக்குமா அந்த அறிவு இல்லை? அந்த படத்தை இன்று வரை அஹா ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருக்கின்றன..
இனி மூன்று முகம் விமர்சனம்...
அமேரிக்கா சென்று வரும் தொழிலதிபர் ரஜினி, பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒரு சாமியாராக மாறி வருகிறார்..அவரை நவீன காலத்து இளைஞனாக மாற்ற, ஒரு பெண் ஒருத்தியை பெற்றோர்கள் ஏற்பாடு (?) செய்கின்றனர்...அது என்ன ஏற்ப்பாடு தெரியுமா? கேவலம்..அவனுக்கு செக்ஸ் ஆசையை தூண்டி குடும்பஸ்தனாக மாற்றுவதுதான்..இங்கேயே திரைக்கதை சறுக்கி விடுகிறது...
அந்த சாமியாரை இன்னொரு செக்ஸ் சாமியாரிடம் கொண்டு சேர்த்து அவரை தன்னை காதலிக்க வைக்கும் பொறுப்போடு ராதிகாவின் பத்திரத்தின் வேலை முடிந்து விடுகிறது..
பிறகு ரஜினிக்கு பிறந்தநாள் பார்டி ஒன்றில் - அவருக்கு தன தந்தையை கொன்றவர்கள் யார் என்று தெரிந்து, அந்த பார்ட்டிக்கு வந்த ஒரு அடியாள் ஒருவனை பிடித்து "நான்தாண்டா அலெக்ஸ் பாண்டியான் - திரும்பவும் பிறந்து வந்துட்டேன்டா " என்று ஆவேசமாகிறார்..
பெற்றோரளுக்கு ஒரே ஆச்சரியம்..எப்படி இவனுக்கு தன தந்தை பற்றி தெரிய வந்தது என்று.. ஏனென்றால். ரஜினியின் தந்தை அலெக்ஸ் பாண்டியன் ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரி..அவரை ஒரு கள்ள கடத்த கும்பல் கொன்று விடுகிறது..அவர் மரணிக்கும் அதே நேரத்தில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த - அலெக்ஸ்பாண்டியனின் மனைவியும் இறந்து விடுகிறார்...இரட்டை குழந்தைகளில் ஒன்றை தேங்காய் சீனிவாசன் தத்தெடுத்து வளர்க்கிரர்ர்..இன்னொரு பிள்ளை அலெக்ஸ் பாண்டியனின் சகோதரியிடம் பொறுக்கியாக வளர்கிறது..

பெரும் பணக்காரனரான தேங்காய் சீனிவாசன் இந்த உண்மை வெளியே தெரியக்கூடாது என்று, அலெக்ஸ்பாண்டியனின் சகோதரிக்குமாதம் மாதம் பணம்  அனுப்பி வருகிறார்...சாமியார் தனமையிளிருந்து மாறி, தேங்காய் சீனிவாசனின் கம்பெனி நிர்வாக பொறுப்பை ஏற்கும் ரஜினிக்கு - இவர் மாதம் மாதம் பணம் அனுப்பவது சந்தேகத்தை தர, அங்கே சென்று - தான் தேங்காய் சீனிவாசனின் மகன் அல்ல, தன தங்கை நேர்மையான டி.எஸ்.பி. என்ற உண்மை அலெக்ஸ் பாண்டியன் எழுதிவைத்த டைரி மூலம்  தெரியவருகிறது..அதனால்தான் அந்த பார்டியில் அந்த அடியாளை - சங்கிலி முருகனை - மிரட்டுகிறார்...பயந்து போன சங்கிலி முருகன் - தன பாஸ் எகம்பரத்திடம் - செந்தாமரை - போய் அனைத்தையும் சொல்லுகிறார்..பிறகு வில்லத்தனமான வேலைகள்,,தன தந்தையை கொன்றவனை ரஜினி பலி வாங்குகிரார்ர்.சுபம்....

இதில் ஒரு மகா முட்டாள்தனமான விஷயம் என்னவென்றால்..அலெக்ஸ் பாண்டியன் - தான் ஏகாம்பரத்தால் கடப்பாரையால் குத்திக் கொல்லப்படுவது, தான் இறந்த பிறகு தனக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பது அதில் ஒன்றை தேங்காய் சீனிவாசன் தத்தெடுப்பது உட்பட - அனைத்தையும் டைரியில் எழுதி வைத்திருப்பதுதான்..ஒருவன் தான் கொல்லப்படும்போதும், செத்துப்போன பிறகுமா டைரி எழுதிக்கொண்டிருப்பான்?

இந்த படத்தைதான் ஆபாசப் பத்திரிக்கைகளும், ரஜினி ஜால்ராக்களும் ரஜினியின் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றுவரை போற்றிக்கொண்டிருக்கின்றன...ஹ்ம்ம் என்ன சொல்வது...?


Thursday, March 8, 2012

கோமாளியின் கோணல் புத்தி..



எப்போதும் கருணாநிதி சொன்னால் அதற்கு குதர்க்கமான விளக்கமும், பயங்கரவாதி மோடி, அத்வானி, மற்றும் ஜெயலலிதா போன்றோரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சாக்கு போக்கு சொல்லும் அரசியல் புரோக்கர் கோமாளி சோவின் இந்த வார கார்டூன் தான் இது...





கருணாநிதி : "முரசொலி மாறன் எழுதிய நூலில், " உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால், உடனே பிற பதிவிகளிலும் தங்கள் கூட்டத்தை கொண்டுவந்து நிரப்பி விடுவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.."


அன்பழகன் :  " அப்போ, நீங்கதான் பெரிய பிராமணர்! பலே! "


அதாவது - அனைத்து பதவிகளிலும் - நியமிக்கப்பட  தகுதி உடையவர்கள் பிரமாணர்கள்தான் என்பதை  - எப்படி சொல்கிறார் பாருங்கள்...

எல்லா பதவிகளையும் தனது குடும்பத்தினரை கொண்டுவந்ததால் கருணாநிதியும் பிராமணனாகி விட்டாராம்...

குதர்க்கவாதிக்கு குதர்க்கமாகத்தானே பதில் சொல்லணும்?



Tuesday, March 6, 2012

பாட்சா..விமர்சனம்

சமீபத்தில் ஒரு பதிவில்  அக்னிபாத் - காட்டு காட்டுனு காட்டுறாங்கோ! என்ற அக்னீபத் ஹிந்தி படத்தின் விமர்சனம் பார்த்தேன்..அதில் சஞ்சய் தத் பதினைந்து வருடங்களுக்கு முன்பு எந்த தோற்றத்தில் இருந்தாரோ அதே தோற்றத்தில்தான் பதினைந்து வருடங்களுக்கு பிறகும் இருக்கிறார் என்ற ரீதியில் பயங்கரமாக கலாய்த்து  இருந்தார்..


நமது பதிவர்களுக்கு மற்றவர்களை கலாய்க்கும் க்கும் அளவுக்கு உள்ள  தைரியம் ரஜினிகாந்த் என்றால் மட்டும் பம்முவது ஏன் என்று தெரியவில்லை..இது ஒரு அடிமைபுத்தி..
சரி இதை பார்த்த பின்புதான் உலகப்புகழ் (?) பெற்ற பாட்சா என்ற படத்தை விமர்சனம் செய்தால் என்ன என்று தோன்றியது..
பாட்சா ஆரம்பகாட்சியில் "நான் ஆட்டோ காரன் ஆட்டோ காரன் " என்ற பாட்டை பாடி ரஜினி காந்த் அறிமுகம் ஆகிறார்..அவ்வளவு பிரபலமாக அறிமுகம் ஆகும் ரஜினி - அந்த ஏரியாவில் மிக ச்சாதாறன ஆட்டோ காரனாகவும், பயந்தான்கொள்ளி யாகவும்  காட்டப்படுகிறார்..இன்னும் மிக இளைஞனாகவும்  இருப்பார்..
இந்த படம் பார்த்துவிட்டு ஆல்பர்ட் தியேட்டரில் இருந்து ஆட்டோ பிடித்து பாரிமுனை சென்றேன்..ஆட்டோக்காரன் அதிக தொகை கேட்டான்..நான் சொன்னேன் " பாட்சா படத்தில் ஆட்டோக்காரனை பற்றி ரொம்ப புகழ்ந்து சொல்றாங்களேப்பா " என்றேன்...
"சார் அவன் கோடிக் கணக்குல சம்பளம் வாங்கிட்டு நடிச்சுட்டு போறான் - எங்க பொழப்ப நாங்கதான் சார் பாக்கணும்" என்றார் ஆட்டோ டிரைவர்..சரிதான் அதற்க்கு பின் நான் ஏன்  பேசுறேன்..அவர் கட்டனத்தேயே கொடுத்துவிட்டேன்..

சரி கதைக்கு வருவோம்..

ஆட்டோக்காரனாக வரும் ரஜினிக்கு அப்போதே ஒரு முப்பதை தாண்டிய தோற்றம் இருக்கும்..

ப்ளாஷ் பேக்கில் பாட்சாவாக வரும்போது நாருபது வயதை மிஞ்சிய தோற்றம்....பயங்கர தாதாவாக போலிஸ்காரர்கள் எல்லாம் அஞ்சும் பயன்கரதாதாவாக வருவார்..

அவரது எதிரி ரகுவரனுக்கு ஐந்து அல்லது ஆறு வயதில் ஒரு மகள் இருப்பாள்..ஒரு கட்டத்தில் வில்லன் கூட்டத்தால் தாக்கப்படும் ரஜினி தான் இறந்து விட்டதாக நாடகமாடி தப்பி விடுவார்..ரகுவரனின் ஐந்து வயது மகளை இன்னொரு வில்லன் தூக்கிக் கொண்டு வந்து தன மகளாக சென்னையில் வளர்ப்பார்..
அந்த பெண்தான் பெரியவளாகி, நக்மா - ரஜினியை காதலிப்பாள்..
அப்போ நாற்பது வயதுக்கு மேற்பட்ட ரஜினி, சென்னை வந்த உடன் இருவது வயது இளைஞன் போல காட்டி - அதுவும் பதினைந்து வருடங்களுக்கு அப்புறம் அந்த பெண் காதலிக்கும் இளைஞனாக காட்டி இருக்கும் கோமாளித்தனத்தை எந்த மேதாவிகளும் கேட்கவும் இல்லை..கண்டுகொள்ளவும் இல்லை..காரணம் நடித்து இருப்பது சூப்பர் ஸ்டார்..அவர் படத்தை பார்க்கும்போது மூளையை கலட்டிவைத்து விட்டுதான் பார்க்கவேண்டும்..

ஒரு மனிதன்  நடுரோட்டில் நின்றுகொண்டு.."நான்  ஒருதடவை சொன்னா நூறுதடவை சொன்னமாதிரி" என்று கையை சொடுக்கிக்கொண்டு சொன்னால்..நாமெல்லாம் என்ன நினைப்போம்.."பாவம் ஏதோ லூசு போல இருக்கு"  ன்னுதான் சொல்லுவோம்..

இதை ரொம்ப சீரியசாக சொல்லும்போது நமக்கெல்லாம் சிரிப்பாகத்தான் வருகிறது...

இந்தப்படத்தை ஏதோ உலகத்திலேயே இல்லாத கதை போல சில ரஜினி ஜால்ராக்களும் ஆபாச  பத்திரிக்கைகளும் சிலாகித்துக்கொண்டிருக்கும் போது...

அமிதாப் பச்சன், கிமி கட்கர், கோவிந்தா, மற்றும் ரஜினி நடித்த "ஹம்" என்ற ஹிந்தி படத்தின் அப்பட்டமான காப்பிதான் என்பதை இந்த முட்டாள்கள் அறியவில்லையா..அல்லது படம் பார்ப்பவனை எல்லாம் கேனையன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள தெரியவில்லை..

Friday, March 2, 2012

விரும்பத்தகாத நிகழ்வுகள்..!!!


தினசரி பேப்பர்களை படித்தாலே தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, காதலன் காதலியை ஏமாற்றுவது, கள்ளக்காதல் கொலைகள், பணத்திற்காக குழந்தைகள் கடத்தப்படுதல்,  கல்லூரி மாணவர்கள் (என்ற பெயரில்) பொறுக்கித்தனங்கள்..இப்படி கெட்ட செய்திகளாகவே வருகின்றன..

கடந்த கால காருனாநிதியின் ஆட்சி அப்புறப்படுத்தப்பட்டபோது, ஜெயலலிதாவின் ஆட்சி வந்தபோதும், ஏதோ தமிழத்திற்கு விடிவுகாலம் பிறந்துவிட்டது, சட்டம் ஒழுங்கு சீர்பெறும்,  இனி பொற்கால ஆட்சிதான் என்ற ரீதியில் - செய்திகள் வெளியாகின..ஏற்கனவே ஜெயலலிதாவின் ஆட்சியின் லட்சணம் நமக்கு தெரிந்ததுதான் என்றாலும், கருணாநிதியின் குடும்ப -ஆக்கிரமிப்புகள் - அட்டூழியங்கள்  ஜெயலலிதாவின் ஆட்சியை வரவேற்க வைத்தன..

என்னதான் ஜெயலலிதாவின் ஆட்சியில் குறைகள் இருந்தாலும், சட்ட ஒழுங்கு ஓரளவாவது சீராக இருக்கும்..ஆனால் இந்த முறை அதுவும் சீரழிந்து கிடக்கிறது..
பள்ளி ஆசிரியைக்கொன்ற மாணவன் - மைனர் என்ற பெயரில் - சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஜாலியாக இருக்கையில் - அந்த செய்தியை தெரியவரும்  எவனும் இதுபோன்ற குற்றங்களுக்கு அஞ்சமாட்டான் என்பதுதான் உண்மை...
வங்கிக் கொள்ளையர்களை சுட்டுக்கொன்றதுபோல - இவனுக்கும் அதுபோன்ற தண்டனைக்கிடைத்திருந்தால் -நிச்சயம் சட்டத்தின் மீது நம்பிக்கை பிறந்திருக்கும்...

அதுபோல புற்றீசல்போல - சென்னை மற்றும் தமிழகமெங்கும் புகுந்திருக்கும் வடமாநிலத்தவரின் ஆக்கிரமிப்பு - பயமூட்டுகிறது..அதற்க்கு தோதாக, பெரிய குற்றங்களில் ஈடுபடுவோரும், வடமாநிலத்தவராக இருப்பது - காவல்துறை - இன்னும் கடுமையான கண்காணிப்பை - பலப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் தோன்றாமலில்லை.. . இல்லையென்றால் தும்பை விட்டு வாலைப்பிடித்தது போலாகிவிடும்.. ஏற்கனவே அந்நிய சக்திகளான பயங்கரவாத விடுதலைப்புலிகளை தமிழகத்தில் வளரவிட்டு அதற்க்கான கடுமையான விலையைக் கொடுத்திருக்கிறோம்..


கூடங்குளம் அணுமின் திட்டம், 1988 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தியால் தொடங்கப்பட்ட ஒரு நல்ல திட்டம்..13 ஆயிரம் கோடி களுக்கும் மேல் செலவளிக்கப்பட்ட இந்த திட்டத்தை, சிலர் அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் கடைசி நேரத்தில் தடுக்க முயலுகின்றன..

கருணாநிதியும், ஆற்காட்டு வீராசாமியும் - மின்சார புயூசை புடிங்கி வைத்துக்கொண்டிருப்பது போல அலறிக்கொண்டிருந்த அல்லக்கைகள், இன்று ஜெயலலிதா ஆட்சியிலும் அதை விட கூடுதலான மின்வெட்டைக்கண்டு வாய்பொத்தி நிற்பது வெட்கக்கேடு.. 
இருபது வருடங்களாக அமெரிக்காவில் பிழைத்துக்கொண்டிருந்த உதயகுமாருக்கு, எத்தனை விஞ்ஞானிகள் சொன்னாலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பின் மீது சந்தேகம் வருவதற்கு எந்த  முகாந்திரமும் இல்லை..அதற்க்கு ஒரே காரணம் அது ரஷியாவின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டதே..அந்நிய கைக்கூலி உதையகுமார் இப்படி உணமையிலே மக்கள் நலனில் அக்கறை கொண்டவன் என்றால், - அமெரிக்க பானம் பெப்சி, கோகாகோலாவை எதிர்த்து தன போராட்டத்தை தொடங்கட்டும்..

தன தந்தை தாய் புற்று நோயால் இறந்ததால் போராடுகிரானாம்...- பெப்சி, கோகா கோலா போன்ற பானங்களில் பூச்சி மருந்து கலக்கப்படுவது நிரூபிக்கப்பட்டும், ஏராளமான முட்டாள்கள் அதை பெருமையாக குடிப்பதை தடுக்க இவனுக்கு தைரியம் உண்டா? 

கூடங்குளம் அணுமின் நிலையத்தை விட மிகப்பெரும் பயங்கரமான விஷக்கிருமிகளை அனுமதித்து விட்டு, இன்று மின்சாரத்திற்காக மக்கள் அல்லல்படும் வேளையில் அதை எதிர்க்க கிளம்பி இருக்கும் இவன் நிச்சயம் - ஒரு தேச துரோகிதான்..

கருணாநிதி என்னதான் செய்தாலும் அதற்க்கு எதிராக செய்வது ஜெயலலிதாவின் விரும்பப்படாத ஒரு தன்மை..
காங்கிரசை தாஜா பண்ணுவதற்காக கருணாநிதி இத்திட்டத்தை ஆதரித்தாலும் - அது நல்ல விசயம்தான்..ஆனால் கருணாநிதி ஆதரிக்கிறார் என்பதற்காக- கைது செய்யப்பட வேண்டிய ஒரு தேச துரோகியை - முதல்வர் ஜெயலலிதா சந்திப்பது விரும்பத்தக்க விஷயம் அல்ல..