Pages

Tuesday, October 18, 2011

நடு நிலைமை என்னும் நயவஞ்சகம்



ஆறு மாதங்களுக்கு முன்புதான் தமிழக சட்ட மன்ற தேர்தல் நடைபெற்றது..அப்போது இவ்வளவு அலப்பறை இல்லை...ஒலிபெருக்கிகளின் - ஒட்டுப்பொருக்கிகளின் கூக்குரல்கள்  இல்லை...பணம் பட்டுவாடா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது...
அப்போது தேர்தல் ஆணையத்தை வானாளவப் புகழ்ந்த ஊடகங்கள் - இந்த உள்ளாட்சி தேர்தலின்போது - பல்வேறு கட்சிகள் மீண்டும் காட்டுக்கத்தல்கள், ஒலிபெருக்கிகளின் அலறல்கள் சாலைகளை ஆக்கிரமித்து பொது மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியபோது, இப்போது மெளனமாக இருக்கும் மர்மம் புரியவில்லை..

கருணாநிதி ஆட்சியில் அத்துமீறல்கள் நடைப்ற்று இருக்கலாம்...அதற்க்கு தேர்தல் ஆணையம் உண்டாக்கிய கட்டுப்பாடுகள் தேர்தல் நியாயமாக நடைபெற காரணமாக இருந்திருக்கலாம்..ஆனால் ஜெயலலிதா ஒன்றும் உத்தமரல்லவே..தில்லுமுல்லுகள் தெரியாத பண்பாளர் அல்லவே..? 

இப்போது மட்டும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஏன்? 

அப்போது நடுநிலைமையோடு இருந்த தேர்தல் ஆணையம் இப்போது நடுநிலைமை தவறியது ஏன்?

இந்த வருடம் கட்டுப்பாடுகளை களைய காரணமாக இருந்தது எது? தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் கருணாநிதிக்கு மட்டும்தானா?

கருணாநிதியை காய்ச்சு காய்ச்ச்சிய மா மேதாவிகளான பதிவர்களும், ஆபாச பத்திரிக்கைகளும், கருணாதியை தாக்கும்போது முக்கியமான ஒன்றை சொல்வார்கள்..அது மின் வெட்டு..
ஜெயலலிதா வந்தவுடன் மின் வெட்டு நின்றுவிட்டதா?

விலை வாசி குறைந்து விட்டதா?
நாட்டில் அராஜகங்கள் ஒழிந்துவிட்டதா?

இப்போது பொதுமக்களுக்கு மின்சாரம் தேவை இல்லையா?
நாட்டில் பொறுக்கியிசம் ரவுடியிசம் ஒழிந்து விட்டதா?
விலைவாசி இறங்கி விட்டதா?
எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்று விட்டார்களா?
விடுதலைப்புலிகளுக்கு தனி ஈழம்  கிடைத்து விட்டதா?
ராஜ பக்ஷே தண்டிக்கப்பட்டு விட்டாரா?
எங்கேடா உங்களது அலறல்கள்?
இப்போது என்ன பயம்?

நடுநிலைமை என்று ஏமாற்றும்  நயவஞ்சகவாதிகள்தானே நீங்கள்?
தேர்தல் வந்தால் கூக்குரலிடும் கோமாளிகள்தானே?



0 comments :

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?