Pages

Wednesday, November 16, 2011

ச்சே என்னங்கடா பத்திரிகை நடத்துறீங்க...?



காலையிலேயே அந்த செய்தியை இன்டர்நெட்டில் பார்த்து விட்டேன்...எப்பேர்ப்பட்ட அதி முக்கியத்துவம் வாய்ந்த செய்தி அது? 

இதற்காகத்தானே உலகமே காத்து கிடந்தது...?

இண்டர்நெட்டில் கம்ப்யூட்டர் உபயோகிக்கும் சிலர்தானே பார்த்து அறிந்து கொள்ள முடியும்.?..பத்திரிக்கைகளில் வந்தால்தானே இது போன்ற செய்திகள் பாமர மக்களுக்கும் தெரியும்..அவர்களும் இந்த செய்திக்குதானே காத்து கிடந்தார்கள்?.
அதனாலேயே மாலை பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாக வரும் என்று ரொம்பதான் ஆவலாக காத்து இருந்தேன்..
மாலை மலர், மாலை முரசு, தமிழ் முரசு போன்ற பத்த்ரிக்கை தலைப்பு செய்தியை ரொம்பவும் ஆவலாக எதிர்பார்த்திருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது..

ஏதோ ஒரு பஸ் விபத்தாம்..
திமுக எம்பி ரித்தீஷ் கைதாம்...
கலெக்டர்கள் மாநாடாம்,

அவன் அவன் இந்த செய்திக்காக பந்தயம் கட்டிக்கொண்டிருக்கிறான், என்டி டிவிக்காரனும் சி என் என்னும் வேறு வேலையே இல்லை எனபது போல இந்த செய்தியை பற்றியே பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கிறான்..

உலகப் பேரழகி ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்த (அப்பாடா..நாம இந்த செய்திய மக்களுக்கு தெரிவிச்சாச்சு) அந்த அற்புதமான, நாட்டுக்கும் உலகத்துக்கும் அதிமுக்கியமான இந்த செய்தியை எப்படிடா தலைப்பு செய்தியா போடாம விட்டீங்க? 

ச்சே என்னங்கடா பத்திரிகை நடத்துறீங்க...?


0 comments :

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?