Pages

Friday, September 2, 2011

ஊடக பயங்கரவாதமும், தேச துரோகிகளின் தற்காலிக வெற்றியும்..

இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?

தமிழ்பற்று என்றால் என்ன? இந்தியாவின் அனைத்து சட்டமீறல்களிலும் ஈடுபடுவதற்கு பெயர்தான் தமிழ்பற்றா?

ராஜீவ் காந்தியை கொன்ற பயங்கரவாதிகளுக்கு இருபது வருடங்கள் கழித்து தூக்குதண்டனை விதித்தால் அதை அவசர தீர்ப்பு என்று சொல்கிறது ஒரு கூமுட்டை..இருபது வருடங்கள் எனபது என்ன அவசரம் என்று தெரியவில்லை..

இதை தவறு என்று சொன்னால் நீ தமிழ்நாட்டில் வாழாதே பக்கத்து மாநிலத்துக்கு செல் என்று இன்னொரு "வால் முளைத்தது" ஓலமிடுகிறது...

சிங்களர்களை எதிர்க்க திராணியற்றதுகள் எங்கள் நாட்டிலே வந்து அராஜகம் பண்ணும், அதை தமிழ் பற்று, தொப்புள் கொடி உறவு என்று நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா ? அது என்னடா தொப்புள்கொடி உறவு..தமிழனுக்கு மட்டும்தான் தொப்புள் இருக்கிறதா? மற்றவனுக்கெல்லாம்   இல்லையா?  நீங்கள் தொப்புளை கொண்டாடும் லேட்சனம்தான் தெரயுமே.. ஆம்லேட் போடவும், பம்பரம் விடவும், மண்ணை அள்ளி கொட்டவும் நீங்கள் கொண்டாடும் ஆபாச திரைப்படங்களில் பார்த்திருக்கிறோமே..

ஏண்டா இவனை தூக்கில் போடவில்லை என்று கேட்டால் இறந்து போய்விட்ட மூப்பனாரும், வாழப்படியையும் விசாரி என்று சில மூளையற்றுகள் சொல்லிக்கொண்டு அலைகின்றன..

முகவரி இழந்த வைகோ சீமான் நெடுமாறன் போன்ற தேச துரோகிகளுக்கு இந்தியாவில் வேறு வேலையே இல்லை என்பதுபோல - , இந்த உலகில் வாழ வக்கற்று கோழைத்தனமாக தற்கொலை  செய்துகொண்ட சிலர்களின் வீட்டுகளுக்கு - நன்றாக மேக் அப் செய்துகொண்டு - முகத்தை சோகமாக வைத்துகொண்டு போய் போஸ் கொடுத்துக்கொண்டு வருகின்றன..மரணதண்டனை விதிக்கப்பட்ட பயங்கரவாதிகளை சந்திக்கின்றன..அவர்களின் குடும்பத்தினரை சந்திக்கின்றன. பயங்கரவாதிகளுக்காக அதிக கட்டணம் கேட்கும் வக்கீலா நியமிக்கின்ற வேலையை செய்கின்றன..

தற்கொலைகளை ஊக்குவிப்பதற்காகவே இந்த இந்திய தேச துரோகிகளுக்கு தனியான தண்டனை தரவேண்டும்..பற்றாதர்க்கு இந்தியாவில் தடை செய்யப்பட பயங்கரவாத விடுதலைப்புலிகள்  இயக்கத்திற்கு கைக்கூலிகளாக இருக்கும் இந்த துரோகிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது?


ஏண்டா நீங்களெல்லாம் இந்தியாவில் எல்லா சுகத்தையும் அனுபவித்துக்கொண்டே எப்படி இந்த நாட்டுக்கு துரோகம் செய்ய மனது வருகிறது? யாழ்பாணத்தில் போய் ஒட்டு பிச்சை எடுங்களேன்..
கோயமுத்தூர் இந்தியாவில்தானே  இருக்கிறது ? அங்கே பொய் வழக்கில் எத்தனை முஸ்லிம் மக்கள் அப்பாவிகள் - குற்றபத்திரிக்கைகூட தாக்கல் செய்யப்படாமல், சிறையில் பல வருடங்கள் இருக்கிறார்களே அவர்கள் விடுதலைக்கு நீங்கள் என்ன @#$%^ புடுங்கிநீர்கள் ? அவர்கள் எல்லாம் மக்கள் இல்லையா? 


இப்போதெல்லாம் லேட்டஸ்ட் பேஷன் பயங்கரவாதிகளுக்காக தீக்குளிப்பதாக (வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு இருக்கும்) நாடகமாடி தியாகி பட்டம் பெறுவது..அண்ணா ஹசாரே என்ற ஆர் எஸ் எஸ் கிழவனின் பேட்ஜை சட்டையில் குத்திக்கொள்வது 


பயங்கரவாதிகளுக்கு ஆதரவு என்றால் யாழ்பாணத்துக்கு கள்ளத்தோணியிலே ஏறிப்போ..அதுக்கு தான் வைகோ இருக்கிறானே..அங்கே போய் யாராவது சிங்களவன கொன்னுட்டு சாவு..இங்கே ஏன்டா எங்க நாட்டுல தீக்குளிச்சு எங்களை தொந்தரவு பண்றீங்க? 
தற்கொலை செய்யும் கோழைகளுக்கு கவிதை என்ற பெயரில் கிறுக்கி, இந்த நாட்டில்  பிறந்த உனக்கு இதுதான் சாபமா என்று இந்தியாவையே திட்டும் தேச துரோகிகளும் இந்த தமிழ் நாட்டில் வசித்து எல்லா சௌகரியங்களையும் பெற்று வாழ்கிறார்கள்..


ஏதோ நாலைந்து தேச துரோகிகள் தூக்குத்தண்டனையை நிறுத்து என்று இடும் கூக்குரலை ஏதோ  ஒட்டு மொத்த இந்தியாவின் கருத்துபோல சித்தரித்த ஊடகங்கள் அதைவிட ஒரு பயங்கரவாதத்தை செய்திருக்கின்றன.

கல்லூரிகளுக்கு கட்டடிக்க - தூக்குத்தண்டனை எதிர்ப்பு என்ற பெயரில் மாணவர்கள் என்ற சில காலிகள் பஸ் மறியல் ரயில் மறியல் என்று நாடகமிட, அதை பெரிது படித்தி பத்திரிகை பயங்கரவாதம் வேறு..



சி.பி ஐ பலவருடங்களாக விசாரித்து ஹை கோர்ட் மரணதண்டனை விதித்து, அதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்ததை இங்குள்ள தேச துரோகிகள் தவறான தீர்ப்பு என்று கூக்குரலிட்டு மீண்டும் ஹை கோர்டில் முறையிடுகின்றன..அதை ஹை கோர்ட்டும் ஏற்று மரண தண்டனனையை எட்டு வாரங்கள் தள்ளி வைக்கிறது? சுப்ரீம் கோர்ட்டை விட ஹை கோர்ட் அதிக அதிகாரம் பெற்றதா என்ன?

இந்த பயங்கரவாதிகளுக்காக ஒரு மணிநேரத்திற்கு பல லட்ச ரூபாய் கட்டணம் பெரும் ராம் ஜெத்மலானி என்ற வக்கீல் டெல்லியிலிருந்து வருகிறார்..இந்த கட்டணம் செலுத்த இந்த துரோகிகளுக்கு எங்கிருந்து பணம் வந்தது? இதை ஏன் இந்திய அமலாக்க  பிரிவோ சி.பி ஐ யோ இன்னும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை? 


அடுத்ததாக இன்னுமொரு பேஷன்..

அன்னா ஹசாரே என்ற ஆர் எஸ் எஸ் கிழவனின் உண்ணாவிரத நாடகத்தை பெரிது படுத்துவது..
காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணிவரை குளுக்கோஸ் தண்ணி குடித்து உண்ணாவிரதம் என்று ஏமாற்றி - மாலை ஆறு மணிக்கு மேல் வீட்டுக்கு போய் நன்றாக உண்டு விட்டு உண்ணாவிரத நாடகம் போடும் அத்வானியின் அடிமை அன்னா ஹசாரே யின் போலி உண்ணாவிரதத்தை இந்த ஆபாச பத்திரிக்கைகள் என்னமாதிரி விளம்பரம் செய்கின்றன?

பதினைந்து நாள் உண்ணாவிரதம் இருந்தால் இந்த கிழம் தாங்குமா? அதைகூட யோசிக்க மூளையற்ற ஜென்மங்களாக இந்த நாட்டு மக்களை மூளை சலவை செய்து ஊடகங்கள் பயங்கரவாதம் செய்கின்றன..

15 comments :

sundarmeenakshi said...

tamil nadil அனைத்து சட்டமீறல்களிலும் ஈடுபடுவதற்கு பெயர்தான் indiaya பற்றா? nanbara

மர்மயோகி said...

//undarmeenakshi said...
tamil nadil அனைத்து சட்டமீறல்களிலும் ஈடுபடுவதற்கு பெயர்தான் indiaya பற்றா? nanbara//

இந்தியாவில் அடைக்கலம் பெற்று பயங்கரவாதம் செய்து ஒரு தலைவரை கொன்றவர்களுக்கு மரணதண்டனை விதிப்பது சட்ட மீறலா? நன்றாக இருக்கிறது நண்பரே..

sundarmeenakshi said...

இதற்க்கு முக்கிய காரணம் விசாரணை வெளிபடையாக இல்லாதுதான் .
சராசரி நடுத்தர மக்கள் நம்ப தயார் இல்லை .ஒரு முக்கிய நபர் கொலை ,எந்த பெரிய தளைகளும் சிக்கவில்லை ,மிடில் கிளாஸ் நபர்கள் தூக்கு ? இதவும் ஒரு காரணம் .
ஆட்டோ சங்கர் கேஸ் ஒரு problem இல்லாம தூக்கு போடவில்லையா ?
இப்ப இவ்வள்ளவு problem ஏன் வருகிறது ?சிந்திக்கணும் நண்பா ?
அது மட்டும் அல்ல மீனவர் கொல்ல படும் சமயம் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை ,இது தண்ணிர் பகிருவு supreme கோர்ட் உத்தரவை மைய அரசு செயல் படுத்த முயாசிக்கவில்லை.இது போன்ற நிகழ்வுகள் தான் .மக்கள் கிட்ட ,மைய அரசு பற்றி தவறான அபிப்பராயம் ஏற்பட முக்கிய காரணம் .இது தவிர்த்து இதில் அரசியல் வேறு உள்ளது .11 வருட தாமதம் ஒரு கோப்பு சென்னை இருந்து டெல்லி சென்று முடிவு எடுக்க தேவை பட்டால் .எப்படி சாமானிய மக்களுக்கு அவர்களுக்கு தேவையான வேலை நடைபெறும்?அதுவும் உள்துறை ?சம்பளம் மாத மாதம் வாங்குகிறார்கள் இல்லியா ?
ஏன் வேலை செய்ய வில்லை ?இதற்க்கு மேல முக்கிய காரணம் தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் எங்களை கட்டுபடுதாது?அப்புறம் எப்படி மைய அரசு தமிழ் நாட்டை கட்டுபடுத்தும் ?இது தவிர அவர்கள் தவறு செய்திருந்தாலும் .21 வருடம் தனிமை சிறை இருந்துவிட்டார்கள் ,இனி தூக்கு போட்டால் ஒரு தவறுக்கு இரு தண்டனை அல்லாவா?
இப்பவும் நாங்கள் மனிக்கவும் மாட்டோம்ம்,மறக்கவும் மாட்டோம் என்றால் மன்னிகிறவன் மனிதன் மறக்கிறவன் கடவுள் என தெரியாதா ? இதற்க்கு மேல ஒரு தாய் உயிர் பிச்சை கேட்டு அழுவது உங்கள்ளுக்கு கேட்கவில்ல்யா நண்பா ?உங்கள் மகனுக்கோ ,மகள்ளுக்கோ,பேரனுக்கோ ,பேத்திக்கோ,என்றால் இப்படித்தான் அடம் பிடிபீர்கல (மனித தன்மை இல்லாத நபர் தான் இப்படி செய்ய இயலும் )நிங்கள் நல்ல மனிதரா? அல்லது ?

மர்மயோகி said...

நல்லது..
தவறு யார் செய்தாலும் அவர்கள் தண்டனைக்கு உரியவர்கள்தாம். இதை நான் பாசாங்குக்காக சொல்லவில்லை..இருபது வருஷம் அவர்கள் தண்டனை அனுபவித்தார்கள் என்று சொல்கிறீர்கள்..அப்படி என்றால் பிடிபட்ட அன்றே தூக்கில் போட்டிருக்க வேண்டுமா? சி.பி ஐ விசாரணை செய்து, ஐக்கோர்ட் தண்டனை வழங்கி, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து, ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டுதான் இவர்களுக்கு தண்டனை தீர்மானிக்கப்பட்டது..அதற்கே தேச துரோகிகள் இவ்வளவு களேபரம் செய்கிறார்கள்..இந்த பயங்கரவாதிகளுக்காக இந்தியாவையே - இந்தியாவின் சட்டங்களேயே அவமதிக்கிறார்கள்..
இந்த மூன்று பயங்கரவாதிகளும் என்ன செய்தார்கள் இந்த வைகோவும் அவன் குழுவும் இப்படி அவர்களை காப்பாற்ற முயர்ச்சிப்பதர்க்கு?
காரணம் இவர்களுக்கு பயங்கரவாத விடுதலைப்புலிகளிடம் இருந்து பிச்சை பணம் வருகிறது..
குஜராத்தில் மக்களை கொன்ற அயோக்கியன் நரேந்திர மோடி இங்கே சுலபமாக நடமாடி வருகிறான். அவனை தூக்கில் போடசொல்ல இந்த வைக்கொலுக்கோ, சினிமா கூத்தாடி சீமானுக்கோ வக்கில்லை..
ராஜபக்ஷேவை தூக்கில் போட சொல்லும் இந்த தேச துரோகிகளுக்கு - கொலை செய்த விடுதலைப்புலிகளிடம் மட்டும் மனிதாபிமானம் காட்டணுமாம்.
இருபது வருடம் ஆயுள் தண்டனை அனுபவித்ததாக சொல்கிறீர்களே..இந்த பயங்கரவாதிகளை பார்த்தால் அப்படியா தெரிகிறது..இந்தியாவின் மக்களின் வரிப்பணத்தில் நன்றாக உண்டு கொழுத்துகிடக்கிறார்கள்..தவறு செய்யாதவன் இப்படியா இருப்பான்?
தூக்கில் போட சொன்னால் எல்லாரையும் கூட்டி வா என்கிறீர்கள்..பிரபாகரன் என்ற மிகப்பெரிய பயங்கரவாதி கொல்லப்பட்டு விட்டான்..வேறு யாரை கொண்டு வரவேண்டும்..வைகோவையும் சீமானையும் பிடித்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் எல்லாம் வெளிப்பட்டு விடும்..
சரி உங்கள் கேள்விக்கே வருகிறேன்..
உங்கள் குடும்பத்தில் யாரையாவது இந்த பயங்கரவாதிகள் கொன்றிருந்தால் இப்படிதான் நீங்கள் அவர்களை காப்பாற்ற நினைப்பீர்களா?
அப்படியென்றால் நீங்கள் நல்லவரா அல்லது ?

sundarmeenakshi said...

உங்கள் குடும்பத்தில் யாரையாவது இந்த பயங்கரவாதிகள் கொன்றிருந்தால் இப்படிதான் நீங்கள் அவர்களை காப்பாற்ற நினைப்பீர்களா?
அப்படியென்றால் நீங்கள் நல்லவரா அல்லது ?
என் குடும்பத்தில் யாரையாவது இந்த பயங்கரவாதிகள் கொன்றிருந்தால். நிங்கள் கொன்றால்,
சும்மா கொலை வெறி ஏற்படும் எனக்கு .இது முதல் 5 வருடம் .
நேருக்கு நேர் பார்த்த நானா கொல்லனும் என தோன்றும் இது ஒரு next 5௦ வருடம்.
எல்லாரும் லூசா என் தூக்கு ?என் வேண்டாம் என்கிறாக்கள் என தொடரும் .
ஒரு அம்மா கண்ணீரோடு கருணை காடுங்கள் அதான் 20 வருடம் சிறை இருந்து விட்டான்.என்று கூறும் போது.மனம் சிறிது யோசிக்கும் .ஒரு 2 வருடம் யோசிக்கும்.
நிங்கள் தான் முடிவு எடுக்கணும் என்கிற பொழுது .நானும் மனதார சோனியா போல பாவம்.போன போகுது என விட்டு விடுவேன்

ஜெய்லானி said...

உங்கள் பதிவும் , கமெண்டுகளும் ஓக்கே..!! ஏன் இரெண்டு ஜனாதிபதியும் இதை தள்ளி வைத்தார்கள் ..? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்..!!


இதை நான் ஆதரிக்கவும் இல்லை , எதிர்க்கவும் இல்லை .

ஜெய்லானி said...

ஒரு முக்கியபுள்ளி பொது இடத்துக்கு வரும் முன்பே நிறைய அல்லக்கைகள் சுற்றி இருப்பார்கள். ராஜிவ் குண்டு வெடிக்கும் போது பக்கத்துல யாருமே இல்லையே ஏன் ..? வெறும் போலிஸ்+ பொது மக்கள்தானே இருந்தார்கள்..?

ஜெய்லானி said...

இதுக்கு(சதி) பின்னே அல்லது முன்னே யார் இருந்தார்கள்? சி பி ஐ எப்போதும் சரியான ஆட்களைதான் அடையாளம் காட்டுமா?

ஹர்சத் மேத்தா(இப்போ இந்த பேரே மறந்துப்போயிருக்கும்)
இன்னும் பலபேர் நாட்டையே கொள்ளை அடித்தவன்கள் அவன்களை பிடித்து தூக்கில் போட யாருமே வருவதில்லையே..???? இதே சி பி ஐ என்ன செய்து கொண்டு இருக்கு ?

இப்போது 2ஜி ,3 ஜிவாரி வெறும் கேஸ்தானே ஓடிக்கிட்டு இருக்கு ?

யோகியின் சாயல் said...

ம.யோகி இவனுங்க கெடக்கிறானுங்க காட்டுமிராண்டிகள் !

சொந்த தமிழ் மக்களையே கொன்று குவித்து போட்டி பொறாமையாலே அழிந்தொழிந்த காட்டேரிகள், இவனுங்க இன்னைக்கு வந்து மனிதாபிமானத்தைப் பற்றி பேசுறானுங்க??

தூக்குதண்டனை வேண்டாம் சரி இவய்ங்களை அபப்டியே கண்ணை கட்டி இலங்கையில விட்டுடலமா ???? துரோகிகள் !

heartripper said...

muthalil thamilil elutha mudiyavillai mannikavum.
Naan ninaithathai appadiyae eluthi irukeenga.
Anna hazare glucose kudichitu thoongunatha unnavirathamnu naadagam poduraru atha tv la live ah katranga(with ads).thuu maanam ketta pasanga tv pathutu aal aaluku porattam nu kelamburan.thiyagi anna hazare ku pasi edumpothu ellam mathya arasuku kaditham eluthuraru.ethavathu nalla seithi varumnu.kadaisila 12 naal kalichu avangalae mudivu panni mudichitanga.naan nenaikaen athan porattam win aayiduche appo intha mutta pasangala nalaiku rto office poi oru paisa kuda kudukama oru sign vangitu vara sollunga...panathukahavum ,pugalukahavum ivangalum,tv kalum seiyum vibacharamthan intha unnaviratha porattam.

heartripper said...

மர்மயோகி அவர்களுக்கு நான் உங்கள் பதிவுகளுக்கு புதிது
அருமை.இன்னைக்கு புதுசா இந்த 3 பேருக்காக இந்தியாவுல தூக்கு தண்டனையே வேண்டாம்னு சொல்ற மனித குல மானிகமெல்லாம்
இவ்வளவு நாளா எங்க இருந்தாங்க.அப்போ பொண்டாட்டி கூட படுத்த நன்பன வெட்டி கொன்ன வனுக்கும் 11 வயசு பொண்ண கெடுத்து அவ உறுப்புகளை அறுத்து கொன்று வீசியவனுக்கும் ஒரே தண்டனை.சூப்பர் .
இங்க ஒரு பொண்ணு இந்த 3 பேருக்காக தற்கொலை பண்ணிடிசசாம்.இவனுங்க யாரு ?நம்ம நாட்டுக்கு என்ன செஞ்சானுங்க?இல்ல உன் குடும்பத்துக்கு என்ன பண்ணுனாங்க ?நம்ம பிரதமரையே திட்டம் போட்டு கொன்றுகாங்க .அது எல்லாருக்கும் தெரியும்.புடிச்ச உடனே தூக்குல போட்டிருந்தா இவனுங்க எங்க போய்.........
முருகன் அப்டின்னு ஒருத்தன் .அவன் பொண்டாட்டிக்கு தூக்க குறைச்சி ஆயுளா மாததிடாங்க.ஏன்னா ஒரு பெண் குழந்தைய வளகனுமாம்.குழந்தைக்கு இப்போ வயசு 20 (?).அந்த பொண்ணு இப்போ இங்கிலாந்துல Glasgow உனிவேர்சிட்டி ல படிக்குது.
போரரட்டம் பன்ற பரதேசி பசங்க குழந்தங்க கார்பரேசன் ஸ்கூல் படிக்குது .இனிமே லாவது திருந்துங்கடா. முதல்ல தமிழ் நாட்டுல எல்லார் வயிறும் நிறைய போராடுங்க .அப்புறம் அடுத்த நாடு காரனுங்கள பாக்கலாம்.

heartripper said...

மானு ஒரு கூத்தாடி .4 வருசத்து க்கு முன்னாடி யாருன்னே தெரியாது.இப்போ செந்தமிலனாம்.(தெரிஞ்சுதான் தப்பா போட்டேன்).
அவன் உண்மையிலேயே செந்தமிழன்னா இலங்கைல பொய் குரல் குடுக்க வேண்டியதுதான ?ஏன்னா அங்க சவுண்டு வுட்டு கல்லா கட்ட முடியாதுள்ள .
10 நாள் நடிக்க 15 லட்சம் வாங்குறான் அவன நம்பி இங்க படிப்பு ஏறாத மாணவர்கள் எல்லாம் தெருவுல கெடந்து கததுரானுங்க.
இவன் ஒரு வாட்டி கூட நம்ம தமிழ்நாடு விவசாயிகள் பத்தியோ ,கூலி தொழிலாளர்கள் பத்தியோ ,வூழல் பத்தியோ பேசுனதே கிடையாது .
இவன் எல்லாம் தமிழ்நாட்டுக்கு தேவையா?பேசாம இலங்கைக்கு டிக்கட் எடுத்திட வேண்டியதுதானே?
அங்க தானே உன் எண்ணமெல்லாம் இருக்கு.ஏன் இன்னும் இங்கயே இருக்க?
இவன நம்பி வேலை வெட்டி இல்லாதவன் ,ஒன்னும் தெரியாதவன் எல்லாம் போறானுங்க.இவனுங்க சேந்து தமிழ்நாட்ட முன்னேட்டவா போறானுங்க.

heartripper said...

சாந்தனு ஒருத்தன் அவன வேற யாருக்கோ பதிலா புடிச்சி கொண்டு வந்து தூக்கு தண்டனை கொடுதுடான்களாம்.20 வருசமா யாருமே நம்ப மாட்டு காங்களாம்.
இவன உட்டா ஒரே பேருல உள்ள இருக்குற எலாரும் இதையே முன்னுதாரணமா வச்சி வெளிய வரம்னும்பானுங்க. அதுக்கும் நாம போராடலாம்.

heartripper said...

இந்த மூன்று தியாகிகளுக்காக இந்திய அரசியல் சட்டத்தையே மாற்ற சொல்லும் அறிகர்களுக்கு அஜ்மல் கசப் ,அப்சல் குரு,செல்வம் சார்பாக நன்றிகள் ஆயிரம்.

மர்மயோகி said...

நன்றி திரு யோகியின் சாயல்
மற்றும் திரு heartripper

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?