Pages

Friday, April 20, 2012

தொடரும் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் தேச துரோக சதி..

தினமும் தினசரியில் கள்ளகாதல்கள் கொலைகள் பற்றிய செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன..கள்ளகாதலுக்காகவும், இன்னும் வேறு சில காரணங்களுக்காகவும், கொலையாளிகள் எவ்வளவுதான் திட்டமிட்டு கொலைசெய்து அதை மறைக்க திட்டமிட்டாலும் கடைசியில் மாட்டிக்கொள்கிறார்கள்..

நானும் தினமும் செய்திகளை படிக்கும்போதெல்லாம் இத என்னணம் தோன்றும்..என்னடா இப்படி அடிக்கடி நிறைய கொலைகாரர்களும், திருடர்களும் மாட்டிக்கொண்டாலும், இன்னும் தொடர்ந்து எப்படி இவர்கள் இவ்வளவு தைரியமாக கொலைகளை செய்கிறார்கள் என்று..

இதற்க்கு காரணம் இங்குள்ள சட்டங்கள்தான்..ஒவ்வொரு குற்ற செயல்கள் செய்யும்போதும் அந்த குற்றவாளி தண்டிக்கப்படுவதற்கு பதிலாக இன்னும் பிரபலப்படுதப்படுகிறான்..ஜெயிலில் அவனுக்கு சகல வசதிகளும்  கிடைக்கின்றன..

எப்படியாவது ஜாமீன் கிடைத்து அவன் வெளியே வரும்போது இன்னும் பெரிய ரவுடியாக கொலைகாரனாக ஆகவேண்டும் என்ற லட்சியம்தான் அவனிடம் வளர்கிறதே தவிர அவன் திருந்தியாக வேண்டும், அல்லது அவனுக்கு கிடைக்கும் தண்டனையைப் பார்த்து குற்றம் செய்ய நினைப்பவனும் பயப்பட வேண்டும் என்கிற அளவுக்கு இந்த நாட்டில் குற்றவாளிகளுக்கான தண்டனைகள் இல்லை..

அதனாலேயே நல்ல செய்திகள் வரவேண்டிய பத்திரிக்கைகள் ஆபாச செய்திகளையும், கொலை கொள்ளை செய்திகளை மட்டுமே தந்து கொண்டிருக்கின்றன..
 தண்டனைகளில் கடுமைகள் இருந்தால்தான் குற்றங்கள் குறையும் என்பதை மனித உரிமை பேசுவோர் உணர்ந்ததாக தெரியவில்லை..
ஒருவனை கொலைசெய்ய விட்டு விட்டு - தண்டிக்கப்படும்போது அவனுக்காக வக்காலத்து வாங்கி, இதற்க்கு இந்த சமூகமும், சட்டமும், பொதுமக்களும்தான் காரணம் . இவர்களைத்தான் தண்டிக்க வேண்டும்..குற்றவாளி அப்பாவி என்ற ரீதியில் கிறுக்குத்தனம் பேசி குற்றவாளிகளை வளர்த்து வருகின்றனர்..


மகாத்மா காந்தியை ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி - நாதுராம் கோட்சே என்பவன், இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரை பச்சை குத்திக்கொண்டு கொலை செய்து பழியை முஸ்லிம்கள் மீது போட திட்டமிட்டான்..

அவன் திட்டம் ஓரளவு வெற்றி பெற்றாலும், அந்த நேரத்தில் அவன் உயிரோடு பிடிபட்டு, இதற்க்கு காரணம் ஆர் எஸ் எஸ் என்ற  பயங்கவாத இயக்கம்தான் என்று தெரியவந்த போது அந்த பயங்கரவாத இயக்கம் தடைசெய்யப்பட்டது..

ஆனால் இந்நாட்டின் சட்டங்களில் உள்ள குளறுபடிகளின் காரணமாக அந்த இயக்கம் மூன்று முறைகள் தடை செய்யப்பட்ட் போதும் மீண்டும் மீண்டும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது..

மாலேகான் குண்டு வெடிப்பு, அஜ்மீர் குண்டு வெடிப்பு, ராஜஸ்தான் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் குண்டு வெடிப்பு, தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலக குண்டுவெடிப்பு என்று ஆர் எஸ் எஸ் பயங்கரவாத இயக்கம் தொடர்ந்து குண்டு வைத்து முஸ்லிம் இயக்கங்கள் மீது பழியை போட முயற்ச்சித்தாலும், - அவர்களின் சதி பெரும்பாலும் அம்பலப்பட்டு விடுகிறது..ஆனாலும் அவர்கள் திருந்துவதாக இல்லை..இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊருவிளைவித்துக்கொண்டே இருகின்றனர்.

இதற்க்கு காரணம் நமது அரசியலமைப்பும், ஆள்வோரின் காவிச்சிந்தனையும்தான்.

குண்டுவெடிப்பின்போதும், கலவரத்தின்போதும், முஸ்லிம் இயக்கங்களின் மீது முட்டாள்தனமாக பழி போட்டு அலறும் ஊடகங்கள் உண்மை நிலை தெரியும்போது ஊமையாய் இருக்கும் காரணம் அவர்களின் இரத்தங்களிலும் காவி சிந்தனைகளே ஓடுகின்றன எனபது காரணமாக இருக்கலாம்..


இந்த செய்தியை பாருங்களேன்..

அண்மையில் ஹைதராபாத் நகரில் ஹிந்து முஸ்லிம் மக்கள் இடையே பெரும் கலவரம் மூண்டதாகச்  வெளியாகின.
அதற்குக் காரணமாக கோவிலில் யாரோ மாட்டிறைச்சியை வீசியதால் முஸ்லிம்கள் தாம் அவ்வாறு வீசியிருக்க வேண்டும் என்று கருதி ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தால் பலரும் படுகாயமடைந்தனர். பல சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில் கலவரத்துக்குக் காரணமான மாட்டிறைச்சியை, பகதூர் புரா கோவிலில் வீசி முஸ்லிம்கள் மீது பழியைத் திருப்பிவிட்ட G.சிவகுமார் (எ) ராகேஷ், வயது 19,என்னும் இந்துத்துவா பிடிபட்டுள்ளார். ஆர் எஸ் எஸ் தொண்டரான சிவகுமார் என்கிற ராகேஷ்,ஹைதராபாத் "பகதூர்புரா" கோவிலில் மாட்டுக்கறியை வீசியதோடல்லாமல், "யாரோ கோவிலில் மாட்டுகறியை போட்டுள்ளனர்" என மக்களிடம் விஷமம் பரப்பி கலவரத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.விஷமி சிவகுமார் மீது இபிகோ 153/A மற்றும் 295 ஆகிய சட்டப்பிரிவுகளின்படி, (Crime No 83/2012) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


2 comments :

thiyagarajan.s said...

ஆந்திராவிலே காங்கிரஸ் ஆட்சிதானே நடக்குது...அங்க எது வேண்டுமானாலும் நடக்கும்....தேவையேற்பட்டால்
அமைதியின் நாயகர், சன்மார்க்க காவலர் கசாப் நானாவை சாக்லேட்டால் அடித்தார்ன்னு அத்வானி மேல கூட கேஸ் போடுவானுங்கப்பா....

Alex said...

unmai nanba... muslim nanbargalai matum kutravaligalaga parkirathu inta samuthayam...

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?