Pages

Monday, May 16, 2011

முதல் கோணல்..!!!



கூட்டணிக்கட்சிகளை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக தொகுதிகளை அறிவித்தபோதே, ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா..

அந்த சமயத்தில் பாரம்பரியமிக்கவர்கள் என்று கருத்தப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள் நடிகர் விஜயகாந்த்தின் தலைமையேற்க தயாராகிய கூத்தும் நடந்தது..

இன்று அதிமுக அசுர பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர்..

முதலில் ஜெயலலிதா புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்துக்கு செல்லமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது ஒரு தலைவருக்குரிய பண்பாக தெரியவில்லை..

அது ஒன்றும் கருணாநிதி தனது சொந்த பணத்தில் கட்டிய கட்டிடமல்ல..

தமிழக மக்களின் வரிப்பணம்..

ஏறக்குறைய 500 கோடி ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட அந்த தலைமை செயலகத்தில் ஜெயலலிதா தனது ஆட்சியை தொடர்ந்திருந்தால் அது அவரது பண்பையும் முதிர்ச்சியையும் காட்டி இருக்கும்..

இரவோடிரவாக (அதுதான் "ஜெ" க்கு பிடிக்குமோ?) செம்மொழி ஆய்வு அலுவலகத்தை ஜார்ஜ் கோட்டையிலிருந்து புதிய தலைமை செயலகத்துக்கு மாற்றி இருப்பது சிறுபிள்ளைதனமாக உள்ளது.

கூட்டணி கட்சியினரும், எதிர்கட்சி தலைவரும் வெற்றி "போதை" யில் இருப்பதால் இதை கண்டுகொள்ளவில்லை போலும்..மேலும் இது அவர்கள் பணமா..இழப்பு மக்களுக்குத்தானே..

தனது கல்யாண மண்டபத்தை இடித்தவுடன் மக்களுக்காக போராடிய நடிகருக்கு, மக்களது பணம் இன்று அநியாயமாக "ஒரு புதிய கட்டிடம்" பேய் பங்களாவாக மாறுவதை கண்டுகொள்ளாமல் ரசித்துகொண்டிருக்கிறார்.

ஆபாச பத்திரிக்கைகள் ஜெயலலிதாவின் வெற்றியை ஆ வென வாய் பிளந்து பார்த்துகொண்டிருக்கின்றனவே ஒழிய இந்த வீண் விரயத்தை கண்டித்ததாக தெரியவில்லை.

ஜெயலலிதாவின் எல்லா பிரச்சினைக்கும் NDTV, மற்றும் CNN டிவி போன்ற தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுக்கும் அரசியல் புரோக்கர், கோமாளி "சோ" வும் ஏதும் சொன்னதாக தெரியவில்லை.

இவர்கள் யாருக்காக ஆட்சிக்கு வருகிறார்கள்..?கருணாநிதி கட்டினார் என்பதற்காக அவர் காலகட்டத்தில் கட்டப்பட்ட தலைமை செயலகத்துக்கு போகமாட்டேன் என்று இருக்கும் "ஜெ" நம்மை ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயன் கட்டிய "ஜார்ஜ் கோட்டை"க்கு மட்டும் எப்படி முதலமைச்சராக செல்கிறார்..

அடுத்தது.."

இந்தியாவில் ஏறக்குறைய 30 க்கும் மேற்பட்ட மாநிலங்கள் உள்ளன..

அவைகளில் எவ்வளவோ திறமைசாலியான முதலமைச்சர்கள் உள்ளனர்..

ஆனால் தனது பதவி ஏற்பு விழாவிற்கு, அனைத்து நாடுகளாலும் வெறுக்கப்பட்ட பயங்கரவாதி "நரேந்திர மோடி" என்பவனை அழைத்து மகிழ்ந்து இருக்கிறார் புதிய முதல்வர்.

இப்படி இருக்கிறது ஆரம்பமே..

முதல் கோணல் முற்றிலும் கோணலாகாமல் இருந்தால் சரி..

22 comments :

பனித்துளி சங்கர் said...

///////முதலில் ஜெயலலிதா புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்துக்கு செல்லமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது ஒரு தலைவருக்குரிய பண்பாக தெரியவில்லை..

அது ஒன்றும் கருணாநிதி தனது சொந்த பணத்தில் கட்டிய கட்டிடமல்ல..
/////////


ஒட்டுப் போட்ட நமக்குத் தெரிகிறது அம்மையாருக்கு அது தெரியவில்லையே

ரஹீம் கஸ்ஸாலி said...

நம்ம பதிவையும் பாருங்க சகோ.....
http://ragariz.blogspot.com/2011/05/letter-to-jeyalalitha.html

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//அனால் தனது பதவி ஏற்பு விழாவிற்கு, அனைத்து நாடுகளாலும் வெறுக்கப்பட்ட பயங்கவாதி "நரேந்திர மோடி" என்பவனை அழைத்து மகிழ்ந்து இருக்கிறார் புதிய முதல்வர்.//

well said bro.

மர்மயோகி said...

நன்றி திரு பனித்துளி சங்கர்..
//ஒட்டுப் போட்ட நமக்குத் தெரிகிறது அம்மையாருக்கு அது தெரியவில்லையே //
அவருக்கு நன்றாகவே தெரியும்..ஆனால் அனால் பெண் புத்தி என்று ஒன்று இருக்கிறதே...

மர்மயோகி said...

நன்றி ரஹீம் கஸ்ஸாலி

உங்கள் பதிவு பார்த்தேன்

நன்றாகவே சொல்லி இருக்கிறீர்கள்..தலைமை செயலகத்துக்கு போகாததற்கு காரணம் அது கலைஞர் கட்டியது..அதுபோல அவர் காலத்து மேம்பாலங்களிலும் அவரது ஊர்திகள் போகாதோ?

மர்மயோகி said...

நன்றி ராஜகிரி ஹாஜ மைதீன் (அபு நிஹான்)

ஜெயலலிதா தனது மதவெறியை பகிங்கரமாக காட்டவே மோடி என்ற பயங்கவாத மிருகத்தை அழைத்திருக்கிறார்.

பாலா said...

கோட்டை இருக்க இந்த புது கட்டிடம் கட்டும் முன்னே ...இது தேவையான்னு யோசிச்சிருக்கலாம் .....இதுக்கு செலவு பண்ண பணத்த
மின்சார பிரச்சனைக்கு செலவு பண்ணி இருந்த இப்ப இந்த நிலை இருந்திருக்காது .

அருண் இராமசாமி said...

narendra modi ia a very talendted and good cheif minister of india ...

மர்மயோகி said...

நன்றி திரு பால அவர்களே.
நாமும் ஓட்டுப் போடும் முன்பே (2006 ஐ சொல்கிறேன்) இவர் வந்து புது சட்டசபை கட்டுவார்...வீண் செலவு..ஏன் இவருக்கு ஓட்டுப் போடணும் என்று யோசித்திருக்கணும்...ஹ்ம்ம் நல்லாதான்யா யோசிக்கிறீங்க..

மர்மயோகி said...

நன்றி திரு அருண் இராமசாமி..

நீங்களும் கோமாளி சோ ராமசாமி மாதிரி யோசிக்கிறீர்கள்..இந்தியாவில் மோடி என்ற பயங்கவாதி மட்டும்தான் சிறந்த நிர்வாகியா? வேறு முதலமைச்சர்கள் எல்லாம் புடுங்கிக்கொண்டா இருக்கிறார்கள்?

பல்வேறு நாடுகளால் அனுமதி மறுக்கப்பட்டு விசா ரத்து செய்யப்பட்டவன் இந்த பயங்கவாதி..அவனை குறிப்பாக ஜெயலலிதா வும் கோமாளி சோவும் அழைத்து வந்திருப்பது தத்தமது மதவெறியை பறை சாற்றுவதற்கே..

இந்த பயங்கரவாதி மோடி இந்த பதவியேற்ப்பு விழாவுக்கு வந்துவிட்டால் தமிழகத்தின் நிர்வாகம் சீரடைந்து விடுமா? தமிழ் நாட்டை ஆளப்போவது ஜெயலலிதாவா இல்லை இந்த பயங்கரவாத மிருகம் மோடியா?

sugam said...

அன்று கருணாநிதி இதே புதிய தலைமை செயலகத்தை அவசர அவசரமாக திறக்க ருபாய் 2 கோடியை வெறும் மேலே உள்ள தூம் மாதிரிக்கு செலவு செய்தாரே அது தவறாக தெரியவில்லையா உமக்கு . ஆட்சி ஒழுங்காக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலே கூட ஜெ அவர்கள் பாரம்பரியம் மிக்க பழைய சட்டமன்றத்திற்கு சென்று இருக்கலாம் அல்லவா

sugam said...

பத்து வருடமாக குஜராத்தை முன்னுக்கு கொண்டு வந்த மோடி உங்களுக்கு பயங்கரவாதி .......நீர் நிச்சயம் கீழ்பாக்கம் கேசாக தான் இருக்கவேண்டும்

sugam said...

உமக்கு மர்மயோகி என்ற பெயரை விட குஷ்ட ரோகி என்ற பெயர் தான் பொருத்தமாக இருக்கும்

மர்மயோகி said...

நன்றி திரு sugam அவர்களே..
பத்து வருடமாக ஒருவன் ஆட்சி செய்தாலே அவன் சிறந்தவன் என்று கிடையாது..எகிப்த், லிபியா போன்ற நாடுகளில் இதை விட அதிக ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர்கள் எல்லாம் மக்கள் எழுச்சியால் ஓட நேர்ந்ததை அறிவோம்.
தம் மாநில மக்களை ஆள் விட்டு கொன்றவனின் ஆட்சி உங்களுக்கு நல்லாட்சியாக தெரிகிறதா..? இதிலிருந்து தெரியவில்லையா யார் கீழ்பாக்கம் கேஸ் என்று..

மர்மயோகி said...

நன்றி திரு Ganapathy

என் நடை பாதையில்(ராம்) said...

யுசுப் ரசா கிலானி ய கூபிடிருந்தா நல்லா இருந்திருக்கும்.

idris said...

பாசிச மதவாதிகளின் கைபாவையாக செயல்பட போகிறாரா அல்லது நடுநிலை முதலவராக குடிமக்களுக்கு நன்மை செய்ய போகிறாரஎ ,ரத்த வெறி பிடித்த கொலைகார மோடியின் சகவாசத்தை கைவிடுவaரஎ பொறுத்து இருந்து பார்போம்

ghost said...

you qre calling modi as the worst man but why you are praising karuna,soniaji,manmohanji,etc because they helped to kill lakhs of tamilians and thousand of sikhs but modi indirectly showed that hindu can retard in emergency but we tamil will never

SENTHILKUMARAN said...

மற்றபடி அம்மா இன்னும் திருந்தவில்லை. தமிழன் தேடிப் போய் தனக்குத் தானே சூன்யம் வைத்துக் கொண்டிருக்கிறான். ஐந்து வருடம் அனுபவிக்கட்டும். வேறு என்னத்த சொல்ல….

SENTHILKUMARAN said...

நரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது?

SENTHILKUMARAN said...

படித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்தது

கசாப்பை தூக்கில் போடவேண்டும் என்று தும்மினாலும், சிந்தினாலும் கூப்பாடு போடுபவர்களின் கோரிக்கையை நாம் மறுக்கவில்லை. ஆனால் கசாப் கொன்றதை விட அதிக எண்ணிக்கையில் கொன்றவரும், கசாபின் காலத்திற்கும் முந்தையவருமான நரவேட்டை நாயகன் மோடியைத் தூக்கில் போடவேண்டும் அல்லவா? எப்போது போடுவீர்கள்?

SENTHILKUMARAN said...

படித்ததில் பிடித்தது

கார்ப்பரேட் உலகத்தால் லாபம் பெரும் எவரும் மோடி நல்லவர் வல்லவர் என்றே சொல்வார்க்ள். ஆனால் மனசாட்சி உள்ள எவரும் மோடியின் மரணத்தைத்தான் விரும்புவார்கள்.


கோத்ரா வழக்கில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில்பெட்டியை தீ வைத்துக் கொளுத்துவது என்று கோத்ரா நகரைச் சேர்ந்த முஸ்லீம்கள் முதல்நாளே சதித்திட்டம் தீட்டி, மறுநாள் அதனை நிறைவேற்றியிருக்கின்றனர்” என்று கூறி 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்திருக்கிறது குஜராத் சிறப்பு நீதிமன்றம். எனினும் குற்றம் சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேருக்கு எதிரான சாட்சியங்கள் இல்லை என்பதால், அவர்களை விடுதலையும் செய்திருக்கிறது.

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்பது முஸ்லிம்களால் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்ற தங்களது கூற்றை இந்தத் தீர்ப்பு நிரூபித்து விட்டதாகவும், மதச்சார்பின்மை பேசுவோர் முகத்தில் கரி பூசப்பட்டு விட்டதாகவும் கூறி எக்காளமிடுகிறது பாரதிய ஜனதாக்கட்சி. விபத்தா, தீ வைப்பா என்று தெரிவதற்கு முன்னாலேயே, அதனை‘ ஐ.எஸ்.ஐ சதி’ என்று பிரகடனம் செய்தார் அன்று மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி. “வினை ஒன்று நடந்தால் அதற்கு எதிர்வினை வரத்தான் செய்யும் என்று கூறி, குஜராத் முஸ்லீம்களுக்கு எதிராக பார்ப்பன பாசிஸ்டுகள் நடத்திய இனப் படுகொலையை நியாயப்படுத்தினார் மோடி.

“கோத்ரா ரயில்பெட்டி எரிப்பு என்பது இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் திட்டமிட்டு நடத்திய படுகொலை அதன்பின் குஜராத் முழுதும் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலையோ, கோபம் கொண்ட இந்துக்களின் திட்டமிடப்படாத எதிர்வினை” இதுதான் குஜராத் படுகொலையை நியாயப்படுத்துவதற்கு சங்கபரிவாரத்தினர் முன்வைத்து வரும் வாதம். தற்போது வந்துள்ள தீர்ப்பு ஆர்.எஸ்.எஸ்இன் வாதத்தைத்தான் வழிமொழிகிறது.

இந்த்துத்துவா பயங்கரவாதத்தின் தீவிரவாதமுகம் சங்பரிவார்கள் என்றால் மிதவாத முகம் காங்கிரஸ்.இரண்டாயிரம் பேரைக் கொன்றவன் இந்திய அரசியலில் ஆராதிக்கப்படுவது சமூகம் பாழ்பட்டு வருவதைக் காட்டுகிறது. இந்துத்துவா என்பது ஒரு சீழ் பிடித்த வக்கிர சிந்தனை என்பதுநிரூபிக்கப்பட்டு வருகிறது. மோடி தூக்கிலிடப்படாத வரை இந்திய சட்டங்கள் சாக்கடைக்கு சமம்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?