Pages

Tuesday, January 31, 2012

முரண்

 முன்குறிப்பு : இதை ஒரு சினிமா விமர்சனம் என்று நீங்கள் கருதினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல ....என்று தட்டி கழிக்க மாட்டேன்..நான்தான் பொறுப்பு..கீழே உள்ள படம் தான் காரணம்..ஹிஹி...

நெடுநாட்களாகிவிட்டது தமிழ் வாரந்திர பத்திரிக்கைகளை படித்து...அவைகளில் வெறும் ஆபாச செய்திகளே கொட்டிக்கிடக்கிறது என்பதைத்தவிர வேறு என்ன உள்ளது..
இருந்தாலும், சமீபத்தில் ஒரு நீண்ட - ஏறக்குறைய 36 மணி நேர இரயில் பயணம் என்பதாலும், செல்வது வடஇந்தியா என்பதாலும் ஒரு சில தமிழ் பத்திரிக்கைகளை வாங்கி வைத்துகொள்ளலாம் என்றுதான் குமுதம் மற்றும் ஆனந்த விகடன்  என்ற பலான பத்திரிக்கைகளை வாங்கினேன்.

உலகமே தமிழ்தான் என்று பீற்றிகொள்ளும் இவர்களுக்கு - இந்தியாவில் அதுவும் சென்னையில் சென்ட்ரல் இரயில்வே ஸ்டேஷனுக்குள் புகுந்து விட்டாலே தமிழுக்கு இனி வேலையே இல்லை எனபது போல்தான்..எங்கும் ஹிந்தி, உருது, தெலுங்கு போன்ற மொழிகள்தான் ---
தமிழ், விடுதலைப்புலிகளுக்கும், முல்லைப்பெரியாருக்கும் தான் பயன்படுகிறது,,,அதுவும் அரசியல் வியாபாரிகளுக்குமட்டும்..,,- இந்திய தேசப்பற்று கிரிக்கெட்டில் மட்டும் வெளிப்படுவதுபோல...

இதில் என்ன முரண் என்றால்...தமிழ்நாட்டில் அரசியல் செய்து பிழைக்கும் விடுதலைப்புலிகளின் கைக்கூலிகள், முல்லைப்பெரியாறு விசயத்தில் கேரளா அரசு சுப்ரீம் கோர்ட் ஆணையை மீறிவிட்டது என்று கூக்குரலிடுகின்றன...
அதே கைக்கூலிகள், ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்றுபேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய ஓலமிடுகின்றன..

அது ஒரு பக்கம இருக்கட்டும்,

ஆனந்த விகடன் என்ற பலான பத்திரிகையில், திமுக இளைஞர் அணித்தலைவராக ஐம்பது வயதைக்கடந்த முக ஸ்டாலின் இருக்கலாமா என்று கேலி செய்துவிட்டு, ரஜினி என்ற அறுபத்த்டைந்து வயது கிழ நடிகருக்கு  சிறு சிறு  வயது  நடிகைகளை கூட்டிக்கொடுக்க போட்டி போடுகின்றன.

 குமுதம் அதைவிட ஒரு மஞ்சள் பத்திரிகை என்பதை அப்பட்டமாக நிரூபிக்கிறது...
சுகாசினி என்ற நாற்பது வயதை கடந்த ஒரு நடிகைக்கு, இளைஞர்களை ஜோடி சேர்க்க வேண்டுமாம்..

ஒரு மேடையில் இதை சொன்ன ஒரு நடிகை அதைவிட ஒரு கேவலமான ஒரு விசயத்தையும் போது மேடையில் சொல்லி இருக்கிறாள்...கணேஷ்  வெங்கட் ராம் என்ற ஒரு நடிகருக்கு தனது தோழிகளை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்றிருக்கிறாள்..இதற்க்கு என்ன அர்த்தம்?
இதை குமுதம் வெளியிடுவதின் நோக்கம் என்ன?

முன்பு குஷ்பு என்ற நடிகை திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்ற ஆபாசக்கருத்தை வெளியிட்ட போது ஓலமிட்ட தமிழ் வீரர்கள் இப்போது என்னத்தை புடுங்கிக்கிகொண்டிருக்கிரார்கள்?

பத்திரிக்கையை ஒருவன் காசுகொடுத்து வாங்குவது இதுபோன்ற வெறும் குப்பைகளுக்காகவும், விபச்சாரத்தை பரப்பவும் அல்ல..

இவைகளையே செய்திகளாக வெளியிட்டு பத்திரிக்கை விபச்சாரம் செய்யும் பலான பத்திரிக்கைகளுக்கு, அரசையும், காவல் துறையையும், சட்டத்தையும் விமர்சனம் செய்யும் தகுதி சிறிதாவது  இருக்கிறதா என்று நாம் சிந்திக்கவேண்டும்.. 

Tuesday, January 17, 2012

நண்பன் - சரக்கு தீர்ந்தவர்களின் சரணாலயம்.



ப்ளாக் புதிதாக எழுத ஆரம்பித்த கால கட்டங்களில் மளமளவென்று எழுதி தீர்த்து தள்ளுவோம்..ஒரு காலகட்டத்தில், தினமும் என்றிருந்தது, வாரத்திருக்கொரு பதிவு என்று மாறும்,  பின் மாதம் ஒன்று என்று குறைத்துகொள்வோம், சில நேரங்களில் சப்ஜெக்டே தோன்றாது..ஏதாவது ஒரு பதிவை காப்பி பேஸ்ட் செய்து பதிவு செய்து ஓட்டுவோம்..
அப்படித்தான்...

ஹிந்தியில் தர்மேந்திரா நடித்த "ஜுகுனு" என்ற படம் தமிழில் கமல்ஹாசன் நடிக்க "குரு" என்ற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது..அந்த படத்தின் அப்பட்டமான தழுவல்தான் ஷங்கரின் முதல் படமான "ஜென்டில் மென்" ..முதல்பதிவே..சாரி முதல் படமே காப்பி அண்ட் பேஸ்ட் செய்த ஷங்கர், தொடர்ந்து ஊழல் பற்றிய கதைகளையே எடுத்து காலத்தை ஓட்டினார்...முதல்வன் படம் வரை அவரிடம் இருண்ட சரக்கு தீர்ந்துவிட, தொடர்ந்து அந்நியன், சிவாஜி, எந்திரன் என்ற போலி வெற்றி படங்களை தந்து தான் ஒரு தோல்விப்பட இயக்குனர் என்று நிரூபித்தார். சிவாஜி மற்றும் எந்திரன் படங்களிலேயே ஷங்கரிடம் சரக்கு இல்லை என்று தெரிந்து விட்டது....அந்த படங்களின் வெற்றி என்பது கூட, ஒரு தோற்றுவிக்கப்பட்ட பிம்பம்தான் என்பதும் உண்மையிலேயே அவைகள் படுதொல்விப்படங்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். அதனால்தான், ரஜினியும், ஷங்கரும் மீண்டும் இணையவிரும்பவில்லை என்பதும் அப்பட்டமான உண்மை.
எனவே தான், இதற்குமேலும், தனது பருப்பு வேகாது என்றுணர்ந்த ஷங்கர், மீண்டும் காப்பி அண்ட் பேஸ்ட் போல ஹிந்தியில் வெற்றி கண்ட த்ரீ இடியட்ஸ் படத்தை ரீமேக் செய்து தன இருப்பை மீண்டும் உறுதிபடுத்திகொள்ள முயற்ச்சித்தார்.

 அதேபோல, கில்லி படத்திற்கு அப்புறம் எத்தனையோ ரீமேக் படத்தில் நடித்தும் அனைத்தும் படு தோல்வி படங்களாகவே அமைய, விஜய்க்கும் ஒரு வெற்றிப்படம் தேவைப்பட்டது..
ஸ்ரீகாந்த், சத்யராஜ் போன்றோருக்கும் இதே நிலைதான்..

சரி படத்தின் கதைக்கு வருவோம்.
பெரிய ஜாமீன் ஒருவரின் மகனின் பெயருக்கு பின்னால் டிகிரி வாங்குவதற்காக - அவர் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து படிக்கவரும் ஒரு பிராடு ஒருவன் அந்த காலேஜின் பாடத்திட்டங்களி சாடுவதும் அந்த காலேஜ் பிரின்சிபாலின் மகளையே காதலிப்பதும் பிறகு நண்பர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் ஓடி விடுவதும், அந்த நண்பர்கள் பத்துவருடங்கள் கழித்து சந்திப்பதும், அதுவரைக்கும் அவனும், அவன் காதலியும் திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கும் ஒரு கோமாளித்தனமான கதையே இந்த இடியட்..நண்பனின் கதையும்.

பாண்டிச்சேரி அமைச்சர் ஒருவர்  பத்தாவது தேர்வுக்கு ஆள் மாறாட்டம் செய்து தலைமறைவாக இருக்க, ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் மூன்றாண்டுகள் ஆள்மாறாட்டம்  செய்து, டிகிரியும் வாங்கி, அதன் பிறகும் மாபெரும் விஞ்ஞானியாக அந்த பிராடு இருப்பதை ஏதோ ஒரு தியாகம் போல் காட்டும் இந்த ஏமாற்றுக்கார கூத்தாடிகள் நம்மைதான் முட்டாள்களாக்கி இருக்கிறார்கள்..
கதாநாயகியாக வரும் இலியானா என்பவர் ஒல்லியாக இருப்பதை தவிர வேறு எந்த சிறப்பும் அவருக்கு இல்லை..தந்தையிடம் கல்லூரி அறையின் சாவியை திருடுவதற்காக அவள் குடித்துவிட்டு வருவதாக காட்டுவது கேவலத்திலும் கேவலம்..
அந்த நடிகையின் உடம்பை துகிளுரித்துக்காட்டுவதர்காக, இந்தி படத்தில் இல்லாத ஒரு எக்ஸ்ட்ரா பாடல் காட்சி..அந்த காட்சியில் அந்த நடிகையை தவிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட இடை அழகிகளின் ஆபாச நடனம் இவர்கள்  ஒருக்காலத்திலும் நல்ல படம் எடுக்கமாட்டார்கள் என்பதை காட்டுகிறது.
பிரின்சிபாலாக வருபவர் ஏதோ எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார் போல மாணவர்களை அடிக்கிறார்...

கல்லூரி விழா ஒன்றில் அவரையும் அமைச்சர் ஒருவரையும் ஒரு மாணவன் கேவலப்படுத்தி பேசுவது நகைச்சுவை என்ற பெயரில் படு ஆபாசம்.

இரவில் குடித்துவிட்டு திருட்டுத்தனமாக மாடி ஏறி வரும் கதாநாயகனுக்கு, கர்ப்பிணி பெண் தன வயிற்ரை காட்டி "ஆள் ஈஸ் வேல் " என்று சொல்லி தடவ சொல்கிறாள்..தன தங்கையை அவனுக்கு முத்தமிட கூட்டி கொடுக்கிறாள்..இது போன்ற கேவலமான குடும்பத்தின் தலைவர்தான் கல்லூர்ரி பிரின்சிபாலாம்..ஹ்ம்ம்ம்

ஏற்கனவே எந்திரன் என்ற படத்தில் ரோபோ பிரசவம் பார்க்கும் காட்சி..இந்த படத்தில் பிராடு எஞ்சினியரின் மாணவன் பிரசவம் பார்க்கும் காட்சி..கப்பிக்குள் காப்பி..நல்ல காமெடி..
கதாநாயகன்  காணமல் போன பின் பத்து வருடமாக கல்யாணமே ஆகாமல் கதாநாயகி இருப்பதாக காட்டி இருப்பது நகைச்சுவை என்றால், கதானாயகனைப்பற்றி நண்பர்கள் அறிந்து தேடிப்போகும் வழியில் எந்த ஒரு விசாரணை இன்றியும், இரண்டு வசனங்களை மட்டும் பேசிவிட்டு கதாநாயகி அவர்களுடன் ஓடிப்போவதும் மகா கேவலம்..
இந்த படத்தை ஏன் புகழ்கிறார்கள் என்றே தெரியவில்லை..

நண்பன்....ஆள்மாறாட்டம் செய்த பிராடு. 


Friday, January 6, 2012

கொலையை கண்டித்து கொலை செய்யும் கொலைகாரர்கள்..



ஒரு கொலையை கண்டித்து பல கொலைகள் செய்யும் அவலமும் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கமுடியாத, கையாலாகாத  சட்டமும் நமது நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது..
நேற்று சென்னை நகரத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சுவரொட்டி, சட்டத்தின் அவல நிலையைத்தான் காட்டுகிறது.
ராஜீவ்காந்தி கொலையில் தேடப்பட்டு வந்த முதல் குற்றவாளி பிரபாகரன் புகைப்படத்துடன், விடுதலைப்புலிகளுக்காக - வாழ வக்கின்றி கோழைத்தனமாக தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமார், வாசுகி போன்ற விடுதலைப்புலிகளை வீரர்கள் என்று வர்ணித்து ஒட்டப்பட்டிருந்த இந்த சுவரொட்டி அமைத்தவர்களை இன்னும் கைது செய்யாமல் காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது கேவலத்திலும் கேவலம்.
உனக்கு தைரியமிருந்தால் ஒரு சிங்கள ராணுவ வீரனை கொன்றுவிட்டு செத்துப்போயிருக்கவேண்டும்..அதை விடுத்து, இந்தியாவில் தனது கோழைத்தனத்தை வீரம் என்று பேர் வாங்குவதற்காக தற்கொலை செய்து கொண்டவர்களை ஊக்குவிக்கும் ஒவ்வொரு பயங்கரவாதியும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே..
இந்திய குற்றவியல் சட்டப்படி, தற்கொலை முயற்ச்சி  செய்வது ஒரு தண்டனைக்குரிய குற்றம். அப்படி தற்கொலை செய்பவர்களை மாவீரனாக சித்தரித்து - விடுதலைப்புலிகளிடம் காசு பெற்று தற்கொலை செய்வதற்கு நிதி உதவி செய்து, தற்கொலைகளை தூண்டும் மாபெரும் குற்றத்தை இங்குள்ள சில தேச விரோதிகள் - விடுதலைப்புலிகளின் அடிவருடிகள் செய்து வருகின்றன. அதற்க்கு தமிழ்பற்று வியாபார போர்வையை போர்த்திக்கொண்டு செய்யும் இந்த தேச துரோகிகள் நாடு கடத்தப்படவேண்டியவர்கள்..

இதேமாதிரிதான், தவறான சிகிச்சை வழங்கியதால், தனது மனைவி இருந்ததற்கு காரணம் என்று டாக்டர் சேது லக்ஷ்மி என்பவரை ஒரு வெறியன் கொன்றிருக்கிறான். அதற்க்கு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது..
ஆனால், இதை காரணம் காட்டி, தமிழகத்தில் மருத்துவர்கள் அனைவரும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்திருப்பது உச்சக்கட்ட பயங்கரவாதம். மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதினால் எத்தனை உயிரிழப்புகள், பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் எனபது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
இந்த கொலைக்காக வேலை நிறுத்தம் என்ற பெயரில் இவர்கள் செய்திருக்கும் இந்த மறைமுக கொலைகளுக்கு பழி  வாங்க என்று யாராவது புறப்பட்டால், தமிழ்நாட்டில் டாக்டர்களுக்கு பஞ்சம்தான் ஏற்படும்..

இந்த முட்டாள்தனமான செயலை செய்த மருத்துவர்கள்  அனைவரும் சட்டத்தின் முன் குற்றவாளிகளே..சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே.


Friday, December 30, 2011

இவங்களுக்கெல்லாம் கிறுக்கா பிடித்திருக்கிறது?


வார இதழ்கள், வாரமிருமுறை இதழ்கள் எல்லாம் ஆபாச இதழ்கள் என்று ஒதுக்கி விட்டாயிற்று..இருந்து என் கெட்ட நேரம் சென்ற வார குங்குமம் வாங்கவேண்டியதாகி விட்டது..
பள்ளிகாலங்களில்  குங்குமம் வார இதழ் வாசகன்தான் நான்..அப்போது கலைஞரின் "சங்கத்தமிழ்" க்காக என்று அந்த புத்தகத்தை படிக்க வேண்டியிருந்தது..அந்த நேரத்தில் கா.நா.சு என்ற இலக்கிய விமர்சகரின் விமர்சனங்கள், கி.வ. ரா என்ற இலக்கிய எழுத்தாளரின் கதைகள், இன்னும் தெலுங்க எழுத்தாளர், எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில் லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, போன்றோர்களின் எழுத்துக்களை ரசித்திருக்கிறேன்..

நாளடைவில், குமுதம், ஆனந்த  விகடன் போன்ற ஆபாச  சினிமா பத்திரிக்கைகளுக்கு போட்டியாக குங்குமமும் ஒரு ஆபாச சினிமா பத்திரிக்கையாக உருமாரியதன் காரணமாக, அந்த பத்திரிகையையும் நிறுத்த வேண்டியதாயிற்று..இவ்வளவுக்கும், அப்பத்திரிக்கையின் போது மேலாளராக அப்போது இருந்த - இலவசங்களை இணைத்து பத்த்ரிக்கை விற்றார்களே - அந்த நேரத்தில் பொது மேலாளராக இருந்தவர் என் ஆரம்பகால -"கிளாஸ்" மெட்..இப்போது அந்த பழக்கத்தையும் விட்டோழித்தத்தில் அந்த நண்பனின் தொடர்பும் போயிற்று..அப்பத்திரிக்கையின் தலைமை ஓவியர் எனது நெருங்கிய நண்பர்...சரி விஷயம் அதுவல்ல..

சென்ற வார குங்குமம் அட்டைப்படத்தில் போட்டிருந்த ஒரு செய்திதான் தமிழகம் எவ்வளவு கேவலமான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது..ஊடகங்களால் ஊதி பெரிதாக்கப்பட்ட முல்லை பெரியாறு பிரச்சினை தீர வேண்டுமென்றால் "ரஜினிகாந்த் தமிழகத்தின் அம்பாசிடராக வரவேண்டும்" என்று யாரோ ஒரு மத வெறியன் சொன்னதை பெரிதாகப்போட்டு ஒத்தூதி இருக்கும் கேவலமான செயலை குங்குமம் செய்திருக்கிறது..தமிழக முதலமைச்சர், கேரளா முதலமைச்சர் , அரசியல் வியாபாரிகள், மற்றும் தமிழ் பற்று வியாபாரிகளின் - போன்றோரின் அரசியல் வாழ்விற்காக இரு தரப்பினர்களின் உணர்வுகளையும் தூண்டி - குளிர்காயும் இந்த விசயத்த்தில் ஒரு நடிகன் என்ன கிழித்து விடமுடியும்?
அது  போக இந்தியாவை உலகளவில் முன்னேற்ற விளையாட்டுத்துறை அம்பாசிடராகவும் அந்த கூத்தாடியை நியமிக்க வேண்டும் என்று உளறி இருப்பவனை நாடு கடத்தவேண்டும் என்று செய்தி வெளியிடாமல் அந்த முட்டாளின் பேட்டியை வெளியிட்டு காசு பாத்திருக்கிறது குங்குமம்.

தன அடுத்த படத்திலே நடிக்க முடியாமல் கிடக்கும் ரஜினி தமிழக மக்களின் பிரச்சினையில் என்ன கிழித்து விடமுடியும்?
இப்படி எதற்க்கெடுத்தாலும் சினிமாககூத்தாடிகளின் அடிவருடும் தமிழன் - தமிழ் தமிழ் என்று கூக்குரலிடுவது கேவலமாகத்தான் இருக்கிறது.

முல்லைப்பெரியாறு விசயத்தில் தொடர்பு இல்லாத இங்கே வசிக்கும்  கேரலாக்காரர்களின்   கடைகளை  உடைத்து திருடி தமது வீரத்தை காட்டும் மாவீரன் தமிழனுக்கு - இதற்க்கு முன்பும் இப்போதும் தாம் கேரளக்காரனிடம் தொடர்ந்து எமாற்றப்பட்டுகொண்டிருப்பது தெரியாமலிருப்பதுதான் மாபெரும் நகைச்சுவை.

முழு கிளாசில், ஒரு ஸ்பூன் பாலும்,  பல மடங்கு தண்ணீரும் - சிறுது சர்க்கரையும் போட்டு  அரைக்கிளாசுக்க்கும் குறைவாக தேநீர் தந்து விட்டு அதற்க்கு பெயர் சிங்கிள் டீயாம். முழு கிளாசுக்கு பெயர் கப் டீயாம்..இன்னும் மசாலா டீ, ஸ்பெசல் டீ, இஞ்சி டீ, டைமன் டீ, சாதா டீ என்று ஒரே கலவையை பல பெயரில் பல விலைகளில் விற்பவனிடம் - சந்தோசமாக ஏமாந்து விட்டு, இன்று ஏதோ தமிழ் பற்று வியாபாரிகளின் பிழைப்புக்காக மூடத்தனமான செயல்களில் ஈடுபடும் இவங்களுக்கெல்லாம் கிறுக்குதான் பிடித்திருக்கிறது..
நாளைக்கு ஆங்கில புத்தாண்டை கொண்டாட - சாராயக்கடைகளுக்கும், நட்சத்திர ஓட்டல்களுக்கும் படை எடுக்கபோகிறான் "வீரத்தமிழன்."

ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஆபாச நடிகைகளின் அந்தரங்களை தரிசித்து பன்னிரண்டு மணிக்கு "ஹேப்பி நியு இயர்" சொல்லி தம் புது வாழ்வை தொடங்க இருக்கிறான் "சிங்கத்தமிழன்."

"வொய் திஸ் கொலைவெறி" என்று போதையில் பாடி மகிழப்போகிறான் "பச்சைத்தமிழன்"  

கடந்த வருடம் எத்தனை தமிழ்படங்கள் வெளியாகின, எத்தனை வெற்றி பெற்றன, எவ்வளவு கலெக்சன் ஆனது போன்ற அதி முக்கிய  புள்ளி விபரங்களை -ஆபாச பத்திரிக்கைகளில் பார்த்தும்,  வலைத்தளங்களில் எழுதியும், படித்தும், புளங்காகிதம் அடையப்போகிறான் "மறத்தமிழன்"

முல்லைப்பெரியாருக்கு புத்தாண்டு தினத்தில் ஒன்றும் ஆகாது..மேக் அப் போட்டு போராட்டம் நடத்தும் அரசியல் பயங்கரவாதிகளும் நாளைக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சி யடைந்து கொள்வான் "சங்கத்தமிழன்".

வாழ்க தமிழ் வெல்க தமிழ்..
                                            wish you happy new year..



Monday, December 26, 2011

பரபரப்புக்காக பேருந்தில் வெடிகுண்டு வைத்த ஜூனியர் விகடன்!



'புலானாய்வு' என்ற பெயரில் புடலங்காய் ஆய்வு செய்து குப்பை கொட்டிவரும் வாரப்பத்திரிக்கைகளுள் ஜூனியர் விகடனும் ஒன்று. கடந்த டிசம்பர்-7 ஆம் தேதியிட்ட இதழில் "'இது வெடிகுண்டு மாதிரியில்ல இருக்கு?'' என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.
என்னதான் எழுதியிருக்கிறார்கள் என்று பார்க்கலாமே என்ற ஆர்வத்தில் வாசித்தபோது ஜூனியர் விகடன் மதவெறி வெளிப்பட்டது. முழு கட்டுரையையும் வாசிப்போம்:
******************************
"இது வெடிகுண்டு மாதிரியில்ல இருக்கு?''கண்மாய்க்குள் தூக்கிப் போட்ட மாணவர்கள்!


போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி இமாம் அலி, சதிச் செயல்களுக்காக வெடிகுண்டுகளை முதன் முதலில் வெடிக்கச் செய்து சோதித்துப் பார்த்த இடம், மதுரை மாவட்டம், ஓவா மலை. இப்போது, அதற்கு அருகிலேயே பஸ்ஸுக்குள் வெடிகுண்டு சிக்கியிருப்பது மதுரை மக்களின் நிம்மதிக்கு வேட்டு வைத்திருக்கிறது. 

டிசம்பர் 6-ம் தேதி எந்த அசம்பாவிதமும் இல்லாமல் கடந்துவிட்ட சூழ்நிலையில், அதற்கு மறுநாள் காலையில்தான் இந்தச் சம்பவம்.  குண்டு வைக்கப்பட்டு இருந்த அரசு பஸ்ஸில் பயணம் செய்த பாலிடெக்னிக் மாணவர்கள் சயாரத்னம், அர்ஜூன் ஆகியோரிடம் நாம் பேசினோம். 'மேலூரில் இருந்து திருவாதவூர் வழியாக, மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு வர்ற பஸ் அது. 7-ம் தேதி காலையில் 7.10 மணிக்கு திருவாதவூர் வந்த அந்த பஸ், 7.25 மணிக்கு அகதிகள் முகாம் பஸ் நிறுத்தத்துக்கு வந்தது. அப்போ ஸீட்டுக்கு  அடியில், பாலிதீன் பை ஒண்ணு கிடந்தது. எங்களோடு பஸ்ல வந்த இலங்கை அகதியான நிஷாந்த் என்பவர் அதை எடுத்து, கண்டக்டர் விருமாண்டியிடம் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்த கண்டக்டர், 'இது வெடிகுண்டு மாதிரில்ல இருக்கு. உடனே வெளியே தூக்கிப் போடுப்பா’னு சொன்னார். உடனே டிரைவர் பஸ்ஸை நிறுத்த, சில மாணவர்கள் கீழே இறங்கி அந்த பார்சலை முத்தம்பட்டி கண்மாய்க்குள் போட்டார்கள். 

ஆனாலும், பயத்தில் பஸ்ஸுக்குள் வேறு எதுவும் இருக்கிறதா என்று தேடினோம். பயந்துபோன கண்டக்டர் மேலூர் டெப்போவுக்குப் போன் போட்டு விஷயத்தைச் சொன்னார். பஸ்ஸை நேராக ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோகச் சொல்லிட்டு, வெடிகுண்டு பற்றி போலீஸுக்குத் தகவல் கொடுத்து விட்டார்கள். பஸ் ஒத்தக்கடைக்கு போகும்போதே, எதிரே வெடிகுண்டு நிபுணர்கள் குழு திருவாதவூர் நோக்கிப் போனது...' என்றனர் திகிலுடன்! 

அதற்குள்,வெடிகுண்டு நிபுணர்கள் கண்மாயில்கிடந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்து,ஒத்தக்கடைபோலீஸ் நிலையத்துக்குக் கொண்டுவந்தார்கள். மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆஸ்ரா கர்க், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி. மகேஸ்வரி மற்றும் கியூ பிராஞ்ச் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். 


பரபரப்புக்காக குண்டு வைத்த ஜூனியர் விகடன்
க்யூ பிராஞ்ச் அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டோம். 'வெடிகுண்டை முழுமையாக சோதித்துப் பார்த்தோம். பிளாஸ்டிக் டிபன் பாக்ஸில் ஒன்பது வாட்ஸ் திறன்கொண்ட நான்கு நிப்பான் பேட்டரிகள், கடிகாரத்தின் இயந்திரப் பகுதி, சில மின் வயர்களைப் பொருத்தி ஒரு சுவிட்ச்சோடு இணைப்புக் கொடுத்திருந்தார்கள். பகல் 12 மணிக்கு வெடிக்குமாறு கடிகாரத்தில் செட் செய்யப்பட்டு இருந்தது. சிறிதளவு மட்டுமே வெடிமருந்தை ஒரு காகிதத்தில் சுற்றி லட்சுமி வெடியில் இருப்பதுபோல உருளையாகச் செய்து இருந்தார்கள். அதற்கு இரண்டு வயர் இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த குண்டு வெடித்து இருந்தாலும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. மக்களுக்கு பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் குண்டு வைக்கப்பட்டு இருக்கலாம்...'' என்றார்கள்.

சீனியர் போலீஸ் அதிகாரி ஒருவர் சொன்னத் தகவல் அதிர்ச்சி ரகம். 'வெடிகுண்டு சிக்கிய திருவாதவூர் அருகில் உள்ள உலவுபிச்சான்பட்டிதான் இமாம் அலியின் சொந்த ஊர். பழனி பாபா குரூப்புடன் தொடர்பு வைத்து இருந்த இமாம் அலியும் ஹைதர் அலியும் சேர்ந்து, கடந்த 1990-ம் ஆண்டு ஓவா மலையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தபோது, அந்தச் சத்தம் ஊருக்குள் கேட்டது. இப்போது இருப்பதுபோல அப்போது அங்கு கிரானைட் குவாரிகள் எல்லாம் அந்த நாளில் கிடையாது. பீதி அடைந்த மக்கள் மலைக்குத் திரண்டு சென்றபோது, இமாம் அலி, ஹைதர் அலி மற்றும் அவர்களது கூட்டாளிகள் தப்பி ஓடினார்கள். 

பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டபோது, இமாம் அலி மட்டும் துணிச்சலாக, 'ஆமாம், வெடிகுண்டு சோதனைதான் நடத்தினோம். பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பதிலடி கொடுக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்’ என்று பதில் சொன்னார். பின்பு, அண்ணா பஸ் நிலையம் அருகே போலீஸ் வேனில் இருந்து குதித்து தப்பி ஓடியவர், பாகிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சி பெற்று பங்களாதேஷில் தங்கியிருந்தார். சி.பி.ஐ. போலீஸ், ஒரு கடிதம் மூலம் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துக் கைது செய்தது. அப்போதும் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் வைத்து, போலீஸாரோடு துப்பாக்கிச் சண்டை போட்டு இமாம் அலியை மீட்டனர் அவரது கூட்டாளிகள். கடைசியில், இமாம் அலியை பெங்களூரில் கண்டுபிடித்துக் கதையை முடித்தது போலீஸ். 

அப்போதே, 'இமாம் அலி புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டு இருக்கிறார்’ என்று மதுரை வீதிகளில் மர்ம நபர்கள் போஸ்டர் ஒட்டினார்கள். அது உண்மைதான் என்பது போல, அடுத்தடுத்து மதுரையில் வெடிகுண்டு சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்தத் தகவல்களை எல்லாம் அரசுக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் தெரியப்படுத்தி இருக்கிறோம்.'' என்றார். 

மக்கள் நிம்மதிக்கு அரசுதான் வழி காட்ட வேண்டும்! 
- கே.கே.மகேஷ், படங்கள்: பா.காளிமுத்து
******************************
மேற்கண்ட கட்டுரையை நன்கு வாசித்தால் அதில் சொல்லப்பட்டுள்ள விசயம் மதுரை அகதிகள் முகாம் அருகே வெடிகுண்டு ஒன்றை பேருந்தில் வைத்திருந்ததை மாணவர்கள் கண்டு ,தகவல் தெரிவித்துள்ளார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் அதை செயலிழக்கச் செய்ததோடு, பொதுமக்களுக்கு பீதி ஏற்படுத்தும் நோக்கில் விஷமிகளின் செயல் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னணியில் முஸ்லிம் எவருமே இல்லாதபோதும், அதை போலீசாரால் என்கவுண்டரில் கொல்லப்பட்ட இமாம் அலியுடன் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளது அப்பட்டமான விஷமத்தனம். மட்டுமின்றி இமாம் அலி முன்பு ஒருமுறை வெடிகுண்டை வெடிக்கச் செய்தாராம். அது பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்குத்தான் என்று சொன்னாராம்! பாபர் மசூதி இடிக்கப்பட்டது 1992 டிசம்பர்-6. ஆனால் இமாம் அலி அதற்கு "இரண்டு ஆண்டுகள்முன்பே" அதாவது 1990 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வெடிகுண்டு சோதனை நடத்தினாராம்! என்ன ஒரு மொள்ளைமாறித்தனம் பாருங்கள்!

எங்காவது வெடிகுண்டு வெடித்தாலோ அல்லது சோதனை நடத்தப்பட்டாலோ அதற்கு முஸ்லிம்களே காரணம் என்ற கருத்துருவாக்கம் செய்வதில் சங்பரிவார பிண்ணனி கொண்ட ஊடகங்கள் செய்துவருவதை அறிவோம். அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக ஜூனியர் விகடனும் செயல்படுவது நடுநிலை வாசகர்களின் நன்மதிப்பை இழக்க நேரிடும் என்பதை ஜூ.வி உணரவேண்டும்.

கட்டுரையின் கயமைத்தனத்தை வாசகர்கள் கருத்து பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தபோதிலும் கொஞ்சம்கூட வெட்கமின்றி சிறுவருத்தமோ திருத்தமோ செய்யாது விட்டுவைத்துள்ளதைப் பார்த்தால் டிசம்பர் முதல்வாரத்தில் பரபரப்புக்காக செய்தி வெளியிடவேண்டும் என்ற துர்நோக்கத்தில் ஜூனியர் விகடனேகூட அந்த வெடிகுண்டை பேருந்தில் வைத்திருக்குமோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

நன்றி : - கலீல், மதுரை. இந்நேரம்.காம் 

Thursday, December 22, 2011

தமிழக முதலமைச்சர் நரேந்திர மோடியா, ஜெயலலிதாவா?


சமீபத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவை வெளியேற்றியது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது..ஒரு சாரர் அது நாடகம் என்றும், இன்னொரு சாரர் ஜெயலலிதாவின் அதிரடி முடிவு என்றும் பாராட்டி வருகின்றனர்.

இதை வைத்து ஆனந்தவிகடன், குமுதம், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர், நக்கீரன் போன்ற ஆபாச பத்திரிகைகள் பரபரப்பு செய்திகள் வெளியிட்டு இன்னும் ஒரு மாதத்திற்கு நன்றாக கல்லா கட்டும்..

அது இருக்கட்டும், மதவெறி தினமலர் என்ற நாளிதளின்  செய்திதான் தமிழகத்தின் ஒட்டுமொத்த இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வகையில் அமைந்துள்ளது..

அதிமுகவையும் ஜெயலலிதாவையும் காத்தவர் மோடி : பரபரப்பு பின்னணி என்ற தலைப்பில் மதவெறி மோடியின் ஜால்ரா தினமலர் செய்தி இது 


அதாவது தமிழக உளவுத்துறை, உளவு செய்திகளை உலக நாடுகளால் விரட்டி அடிக்கப்பட்ட மோடி இடம்தான் தெரிவிக்கின்றனராம்..


தமிழ்நாட்டு உளவுத்துறை - அரசாங்க ரகசியங்களை குஜராத் முதலமைச்சர் மோடியிடம் ஏன் சொல்லவேண்டும்? மோடியா இங்கு ஆட்சி செய்கிறார்? 

அப்படியென்றால் தமிழ்நாட்டில் முதலமைச்சராக ஜெயலலிதா எதற்கு? வீண் தேர்தல் எதற்கு?  இதற்க்கு தினமலம் தான் பதிலளிக்க வேண்டும் 


Tuesday, December 20, 2011

மம்பட்டியான் - காலத்துக்கு பொருந்தாத கதை!






1980 - களில் வெளிவந்த மலையூர் மம்பட்டியான் கதையை, தூசுதட்டி தன் மகனுக்காக தந்தை இயக்கி இருக்கும் மம்பட்டியான் - தலைவலிக்கு 100 % கேரண்டி..!



அந்த படத்தின் இயக்குனர் ராஜசேகரின் இயக்கத்திற்கும் இந்த படத்தின் இயக்குனர் தியாகராஜனின் இயக்கத்திற்கும் வேறுபாடு ஆறு வித்தியாசங்கள அல்ல..நூறு வித்தியாசங்கள்..



தனயன்களின் மார்கெட்டை தூக்கி நிறுத்துவதர்க்காக இந்த தந்தைமார்கள் பண்ணும் அட்டூழியம் சினிமாக்களில் ரொம்பவே அதிகம்..

தேவையில்லாத பில்டப் காட்சிகளால் படம் மிக செயற்கைத்தனமாக சொதப்புகிறது..

பழைய தியாகராஜனின் தோற்றத்திற்கு அந்த முரட்டுத்தனமான பாத்திரம் பொருந்திய அளவுக்கு இந்த படத்தின் நாயகனுக்கு சிறிதும் பொருந்தவில்லை..படத்தில் நடித்தவர்கள் அனைவரும் ஏதோ வந்தோமோ போனோமோ என்றிருப்பதுபோல தெரிகிறது..



பழைய மலையூர் மம்பட்டியான் படத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் அழுத்தம் தெரிந்தது..ஆனால் தன் மகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே எடுக்கக்கப்பட்ட இந்த படத்தில் அனைத்தும் சொதப்பலாகவே அமைந்திருப்பது நகைச்சுவைக்குரியது..

அரசியல் புயலில் காணாமல் போன வைகைபுயல் வடிவேலுவின் நகைச்சுவை வெறுப்பேற்றவே செய்கிறது..

கவர்ச்சி நடிகையின் பாத்திரம் அருவருப்பூட்டுகிறது..

 ஒரு தரமற்ற படம் இது..

மேலும் கொள்ளைக்காரர்களை ஆதர்சன நாயகனாக்கும் ஒரு பொறுப்பற்ற நோக்கில் எடுக்கப்பட்டிருக்கும்  - இந்த காலத்துக்கு பொருந்தாத கதையினால் ஏதோ தெருக்கூத்து பார்த்த எண்ணமே மேலோங்குகிறது..