ரஜினிகாந்தின் கடைசி ஒரிஜினல் வெற்றிப்படம் என்றால் அது படையப்பாவை சொல்லலாம்..
அந்த படம் ரஜினிக்காக ஓடியதில்லை என்று ரஜினி - மற்றும் அதை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் உட்பட அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், வேறு வழியின்றி எல்லா ஜால்ராக்களும் ரஜினியையே புகழ்ந்து வருகின்றன..
படையப்பா முழுக்க முழுக்க ஓடியதன் காரணம், ரம்யா கிருஷ்ணன் - அப்போது தமிழக மக்களின் பெரும் எதிர்ப்பை சம்பாதித்திருந்த ஜெயலலிதாவை இமிட்டேட் செய்து நடித்திருந்ததே காரணம்..
இதில் ரஜினி, சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா, அப்பாஸ், ஸ்ரீதேவி போன்றோர் நடித்திருந்தனர்..
இனி விமர்சனத்தை பார்ப்போம்...
படையப்பா படத்தின் காமெடி ஸீன் 1
படத்தின் முதல்காட்சியில் பாம்பு ஒன்றை கண்டு ஊர் மக்கள் பயந்து ஓடுகின்றனர்..வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு வந்த - நீலாம்பரி என்ற கோடீஸ்வரப் பெண் அந்த பாம்பை அடித்துக்கொல்வதர்க்கு ஆட்களை அனுப்புகிறாள்..அது புற்றுக்குள் சென்று விடுகிறது..அந்த புற்றை இடிக்க சொல்லும்போது - கதாநாயகனின் அறிமுகம்..அவர் அந்த புற்றுக்குள் கையை விட்டு (?) பாம்பை பிடித்து முத்தமிட்டு விடுகிறார்..
இதைக்கண்டு வியந்த - நீலாம்பரி அவனது பெயரை கேட்கிறாள்..பெயரைக்கேட்டால் ஒழுங்காக பெயரை சொல்லவேண்டியதுதானே...
"சிங்கத்தை புடிச்சு சொவுத்துல ஏறு..சொவத்துல ஏறி வானத்துல ஏறுன்னு " (சிங்க நடை போட்டு சிகரத்துல ஏறணுமாம்..அப்புறம் வானத்துல ஏறணுமாம்).... ன்னு பாட்ட பாடிக்கிட்டு ஏதேதோ உளறிக்கொண்டு போகிறான் கதாநாயகன்..
அப்புறம் ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட நாலைந்துபேர் அந்த இளைஞனின் (?) நண்பர்கள் என்ற பெயரில் காமடி என்ற பெயரிலும் நம்மை போட்டு சாகடிக்கிறார்கள்..அது போக அதில் வருவோர் - கல்யானமாகாதோர் என்று காட்டுவது கொடுமையிலும் கொடுமை..
படையப்பா படத்தின் காமெடி ஸீன் 2
அப்புறம் - நீலாம்பரி வீட்டு வேலைக்காரியும், நீலாம்பரியும் - படையப்பா என்ற கதாநாயகனை போட்டி போட்டு காதலிக்கிறார்கள்..இதற்கிடேயே - ஒரு கட்டத்தில் படையப்பா - நீலாம்பரியின் முறைப்பையன் எனபது தெரியவர அவர் வீட்டுக்கு வரவழைக்கிறார்கள்..அரசியல்வாதியான நீலாம்பரியின் அண்ணன் முன்னாடியே - நீலாமபரி - படையப்பாவை பயங்கரமாக ஜொள்ளு விடுகிறாள்..இதை அறிந்த அண்ணனும் -அதற்க்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒதுன்கிறான்..நமக்கே வெட்கமாக இருக்கிறது..
படையப்பாவின் தந்தையின் (சிவாஜி) - சித்தியின் மகன் மணிவண்ணன்..சிவாஜியின் சொத்தை பங்கு கேட்க, மொத்த சொத்தையும் அவரிடமே கொடுத்துவிட்டு, சிவாஜி அந்த ஏக்கத்திலே மரணமடைகிறார்..கவனிக்க சிவாஜினியின் மரணத்திரிக்கு காரணம் அவரது தம்பி மணிவண்ணன்தான்..
இதானால் ரஜினியும் அவரது தாய் மற்றும் தங்கையுடன் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு தந்தையின் சொத்தில் குடிசைகட்டி குடியேறுகிறார்கள்..
படையப்பா படத்தின் காமெடி ஸீன் 3
அங்கே கிரானைட் கிடைக்கிறது..அதை அறிந்த மணிவண்ணன் அந்த இடத்தையும் ரஜினியிடம் எழுதி கேட்கிறார்..மறுக்கும் ரஜினியை கொல்ல அடியாட்களை ஏவுகிறார்..இதையும் கவனிக்கவும்....அடியாட்களை ஏவினால் கதானாயகனுக்குதான் பல கலைகள் தெரியுமே..அவர்களை அடித்து நொறுக்கிபோட்டு வெளியேறிவிடுகிறார்..
அதன்பிறகு தனது இடத்தில் கிரானைட் தோண்டி எடுத்து உலகிலேயே பெரும் செல்வந்தனாகவும், தாதாவாகவும் மாறுகிறார்..அதுவும் ஒரே பாட்டின் மூலம்..இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்...ரஜினி தான் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக தனது நிலத்தில் கிரானைட் தோண்டி எடுத்து விற்று பணக்காரனாகிறார்..
இதற்க்கு ஜால்றாவுக்கேன்றே பிறந்த வைரமுத்து எழுதுவது - " இன்னோர் மனிதனைக்கொன்று புசிப்பவன் அரக்கனடா...யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்..ஊருக்கே வாழ்ந்து மறைபவன் புனிதன்..நேற்றுவரைக்கும் நீ மனிதனப்பா ..இன்று முதல் நீ புனிதனப்பா.." என்று ஒரு பாட்டை எழுதி இருக்கிறார்..
இதில் என்ன புனிதத்தை கண்டார்கள் என்று தெரியவில்லை.. கேவலமாக இருக்கிறது..
இவர் நிலத்தை தோண்டுவதை பார்க்க ஊரே கூடி வந்து நிற்கிறது..வேடிக்கையாக இருக்கிறது..
இதற்கிடையே நீலாம்பரியை கல்யாணம் செய்வதாக கூறி பெண் பார்க்க வரும் ரஜினியின் தாய், எல்லார் முன்னிலையிலும் அவளை அவமானப்படுத்தி- வேலைக்காரியை கூட்டிக்கொண்டு செல்கிறாள்..இதன் காரணமாக இரு குடும்பத்திற்கும் பகமை வருகிறது..
படையப்பா படத்தின் உச்சகட்ட காமெடி ஸீன் 4
ரஜினியின் தந்தை மரணத்திற்கும் காரணமான , மற்றும் அவரை ஆளை வைத்து கொல்ல முயற்சித்த மணிவண்ணன் பிறகு ரஜினியிடம் கூட சேர்ந்து ஜால்ரா போடுவது அவரை ரஜினி கூடவே வைத்திருப்பதும் - திரைக்கதையின் ஓட்டை..
இதன் பிறகு ரஜினியின் மகள் -நீலாம்பரியின் அண்ணன் மகனை லவ் பண்ணுவதும் அதன் காரணமாக ரஜினியும் ரம்யா கிரிஷ்ணனும் மீண்டும் சந்திப்பதும் - ஆஸ் யூஷுவல் சினிமா..இதில் எந்த சிறப்பும் இல்லை..
செயற்கையாக திணிக்கப்பட்ட காட்சி.
ரஜினி அந்த படத்தில் ஒரு பணக்காரரின் மகன், தனது நிலத்தில் கிரானைட் எடுத்து பணக்காரராகிறார்..அவ்வளவுதான்..
ஒரு காட்சியில் மணிவண்ணன் வீட்டை கடனுக்காக காலி செய்யும் மன்சூர் அலிகான், ரஜினியின் எச்சரிக்கையை தொடர்ந்து, " ஐயோ..நானெல்லாம் லோக்கலு,அவரு இண்டர்நஷனல்" என்று அலறி அடித்து ஓடும் அளவுக்கு அந்த கதையில் ரஜினி ஒன்றும் கிழித்து விடவில்லை.. - அந்த படம் வெளிவரும் முன்பு - மன்சூர் அலிகான் ரஜினியை விமர்சித்திருந்த காரணத்திகாக - சம்மந்தமே இல்லாமால் திணிக்கப்பட்ட ஒரு காட்சி அது..
பெற்ற பெண்ணை பலபேர் முன்னிலையில் அங்க அவயங்களை ஆபாசமாக காட்டும் பாரத நாட்டியத்தை ஆடவிட்டு தாத்தா பாட்டி, தாய், தந்தை, சகோதரன் என்று குடும்பமே ரசிக்கும் "மின்சாரக்கண்ணா" என்ற பாடல் எந்த குடும்பத்தில் நடக்கிறது என்று தெரியவில்லை....
ஒருவன் தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக இருபது வருடங்களுக்கு மேலாக தனியறையில் உகலத்தொடர்பு இல்லாமல் ஒரு பெண் ஒரு அறைக்குக்குள் அடைப்பட்டு கிடந்தாள் எனபது உலகமகாப்புருடா..அப்படி ஒருத்தி இருந்தால் அவள் தோற்றமே மாறி, மனநோய் பிடித்துவளாகத்தான் வெளியே வர முடியும்..
20 வருடங்கள் தனிமை சிறையில் அடைபட்டு கிடந்த பெண்
அதுவும் -தன் அத்தையை முதன் முதலாக பார்க்கும் ஒருவன் "அத்தே நீங்க சூப்பர் பிகர் "என்று கம்மென்ட் அடிப்பது படு ஆபாசம்..
ஒரு கட்டத்தில் " ஓஹோ ஹோ ஹோ..கிக்கு ஏறுதே" என்று குடும்பமே குடித்துவிட்டு கூத்தடிக்கும் காட்சியும் - வயதானவர்கள் ஆடிப்பாடும் வேடிக்கையும் உண்டு..
இதையும் ரஜினியின் முக்கிய படங்களாக இன்றுவரை சொல்வதும் ஆபாச பத்திரிகைகளின் வியாபார தந்திரம்தான்..
7 comments :
Super post Marmayogie , summa kizhi kiznu kizichitinga. Intha kanraviya naan theatril parthaen. Rajini shirt kazhati odumba murukum pozthu oru veri pudichavan kathuran “thalaivaruku sema biceps da machi” “otha Arnold ellam onumey ilada” naan bayangarmaga sirithu vitaen. He needs the best technicians in his movie but will take all the credit . He will have the best music director,lyricisist (mostly Vairamuthu” ,beautiful heroine & so on.Also he will have some constants like Sarathu babu,Nizhalgal ravi,Radharavi to sing praises of him throughout the movie. All young heroes are now following his formula.
I have another movie request , neram irupin pathivu seyavum. Muthu padathil neraya ota odisalgal irukinranna. Ellam paadalgililam suma avarai kadavuluku nigaravan ponra oru bimbathai uruvaki iruparagal.
நன்றி திரு mahi
இந்த இணைப்பை பாருங்கள்...
http://marmayogie.blogspot.in/2010/06/blog-post_18.ஹ்த்ம்ல்
இதில் முத்து பற்றி சிறிது விமர்சித்திருக்கிறேன்..
இன்னும் வேண்டுமென்றால் விரிவாக அலசலாம்..
நன்றி
நன்றி திரு mahi
இந்த இணைப்பை பாருங்கள்...
http://marmayogie.blogspot.in/2010/06/blog-post_18.html
இதில் முத்து பற்றி சிறிது விமர்சித்திருக்கிறேன்..
இன்னும் வேண்டுமென்றால் விரிவாக அலசலாம்..
நன்றி
Nandri Marmayogie.
ORU PADATHAI THITRADHUKKAGA MATTUM VIMARSIKKAREENGA.NEENGA SOLRADHAI PARTHA ADMKVINAR INDHA PADATHAI PARTHIRUKKA MAATTANGALA RASITHIRUKKA MAATTANGALA ORU PAITHIYAKKARA POMBALAIYODA KADHAYAI POOSI MOZHUGI SIVAJI,LAKSHMI,MANIVANNAN,RADHARAVINNU FAMILY AUDIENCEKANA PADAMA KODUTHA NO 1 SCREENPLAY THAAN EVERGREEN VETRIPADAMA PADAYAPPA IRUKKA KAARANAM.
indha padathai frame by frame rasichiruppeenga 12 varusham kazhichi ungalukkulla arivujeevithanam ettip parkudha mosamana karuthugalai vidhaikkira padangal evlovo irukku.adhayellam vittuttu successful commercial screenplay ulla padathai thitreenga.neenga kooda ipdi thaan padameduppeenga sir.
ஒரு மண்ணாங்கட்டி யும் தெரியாத நாயா இருப்பான் போல ரசனை இல்லாத கருங்காலி பயலே போடா புறம்போக்கு
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?