Pages

Thursday, October 4, 2012

புகைப்படம் எடுப்பவன் தீவிரவாதி என்றால் திரைப்படம் எடுப்பவன்? .....

சமீபகாலமாக நமது நாட்டில் நடைபெற்று வரும் கைது சம்பவங்களைப்பார்த்தால் நடப்பது ஒரு காமெடி தர்பார் எனபது போலத்தான் புலப்படுகிறது..

சில வாரங்களுக்கு முன்பு இராணுவ ரகசியங்களை புகைப்படம் எடுத்ததாக அதிராம்பட்டினத்தை சார்ந்த அன்சாரி என்பவரை தீவிரவாதி என்று போலீசார் கைது செய்தனர். சினிமாவில் ஆர்வம் உள்ளவரான அவர் ஒரு வெங்காய வியாபாரி..அவர் எடுத்து வைத்திருக்கும் புகைப்படங்களை விட, கூகுள எர்த்தில் அதிக தகவல்கள் கிடைக்கும். அல்லது பாக்கிஸ்தான் எல்லையிலேயே குடி இருக்கும் - கேப்டன் படங்களில் இருக்கும்..அல்லது, சுப்ரீம் ஸ்டார் அல்லது ஆக்ஷன் கிங் படங்களில் இதை விட அதிக தகவல்கள் இருக்கும்..

இது போன்ற கூத்தாடிகளுக்கெல்லாம் விருதுகளும் வி ஐ பி (ஆபாச விகடன் கூத்தாடிகளுக்கு வழங்கும் பட்டம்) என்ற மரியாதையும் வழங்கிவிட்டு, இது போன்று புகைப்படம் எடுப்பவரை எல்லாம் தீவிரவாதி என்று காமெடி பண்ணுவது போலிஸ் இலாகாவின் அறியாமையைத்தான் காட்டுகிறது

அதே போல "ட்ரீம் லைனர்" என்ற விமானாத்தை புகைப்படம் எடுத்ததற்காக இருவரை தீவிரவாதிகள் என்று கைது செய்திருக்கின்றனர் நமது போலீசார்.

விமானம் கடத்துவது எப்படி? குண்டு வைப்பது எப்படி, ? அரசியல் தலைவர்களை கொள்வது எப்படி? குழந்தைகளை கடத்துவது எப்படி, அவர்களை வைத்து பெற்றோர்களை மிரட்டி பணம் சம்பாதிப்பது எப்படி,? கொலை செய்வது எப்படி ? திருடுவது கொள்ளை எடுப்பது எப்படி,? என்பதை சீரியசாகவும் காமெடி என்ற பெயரிலும் சினிமாப் படங்களை எடுத்து சம்பாதித்து பயங்கரவாத செயல்களை சினிமா மூலமும் டிவி மூலமும் இளைஞர்களுக்கு சொல்லி கொடுத்து வரும் சிநிமாக்கூத்தாடிகளுக்கு அரசு மரியாதை, விருது என்று வழங்கிவிட்டு - இது போன்ற புகைப்படம் எடுப்போரை கைது செய்து என்னத்தை  கிழிக்க போகிறார்கள் இந்த மத வெறியர்கள்?
அதுவும் இவைகளில் சம்மந்தப்பட்டவர்கள் முஸ்லிம்கள் எனும்போது இங்குள்ள ஆபாச ஊடகங்களின் கற்பனைகளை என்னவென்று சொல்வது?



0 comments :

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?