Pages

Tuesday, December 31, 2013

மூடர் கூடம் - முட்டாள்களின் தேசம்



சன் லைப் தொலைக்காட்சியில் பழைய படங்களை பார்ப்பது அலாதியான சுகம்தான்....
அப்படித்தான் எம்ஜியார் நடித்த  "நீரும் நெருப்பும்"  என்ற படமும், சிவாஜி கணேசன் நடித்த "திரிசூலம்" என்ற படமும் பார்க்க நேர்ந்தது....

அந்தகாலத்தில் சீரியசாய் பார்க்கப்பட்ட படங்கள் இன்று  விழுந்து விழுந்து சிரிக்கும்  விதாமாக இருப்பதுதான் வேடிக்கை...
நீரும் நெருப்பும் படத்தில் - இரட்டையர்களாக பிறந்த இரண்டு எம்ஜியாரில் அண்ணனனுக்கு அடித்தால் தம்பிக்கு வலிக்குமாம்...
அதிலும் அசோகனின் நடிப்பு உச்சக்கட்ட காமெடி....."இங்கே வாடா " என்று சொல்வதற்கு கூட 70 mm  அளவுக்கு வாயை இளிப்பது மகா கொடுமை...

ஆனால் எம்ஜியார் படங்களில் ஒரு குறிப்பிட்ட பார்முலாவை கடைபிடித்தே வந்து இருக்கிறார்...எக்காரணத்தை கொண்டும் தனது கைகளால் வில்லனை  - அவன் எப்படிப்பட்ட நரேந்திர மோடி (பயங்கரவாதி)யாக  இருந்தாலும்கூட தன்  கைகளால் கொலை செய்ய மாட்டார் ....ஒன்று அவனாக விபத்தில் சிக்கிக்கொள்ளவேண்டும்...அல்லது போலிஸ் கைது செய்து சட்டத்தின்படி தண்டிக்க படவேண்டும்...

அப்படித்தான் அவரது பெரும்பாலான திரைப்படங்களில் - இறுதிக்கட்ட காட்சியில், ஏராளமான டிரம்கள் அடைக்கப்பட்ட கிடங்குகளில் - சர்கஸ் போல குட்டிகாரணம் அடித்து போலிஸ் வந்தவுடன் அவைகள் கையில் ஒப்படைக்கும் வண்ணமாகதான் இருக்கும்...

வில்லன் என்பவன் எல்லாவிதமான அநியாயங்களும் செய்பவனாகவும், கதாநாயகன் என்பவன் தன்னை கடிக்கும் எறும்புக்கும் துரோகம் செய்யாதவனாகவும் - படங்களில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கான்பவனாகவுமே உருவாக்கம் செய்யப்பட்டார்கள்....(இந்த பார்முலா மட்டும் இன்றுவரை கடை பிடிக்கப்படுகிறது ) அதாவது கதா நாயகிகோ, அல்லது வேறு எவருகோ  பிரச்சினை எனில், படம் பார்த்துக்கொண்டிருக்கும் நாம் கூட கதாநாயகன் வரமாட்டான என்று நினைக்க வைக்கப்பட்டுள்ளோம்....இது தமிழனின் அனிச்சை செயலாகவே மாறிவிட்டது...அதன் தொடர்ச்சிதான் திராவிட இயக்கங்களின் வளர்ச்சி, அண்ணா , கருணாநிதி  எம்ஜி ஆர், ஜெயலலிதா போண்டோரால் முதல்வராக ஆக முடிந்தது... இன்னும் சினிமா கூத்தாடிகள்தான் நாளைய முதல்வராக வரவேணும் என்று டாஸ்மாக் அடிமைகளின் லட்சியமாகவும் ஆனது.....

உலகத்திலேயே நல்லவன் மற்றும் மாவீரன் கதாநாயகன் மட்டும்தான்   என்ற பிம்பம்  சிறிதளவு சிதைக்கப்பட்டது சிவாஜி கணேசனின் படங்களில்.
கோழையாகவும், முட்டாளாகவும் , குடிகாரனகாவும், திருடனாகவும் கதாநாயகன் இருக்கலாம் என்று சிவாஜி கணேசன் படங்களில் காட்சிபடுத்தப்பட்டன..அதை சிவாஜி படங்களில் மட்டும் ஏற்றுக்கொண்ட - மறத் (துப்போன)தமிழன்  - அப்படி எம்ஜியார் நடித்ததாலோ நிராகரிக்க தயங்கவில்லை...

போறபோக்கில் திரிசூலத்தை மறந்து விட்டேன்.....

சிவாஜிகணேசன் மூன்று வேடங்களில் நடித்து பெரிய வெற்றி பெற்ற படம் "திரிசூலம்"- 1980 களில்  மிக பரபரப்பாக பேசப்பட்ட படமும்கூட...

அதிலும் நாங்களெல்லாம் சிறு பிள்ளைகளாக  இருக்கும்போது, - சிறிய குதிரை வண்டிகளில் திரிசூலம் படத்திற்கான விளம்பரம் மிக பரப்பாக இருக்கும்.  "சிவாஜி - K.R. விஜயா "- தொலைப்பேசி காட்சிகளை பார்க்க தவறாதீர்கள் என்று விளம்பரம் செய்வார்கள்....

உணர்ச்சி பிழம்பாக சித்தரிக்கப்பட்ட அந்த காட்சியை சமீபத்தில் பார்க்கும்போது வந்த சிரிப்பை அடக்கவே முடியவில்லை....
"சுமதீ " என்று நடிகர்திலகம் சொன்னவுடன், டெலிபோன் ரிசீவரை தூக்கி போட்டு விட்டு அதைபிடிக்க முடியாமல் "K.R. விஜயா" துடிப்பது  நம்பர் ஒன்  நகைச்சுவை....

மீதி உள்ள இரண்டு சிவாஜிகள் அண்ணன் தம்பிகள்..அதில் ஒரு சிவாஜி குரும்புக்காரராம்...குறும்பு என்றால் முகத்தை அஷ்டகோணலாக அடிக்கடி மாற்றிகொள்ளவேண்டுமாம்...சகிக்க முடியவில்லை...
தனது தொப்பையை தூக்க முடியாமல் - காதல் காட்சிகளில் நடிப்பதை அந்தக்கால தமிழன் எப்படித்தான் சகித்துகொண்டானோ தெரியவில்லை....(அப்போது இப்போது உள்ளமாதிரி டாஸ்மாக் கடைகளும் அவ்வளவாக இல்லை...கள்ளுக்கடைகள்தான்  )

அதிலும் அந்த இறுதிக்காட்சி ..இதுபோன்ற வயிறுகுலுங்க வைக்கும் நகைச்சுவை காட்சி வேறு எந்த படத்திலும் வந்திருக்குமா எனபது சந்தேகமே...

இரண்டு சிவாஜிகளின் தாய் தந்தை, மற்றும் ஒரு சிவாஜியின் காதலி ஆகியோரை வில்லன்கள் கடத்திக்கொண்டு வைத்துக்கொண்டு, .மிரட்டுவார்கள்...அவர்களை காப்பாற்ற செல்லும் இரண்டு சிவாஜிகளும், "இரண்டு கைகள் நான்கானால் - இருவருக்கேதான் எதிர்காலம்" என்று பயங்கர ஜால்லியாக பாட்டுப்படிக்கொண்டு செல்வார்கள்.. தாய் தந்தையை காப்பாற்ற செல்லும் லட்சணம்...

படத்தின் காட்சிகள் டெல்லி மற்றும் காஷ்மீர் என்று சொல்லப்பட்டாலும், வில்லன், கதாநாயகன்,  கதாநாயகி,போலிஸ் என்று அனைவரும் தமிழில்தான் பேசிக்கொண்டு இருகிறார்கள்... ஒருவேளை  - ராஜ ராஜ சோழன் கிமு 25000 த்திலேயே காஷ்மீரை ஆண்டு கொண்டு தமிழை ஆட்சி மொழியாக்கி வைத்திருந்தானோ என்னவோ..யார் கேட்பது ..உட்டு  அடிக்க வேண்டியதுதானே....

இப்படி சிவாஜி எம்ஜியார் சகாப்த காலங்களிலேயே தொடர்ந்து  கமல் , ரஜினி என்ற கூத்தாடிகளின் காலங்களில் காதலில் காமத்தை அதிகம் வெளிப்படுத்துவதால் கமலஹாசன் காதல் மன்னன் என்னவும், சாராயத்தையும் , சிகரெட்டையும் பிரபலப்படுத்தி தமிழ்நாட்டு குடிகார இளைஞர்களை மேலும் பொறுக்கிகளாக மாற்றியதால் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் எனவும், தமிழக குடிகாரர்களாலும், ஆபாச பத்திர்க்கை நாய்களாலும் கொண்டாடப்பட்டனர்...

கமல், ரஜினி வரிசையை தொடர்ந்து, வில்லனாகவும், குடிகாரர்களாகவும் அறியப்பட்ட  விஜயகாந்த்,சத்யராஜ் போன்றோர்கள் மக்களுக்கு நல்லது செய்யும் உத்தமர்களாக - அதாவது குடிகாரனாக இருந்தாலும், திருடனாக இருந்தாலும், கொலைகாரனாக இருந்தாலும்,  - கதாநாயகன் என்றால் அவன் செய்யும் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே என்று முட்டாள் தமிழன் மூளை சலவை செய்யப்பட்டான்....

அந்த ஊடக பயங்கரவாதத்தின் தொடர்ச்சிதான், இன்று டாஸ்மாக்கில்  மூழ்கி,அரிவாளை தூக்கிக்கொண்டு வீரவசனம் பேசும் பொறுக்கிகள்தான் படத்தை தாங்கும் கதாநாயகனாகவும், அவனை உருகி உருகி காதலிக்கும் கதாநாயகி பேரழகியாகவும், இருக்கிறார்கள்....

2013 ஆம் வருஷத்தின் டாப் 10 மனிதர்கள் என்றதலைப்பில் - நீதிபதி சந்துரு அவர்களை குறிப்பிடும் அதே ஆபாச விகடன்,  "சிவகார்த்திகேநயன் என்ற கூத்தாடியையும் அதே லிஸ்டில் கொண்டு வந்து தனது ஆபாச அரிப்பை தீர்த்து கொண்டிருக்கிறான்...

NDTV  எனும் மிகக்கேவலமான டிவி சேனல் - சிறந்த மனிதர் என்று குடிகார கூத்தாடிகள்  ரஜினி, ஷாருக்கான் போன்றவர்களுக்கு இந்தியாவின் ஜனாதிபதியை வைத்து விருது வழங்கி தனது விபச்சார புத்தியை வெளிச்சம் போட்டு காட்டுகிறான்.

ஒரு வருட இறுதி என்றாலே சினிமாதான் என்று தமிழனை மூளைச்சலவை செய்து அவனை மூடனாக்கி கொண்டிருக்கும் ஆபாசப்பத்திரிக்க்காகளும் இந்த முட்டாள் தேசத்தின் நான்காவது தூணாக ஆராதிக்கப்படும் அவலத்தை என்னவென்று சொல்லலாம்?

தாம் செய்வது தேச துரோகம் என்று கூட விளங்காமல், விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்காக ஊளையிடும்  தன்மான(மிழந்த) தமிழன்,  சாலைகளில் சக தமிழனைப் பார்த்து முதலில் பேசும் வார்த்தையே "ங்கோ ...தா....தே .....யலே  " என்ற தமிழ் தேசிய வார்த்தைகள்தான் என்பதை  எத்தனை டாஸ்மாக் அடிமைகள் உணர்ந்திருக்கிறார்கள்?

இதோ தமிழ்பற்றை வளர்க்க, 2014 ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்க டாஸ்மாக் கடைகளை நோக்கி விரைந்து விட்டான் மரத்துப்போன தமிழன்.....

நாளைமுதல் குடிக்கமாட்டேன் என்று சபதமெடுக்க போகிறான்....
கோவில்களிலும் சர்ச்சுகளிலும் அதிகாலையிலேயே நின்று தனது பக்தியை வெளிப்படுத்திவிட்டு எப்போதடா மாலை வரும் டாஸ்மாக் கடைக்கு செல்லாமாமே என்ற எண்ணத்தில் புத்த்டாண்டை துவக்கும் அனைத்து டாஸ்மாக் தமிழனுக்கும் .....WISH YOU HAPPY NEW YEAR.. வாழ்க தமிழ்....


2 comments :

ஜெய்லானி said...

சமீபத்தில் ஒருவர் சமூகத்தின் அவலங்களை படம் எடுத்து விட்டு அதை வெளியிட தியேட்டர் கிடைக்காமல் கடந்த 2 வருடமாக திண்டாடி கல்லூரி மாணவர்களிடம் பணம் வசூலித்து வருவதாக படித்தேன். ஒரு நல்ல பொழுது போக்கு , குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்க என்று இல்லாமல் சினிமா என்பது ஒரு வகை வியாபாரமாக போய் பலகாலமாகி விட்டது, இதை தமிழணும் ஏற்றுக்கொண்டான் என்பதே உண்மை .

ஜெய்லானி said...

பிளாகை திறந்தால் ஸ்பீக்கரில் கண்ணம்மா பேட்டை சவுண்ட் கேட்குது ...

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?