Pages

Friday, December 10, 2010

சொந்த செலவில் சூனியம்...!!!



ஸ்பெக்ட்ரம்..இந்த வார்த்தைதான் அதிகமதிகம் இப்போது ஊடகங்களில் அடிபடும் செய்தி..

ஜி 2 அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏறக்குறைய 1,76,000 கோடி ரூபாய் உத்தேச இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தணிக்கை குழு அதிகாரி சொன்னதை வைத்து, மதவெறி பி ஜே பி நாய்கள் இன்றுவரை நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் குரைத்துக் கொண்டு இருக்கின்றன..

இந்த ஊழலால் ஏற்பட்ட இழப்பை விட இந்த பொறுக்கிகள் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்வதால் ஏற்படும் இழப்புகள் இன்னும் அதிகம்..

எல்லாவற்றையும் வியாபாரமாகப் பார்க்கும் பத்திரிகைகள் இந்த விஷயத்தை கண்டுகொள்வதும் இல்லை..இப்படி வீண் சம்பளம் வாங்கி மக்கள் பணத்தை வீணடிக்கும் இந்த எருமைகள் பற்றி மக்களுக்கு அறியவைப்பதும் இல்லை..



இன்னொரு மதவெறி நாய் சுப்ரமணியன் என்பவனும் பி ஜே பி யின் வாலாக ஆடிக்கொண்டு தினமும் உளறிக்கொண்டு வருகிறான்..



தெகல்கா ஊழல், குஜராத் கலவரம், கார்கில் வீடு ஓதிக்கியத்தில் ஊழல் செய்த இந்த மத வெறி நாய்கள் ஆரம்பித்து வைத்ததுதான் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் எனபது இப்போது வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது..



டாடா நிறுவன அதிபர் திரு ரத்தன் டாட்டா வின் கூற்றின்படி, பி ஜே பி ஆட்சிகாலத்தில் தான் இந்த அலைவரிசை ஒதுக்கீட்டில் அதிகமான முறைகேடு நடந்துள்ளது என்று அம்பலப்படுத்தியுள்ளார்.



தமது ஊழலை மறைத்து - பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் குளிர் காய நினைத்து எதிர்கட்சிகளையும், சுப்பிரமணியன் என்கிற அமெரிக்க ஏஜென்டையும் தூண்டிவிட்ட பி ஜே பி - சொந்த செலவில் சூனியம் வைத்துகொண்டதாகவே தெரிகிறது..



வினை விதைத்தவன்தான் வினையை அறுப்பான்....!





3 comments :

MUTHU said...

2001-2008 காலக்கட்டத்தில் தொலைத் தொடர்பு துறையில் மட்டும் இவ்வளவு ஊழல் நடைபெற்றது என சென்டல் ஆடிட் ஜெனரல் அறிக்கை கூறுகிறது. அதாவது ஒட்டு மொத்தமாக கூறியுள்ளதா? அல்லது இந்த இந்த ஆண்டுகளில் இவ்வளவு இழப்பு என்று பிரித்துக் கூறியுள்ளதா?

தொலைத் தொடர்புத் துறை தவிர்த்த (நிதி, விமானப் போக்குவரத்து, ரயில்வே போன்ற) பிற துறைகளில் இதுபோன்ற ஆடிட் நடைபெற்றதா? இல்லையா? அவ்வாறு நடைபெற்றிருந்தால் அங்கெல்லாம் ஊழல் நடைபெறவில்லையா? பிற அமைச்சகத்தின் அமைச்சர்கள் அனைவரும் உத்தமர்கள் என கூறியுள்ளாரா?

கலைஞர் கூறியதைப்போல ராஜா தலித் என்பதால் தான் அவர் மீது மட்டுமே பலி போடப்படுகிறது என்பது உண்மையோ என எண்ணத் தோன்றுகிறதே?

சாமக்கோடங்கி said...

படங்களில் வருவது போல, வில்லன்கள் அனைவரும் தங்களுக்குள் ஒரு உடன்பாட்டோடு இருக்கும்வரை அவர்கள் யாருக்கும் தொந்தரவு இல்லை. இவன் ஓவராக உளறவும், அவன் இவனுடைய விஷயங்களை புட்டு புட்டு வைக்க ஆரம்பித்து விட்டான். இது தான் இவனை அடக்க சரியான வழி போல. ராசா மாட்டிக் கொண்டார்.. மாட்டாதவர்கள் தப்பிக்க வழி பார்க்கிறார்கள்..

மர்மயோகி said...

நன்றி திரு இசக்கிமுத்து..மற்றும் திரு சாமக் கோடங்கி..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?