Pages

Friday, October 19, 2012

தந்தையும் மகளும் காதல் ஜோடியாக நடிக்கும் திரைப்படம் - இதைவிட கேவலம் உண்டா?



எஸ் எ சந்திரசேகர் என்ற இயக்குனர் தனது மகனை நடிகனாக்க பல ஆபாச காட்சஈகளை புகுத்தி ஏறக்குறைய நீலப்படம் போன்றே பல தமிழ்படங்களை தந்தார்...


டி.ராஜேந்தர் தமது மகனை காதல் காட்சியில் நடிக்கவைத்து - தந்தைக்குரிய கடமையாற்றினார்...
பாக்யராஜ் தமது மகளையும், மற்றொரு நடிகனுடன் நடிக்கவைத்து புளங்காகிதமடைந்தார்..
ரஜினி என்ற வயதான ஒரு நடிகருடன் தனது மருமகள் கூத்தடித்ததை கைத்தட்டி மகிழ்ந்த சினிமா பாரம்பரிய பிக் பீ....அமிதாபட்சனை பார்த்தோம்..

அதுபோல தனது தோழியை தனது கணவனுடன் எவ்வளவு ஆபாசமாக நடிக்க வைக்க முடியுமோ அப்படி செய்த ரஜின்காந்தின் மகள் ஐஸ்வர்யாவை கண்டோம்..

சத்யராஜும் அவர் மகன் சிபியும் சேர்ந்து நமிதா என்ற நடிகையை ஜொள்ளுவிட்டு நடித்து கலைச்சேவை புரிந்து தமிழ் சேவையும் புரிந்து வருகிறார்கள்...

இதுபோன்ற கலை செவகர்களைஎல்லாம் விஞ்சிவிட்டார் ஒரு கன்னட படத்தயாரிப்பாளர்....

பி பி ஸ்ரீனிவாஸ் என்ற ஒரு கேவலமான ஒரு நடிகனே  "முஸ்சென்ஜெயா கெலாதி" என்ற கன்னடப்படத்தை தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்து தான் பெற்ற மகளையே தனக்கு ஜோடியாக்கிக்கொண்டு கட்டிபிடித்து ஆபாச காட்சிகளில் நடித்து தந்தை மகள் உறவையே கேவலப்படுத்தி உள்ளான்..இதற்க்கு இவன் மகளான ஷாலினி என்பவளும் சேர்ந்து கூத்தடிப்பதுதான் அவலத்திலும் அவலம்...

ச்சே..எப்படி இந்த கூத்தாடிகளுக்கு பெற்ற மகளையே காமக்கண்ணுடன் பார்க்கும் மனம் வந்திருக்கிறது..கலை என்ற பெயரில் கூத்தடிக்கும் இந்த சினிமாகூத்தாடிகளின்  அந்தரங்கம் இதைவிட இன்னும் கேவலமாக இருக்கும் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? 

சினிமா உலகம் கேவலமான உலகம் மட்டுமல்ல - கேடுகெட்ட உலகம் என்பதையும் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருப்பது தமிழ் மூடர்களின் தலைஎழுத்து...


7 comments :

கவிதை வானம் said...

சினிமா உலகம் கேவலமான உலகம் மட்டுமல்ல - கேடுகெட்ட உலகம் என்பதையும் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருப்பது தமிழ் மூடர்களின் தலைஎழுத்து...
உண்மையான ஆதங்கம்

ஹாலிவுட்ரசிகன் said...

ஆத்தீ ... இது உலகமகா கேவலமாயிருக்கே? சே ...

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

ஆன்மநேய அன்புடைய சகோதரர் அவர்களுக்கு வணக்கம் ,உங்கள் எண்ணங்களும் சிந்தனைகளும் மிகவும் வரவேற்கதக்கது.இன்று மனித சமுதாயம் நாகரிகமற்ற செயல்களுக்கு காரணம் ,சினிமாதான் என்பது யாராலும் மறுக்க முடியாது ,மக்களின் பணத்தை கொள்ளை அடிக்க சினிமாக்காரர்கள் செய்யும் சூழ்ச்சி கேவலமானதாக இருக்கிறது ,அசிங்கம் நிறைந்த ஆபாச காட்சிகளும் அதைக் காட்டி பணம் சம்பாதிக்கும் கேவலமான செயல்களும் என்று ஒழிந்து போகுமோ தெரியாது.உழைக்காமல்,உடம்பைக் காட்டி கோடிக்கணக்காக,பணம் சம்பாதிக்கும் தொழில் ஒரு தொழிலா ?இதையும் மக்கள் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .நடிகன்,நடிகை என்றால் தெய்வம்போல் பார்க்கும் மனிதர்களும் இந்த நாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .கலைக் கூத்தாடிகளுக்கு,நாட்டில் உள்ள மக்கள் அடிமை பட்டு கிடக்கும் நிலைமை மாற வேண்டும் .மாறியே தீரும் .மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .எதுவும் சிலகாலம் .பலநாள் திருடன் ஒருநாள் சிறையில்.பாவம் செய்தவன் வாழ்நாள் வரையில் .என்பதுபோல் இவர்களுக்கு நல்ல கதி கிடைக்காது .எல்லாம் உண்மை ஒருநாள் வெளியாகும் .பொறுத்து இருந்து பார்ப்போம் .சினிமா தொழில் செய்வது விவப்சசாரம் செய்வதற்கு சமமாகும்.இதற்கு அங்கீகாரம் கொடுக்கும் ஆட்சியும் ,அதற்குத் தாளம் போடும் ஆதரவாளர்களும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் பாரும் .

அகல் said...

மிகவம் வருந்தக்கூடிய செய்தி..

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி...

பிரேமி said...

எங்கே போகிறது நமது தேசம்? பண்பாட்டிற்கு பெயர் போன நமது பாரதம் இப்போது சினிமாத்துறையினால் பெயர் கெட்டு கேவலமாய்ப் போய்க்கொண்டிருக்கிறதோ.....

mani said...

punishment is waiting for every one in devil.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?