Pages

Thursday, May 5, 2011

தமிழன் என்றோர் இனமுண்டு..தனியே அவர்க்கோர் குணமுண்டு..!!!

சர்வதேச பயங்கவாதி என்றழைக்கப்பட்டு, அமெரிக்காவை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஒசாமா பின்லாடன் அழிக்கப்பட்டதில் அமெரிக்க பெரும் நிம்மதி அடைந்திருக்கலாம்..ஆனால், ஒசாமா பின்லாடனின் பயங்கரவாத செயல்களால், பயங்கவாதிகள் என்று குற்றம் சுமத்தப்பட்ட ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் அந்த அவப்பெயர்களில் இருந்து விடுபடவும் .. அதன் காரணமாக விமான நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் எப்போதும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்படும் நிலை மாற இன்னும் எத்தனை நாளாகும் என்றும் தெரியவில்லை.



எங்கே, எந்த இடத்திலும் குண்டு வெடிப்பது போன்ற அசம்பாவித செயல்கள் நிகழ்ந்தாலும், மீடியாக்கள் , சிறிதும் சிந்திக்காமல் தமது மூளையை தனியே எடுத்து  வைத்துவிட்டு, இஸ்லாமிய தீவிரவாதம் என்று அலறுவதும், அதை செய்தவர்கள்   இஸ்லாமியர்கள் அல்ல என்று நிரூபிக்கப்பட்டாலும் அதை கண்டுகொள்ளாமல் விடும் அவலமும் என்று முடிவுக்கு வரும் என்றும் தெரியவில்லை..



இந்நிலையில், ஒசாமா கொல்லப்பட்டதற்கு சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருப்பது மிகவும் வருந்தத்தக்க செயல்கள் ஆகும்..வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதுதான் இயற்கை..ஆயுதமேந்தியவன் ஆயுதத்தாலேயே மடிந்திருக்கிறான்.

அதனால்தான் ஒசாமாவின் உடல் கூட அடக்கப்படாமால் மறைக்கப்பட்டுவிட்டது..நல்ல விசயம்தான்..



சந்தனக்கடத்தல் வீரப்பன் தமிழனல்லவா?

அதனால்தான் அவன் சுட்டுக்கொல்லப்பட்டவுடன் அவனுக்கு நினைவிடம் எழுப்பி கோயில் கட்டி கொண்டாடப்பட்டது.

அவன் மனைவியை தேர்தலில் நிற்கவைத்து சட்ட மன்ற உறுப்பினராக்கவும் முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது.



பிரபாகரன் தமிழனல்லவா..

அதனால்தான் இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் செய்தும் இன்றும் அவனது போஸ்டர்கள் ஒட்டப்பட்டு கொண்டாடப்படுகிறது..

பிரபாகரன் பெயரில் மன்றங்கள் தைரியமாக நடத்தப்படுகின்றன.

கள்ளத்தோணியில் தீவிரவாதிகளை சந்தித்தவனேல்லாம் இன்று அரசியல் தலைவனாக மதிக்கப்படுகிறார்கள்..

அதை வைத்தே அரசியலும் செய்ய முடிகிறது..

சினிமாவில் குப்பை கொட்ட முடியாதவன் எல்லாம் பிரபாகரன் பெயரை வைத்து அரசியல் வியாபாரம் செய்ய முடிகிறது..

இலங்கை கிரிக்கெட் அணியில் ஜெயசூரிய விளையாட இந்திய வந்தால் போராட்டம் செய்வோம்..


அதே அணியில் விளையாடும் முத்தையா முரளிதரனை சாதனையாளர் என்போம்..

 
காரணம் அவர்கள் தமிழர்கள்.


தமிழன் என்ன செய்தாலும் அவன் தமிழனல்லவா .


தமிழன் என்றோர் இனமுண்டு..தனியே அவர்க்கோர் குணமுண்டு..!!!

வாழ்க தமிழ்..வெல்க தமிழ்..

13 comments :

அலைகள் said...

நல்ல பதிவு யோகி !

மர்மயோகி said...

என்ன திடீர்னு எல்லாருக்கும் தமிழுணர்வு குறைந்து போய்விட்டதா? ..இன்னும் யாருமே திட்டலே ?

பாலா said...

//சர்வதேச பயங்கவாதி என்றழைக்கப்பட்டு

முதல் வரியிலேயே உங்கள் நோக்கம் புரிந்து விட்டது.

தீவிரவாதிகள் யாருக்கும் நான் வக்காலத்து வாங்க போவதில்லை. ஆனால் தமிழர்கள் மட்டுமே தீவிரவாதிகளை ஆதரிப்பார்கள் என்று மல்லாக்க படுத்துக்கொண்டு காரி உமிழும் உங்களைக் கண்டால் வேடிக்கையாக இருக்கிறது.

நீங்கள் உதாரணம் காட்டி இருப்பவர்கள் அனைவரும் தமிழர்கள். அவரது இனத்தவர்கள், அவர்களால் பயனடைந்தவர்கள் கொஞ்சமேனும் இங்கு இருப்பார்கள். அவர்கள் இந்த மனிதர்களை தலைவனாக தெய்வமாக கொண்டாடலாம். ஒசாமாவை ஆப்கானிலும். சாதாமை ஈராக்கிலும் இவ்வளவு ஏன் பாடகர் மேன்சனை அமெரிக்காவில் கூட இன்னும் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று சொல்வீர்கள் போலிருக்கிறதே.

ஒசாமா கொல்லப்பட்டபின் பிற மதத்தினர் மீது உண்டான அடங்காத கோபம் உங்களின் இந்த பதிவில் நன்கு தெரிகிறது. இனியும் மனிதநேய போர்வைக்குள் ஒளிந்து கொள்ளாமல், வெளிப்படையாக “எனக்கு இசுலாமை தவிர பிற மதத்தினரைக் கண்டால் பிடிக்காது.” என்று தைரியமாக ஒப்புக்கொள்ளுங்கள். அதில் தவறொன்றும் இல்லை.

Moni said...

உங்கள் பதிவு உண்மையான ஒவ்வொரு ஈழத் தமிழனையும் பாதிக்கும்.. மனிதநேய ஆடைக்குள் ஔிந்து கொண்டு உங்கள் விஷமக் கருத்துகளை சொல்லாதீர்கள்... அங்கிருந்து கொண்டு எதுவும் சொல்லலாம்.. இங்கு எங்களோடு எங்களாய் வாழ்ந்து பாருங்கள்... உண்மைகளை தெரிந்து, உணர்ந்து கதையுங்கள்..

Murugavel said...

மானங்கெட்ட இந்த பதிவு எழுதுவதை விட, நால் ரோட்ல ......


பேர பாரு மயிரு யோகியாம்,

மர்மயோகி said...

இதோ நமது தமிழின புலிகளுக்கு தமிழுணர்வு பொங்கி வழிந்து ஆறாய் ஓடுகிறது..

//ஒசாமா கொல்லப்பட்டபின் பிற மதத்தினர் மீது உண்டான அடங்காத கோபம் உங்களின் இந்த பதிவில் நன்கு தெரிகிறது. இனியும் மனிதநேய போர்வைக்குள் ஒளிந்து கொள்ளாமல், வெளிப்படையாக “எனக்கு இசுலாமை தவிர பிற மதத்தினரைக் கண்டால் பிடிக்காது.” என்று தைரியமாக ஒப்புக்கொள்ளுங்கள். அதில் தவறொன்றும் இல்லை. //
நீங்கள் தமிழ் பற்று என்ற பெயரில் பயகரவாதிகளை ஆதரிப்பதை சொன்னால் எனக்கு மத சாயம் பூசுகிறீர்கள்..

//உங்கள் பதிவு உண்மையான ஒவ்வொரு ஈழத் தமிழனையும் பாதிக்கும்.. மனிதநேய ஆடைக்குள் ஔிந்து கொண்டு உங்கள் விஷமக் கருத்துகளை சொல்லாதீர்கள்... அங்கிருந்து கொண்டு எதுவும் சொல்லலாம்.. இங்கு எங்களோடு எங்களாய் வாழ்ந்து பாருங்கள்... உண்மைகளை தெரிந்து, உணர்ந்து கதையுங்கள்.. //

சக ஈழப்போராளிகலான பத்மநாப, அமிர்தலிங்கம், ஸ்ரீ சபாரத்தினம், போன்றோர்களை கொன்றபோது உங்களுக்கு எப்படி இருந்தது தோழரே?

//மானங்கெட்ட இந்த பதிவு எழுதுவதை விட, நால் ரோட்ல ......

பேர பாரு மயிரு யோகியாம், //
தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு..'

ஹா ஹா ஹா..

Murugavel said...

தயவு செய்து யாரும் இந்த பதிவிற்க்கு கருத்துரை எழுத வேண்டாம், ஹிட்ஸ் பைத்தியம் முத்தி போய் இப்படி கிறுக்குராரு,யாரும் இத பெருசா எடுத்துக்க வேண்டாம்

chakra said...

Murugavel i too agree

Kumar said...

எனக்கு தெரிந்து நீங்கள் பாராட்டியது இலங்கை ராணுவத்தை அதுவும் அவர்கள் நம் மீனவர்களை கொன்ற போது...

இதில் இருந்து தெரியவில்லை நீங்கள் ஒரு கீழ்பக்கம் கேஸ் என்று ...

lvgs said...

* Ordinary People by Judith Guest
* Girl Interrupted by Susanna Kaysen
* The Bell Jar by Sylvia Plath
* One Flew Over the Cuckoo’s Nest by Ken Kesey
* Prozac Nation by Elizabeth Wurtzel
* The Gargoyle by Andrew Davidson
* Running with Scissors by Augusten Burroughs
* Sybil by Flora Rheta Schreiber.
* She’s Come Undone by Wally Lamb
* The Secret Scripture by Sebastian Barry

தயவு மேலுள்ள புத்தகங்களை நன்றாக படிக்கவும் ...
உங்களுக்கு மிக அவசியமானது

மர்மயோகி said...

நான் ஹிட்ஸ் பைத்தியம்தான்
இந்தியாவிடம் உதவி கேட்டுகொண்டே எங்கள் ஏர்போர்டில் குண்டு வைப்பீர்கள்
எங்கள் நாட்டில் வந்து உங்கள் சக போரளியையே சுட்டுகொன்று விட்டு தப்பி விடுவீர்கள்..
எங்கள் நாட்டில் வந்து எங்கள் நாட்டின் முக்கிய தலைவரை கொன்றுவிட்டு அதையும் நியாப்படுத்திவிட்டு இன்னும் தைரியமாக எங்களிடமே உதவி செய்யவில்லை என்று திட்டுவீர்கள்..
அதற்க்கு கூலிக்கு மாரடிக்கும் அரசியவியாதிகள் வேண்டுமென்றால் உங்களுடன் சேர்ந்து கத்தலாம்
நாங்கள் சொன்னால் உங்களுக்கு உரைக்கும்
நான் ஹிட்ஸ் பைத்தியம் என்பீர்கள்..
நன்றாக உள்ளது உங்கள் பண்பாடு..

தமிழ் குமார் said...

நான் வாழ்க்கையிலே பண்ண பெரிய தப்பு,இந்த வலைபூக்கு வந்ததுதான்.sorry brother இனிமே வந்தா என்ன செருப்பால அடிங்க.என்னோட comment போடுவிங்கன்னு நினைகிரன்.

Ravi said...

மர்ம யோகி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த படம். மறைந்து பல வருடங்கள் உருண்டோடியும் இன்றும் தமிழ் மக்கள் இதயத்தில் சிம்மாசனம் போட்டு நிரந்தரமாக உட்கார்ந்து இருப்பவர். அப்படிப்பட்ட மனித நேயம் மிக்க பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்க பட்டவர்தான் "முப்படை வைத்து போராடிய முதல் தமிழன் பிரபாகரன்". அதனால்தான் தமிழன் என்றால் யார் என்று இந்த உலகமே திரும்பி பார்க்க வைக்க மாவீரன் பிரபாகரனால் முடிந்தது. சம்பந்தமே இல்லாமல் நீங்கள் இந்த பெயரை நீங்கள் உங்கள் புனை பெயரா வைத்து இருப்பது மனதுக்கு வேதனை தருகிறது. சுய சிந்தனை இல்லாத மூளை சலவை செய்யப்பட ஒரு இலங்கை தமிழ் முஸ்லிம் என்று தெரிகிறது. இதிலே எல்லாம் அடங்கி விடுவதால், வேறு எதுவும் நான் சொல்ல தேவை இல்லை என்று நினைக்கிறேன். உண்மையான முஸ்லிம், தன் தாய் மொழியை நேசிப்பான், தன் இனத்தை நேசிப்பான், தன் இன விடுதலைக்காக போராடுபர்களை நேசிப்பான்! அப்படிப்பட்ட ஒருவனே இஸ்லாமிய மார்க்கத்தை தழுபவனாக இறைவன் இருப்பதை உணர்பவனாக இருக்க முடியும்! 22/09/2011

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?