Pages

Friday, April 29, 2011

ரஜினி படங்களின் வெற்றி - யார் காரணம்? ஒரு அலசல்..!

எந்திரன் என்ற "திணிக்கப்பட்ட" திரைப்படத்திற்கு பிறகு, ரானா என்றதொரு படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்..

இனி பத்திரிகை விபச்சாரம் கொடிகட்டி பறக்கும்...தீபிகா படுகோனே என்றொரு நடிகை கஷ்டப்பட்டு கொண்டு வந்தாயிற்று..பத்தாதற்கு அவருக்கு இவள் மட்டும் ஜோடி அல்ல இன்னும் பல நடிகைகள் என்று அனைத்து நடிகைகளையும் கூட்டி கொடுக்க மாமா வேலை பார்க்கும் அனைத்து ஆபாச பத்திரிக்கைகளும் தயார்..வேறு வேலை?

மேலும், வலைப்பதிவிலும் அனைத்து விசயங்களும் பின்னுக்குத்தள்ளப்பட்டுவிட்டு, இனி ரஜினியின் அடுத்த படம் பற்றிய கற்பனைகளே முன்னிலை வகிக்கும்..விமர்சிப்பவருக்கும் சரி, ஜால்ராக்களுக்கும் சரி,  இதுதான் வேலையாக இருக்கும்

அதிர்ஷ்டம் மட்டுமே மூலதனமாகக்கொண்டு வெற்றிபெறுபவர்கள் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.

மக்களுக்கு ஆபாசத்தையும்  அருவருப்பான விசயங்களையும் திணிக்கும் இந்த கேவலமான பிழைப்புக்கு திறமை ஒரு சதவீதம் இருந்தால் போதும்..வெறும் கேளிக்கை ஆட்டங்களினால் மட்டுமே பெரும் பிரபலமாகிவிடலாம் என்பதற்கு இக்கால கேடுகெட்ட சினிமாக்களே சாட்சி.

ஆரம்ப காலங்களில் வில்லனாகவும்,  பிறகு, தாய் தந்தையரை கொன்ற வில்லனை முப்பது வருடங்கள் கழித்து பழிவாங்கும் எம்ஜிஆர் கதைகளிலும் நடித்து வந்த ரஜினி, பிறகு, இந்தியில் வந்த அமிதாப்பின் மொக்கை படங்களில் நடித்து பிரபலமானார்.

முன்பு தினமலர் வாரமலர் என்ற பத்திரிகையில், கோ. பி. சி. நிருபர் என்று சிலரை குறிப்பிடுவார்கள்..அதாவது கோழி பிரியாணி சினிமா நிருபர் என்று பெயர்..இவர்களுக்கு, கோழி பிரியாணியும் சாராயமும் வாங்கிகொடுத்துவிட்டால் எப்பெற்பட்டவனையும் புகழ்ந்து அவனை பெரிய ஆளாக காட்டி விடுவார்கள்..

ஆப்படி வளர்ந்தவர்தான் ரஜினி..அவரது எந்த படங்களும் தரமானவை அல்ல..சிகரெட் பிடிப்பதும், சாராயம் குடிப்பதும் மட்டுமே அவர் படங்களில் மக்கள் அறிந்த்தது..

ரஜினியின் ஆரம்பகால திரைப்படங்களிங் பெயர்கள்கூட, போக்கிரி ராஜா, பொல்லாதவன், குப்பத்துராஜா, காளி, பில்லா, ரங்கா என்று பொறுக்கித்தனமான பெயர்களே.

ஆட்டோ சங்கர், சந்தனக்கடத்தல் வீரப்பன், விடுதலைப்புலி பிரபாகரன்  போன்ற கொடிய குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கிய ஆபாச பத்திரிக்கைகளான நக்கீரன், ஆபாச விகடன், குமதம் போன்றவைகள்தான் இதுபோன்ற சீர்கேட்டுகளுக்கும் விளம்பரம் அளித்து பிரபலப்படுத்தின..இதுபோன்ற அவலங்கள் பொறுக்கிகளுக்கு வேண்டுமானால்  உற்சாகம் அளிக்கலாம்..ஆனால் மக்களுக்கு?

சமீபகாலமாக இவரது வெற்றிபடங்களுக்கான காரணங்களும் இவரல்ல எனபது கோழி பிரியாணி மற்றும் சாராய நிருபர்களுக்கு தெரிந்ததுதான்..ஆனால் வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல், இந்த கேவலமான பின்னனி உள்ளவரை தமிழகத்தின் முதல்வராக்கவும் துணிந்துவிட்டனர்.

இதற்க்கு  ஆபாச விகடன், நடிகைகளின் படுக்கையறை குமுதம், நக்கீரன் போன்ற ஆபாச பத்திர்க்கைகளும் உடந்தை.

அண்ணாமலை என்ற படத்தை அப்போது, வசந்த் என்ற இயக்குனர் இயக்க மறுத்துவிட்டதால், சுரேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கினார்.

அந்த சமயத்தில் குஷ்பு என்ற ஆபாச நடிகையை அதில் நடிக்கவைத்து, ஆபாச கவிஞர் வைரமுத்து என்பவர் "கொண்டையில் தாழம்பு, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ..குஷ்பூ" என்ற அருவருப்பான பாடலும் எழுதி படத்தை பரபரப்பாக்கி விற்றனர்.

ஏற்கனவே ரஜினி நடித்து வெளிவந்த "நல்லவனுக்கு  நல்லவன்" என்ற படத்தின் மறு பிரதிதான்  அந்த படம்.

அதன் பிறகும் ரஜினியை முன்னிறுத்தி வெளிவந்த "உழைப்பாளி"  வீரா போன்ற படங்கள் எடுபடவில்லை.

பிறகு வெளிவந்த பாட்சா என்றபடத்தில் அப்போது பரபரப்பான கவர்ச்சி நாயகியாக வலம்வந்த நக்மா என்ற நடிகையை நடிக்கவைத்து ஒட்டினர்.
இந்த படம் கூட அமிதாப் பச்சன், கோவிந்தா மற்றும் ரஜினி நடித்த "ஹம்" என்ற ஹிந்திப்படத்தின் தழுவல்தான்.

போயஸ் கார்டனில் அப்போது முதலமைச்சர் ஆக ஜெயலலிதா இருந்ததால் அதே போயஸ் கார்டனில் குடியிருந்த ரஜினிக்கும் சில கெடுபிடிகள் இருந்தன. அந்த கோபத்தை, பாட்சா படத்தின் 175  ஆவது நாள் விழாவில் ரஜினி காட்ட, அதை இந்த கோ.பி.சி.நிருபர்கள் பெரிது படுத்தி வருங்கால முதல்வர் என்ற ரேஞ்சுக்கு கொண்டு சென்றதால் பாட்சா படம் இன்னும் பிரபலமானது.

அதன் பிறகு அவரே கதை வசனம் எழுதி நடித்த  வள்ளி   என்ற படம் ஊற்றிக்கொண்டதும் ஊரறிந்த செய்தி..

எ.ஆர் . ரஹ்மானின் பிரபலத்தை வைத்து, மலையாளத்தில் வெளிவந்த ஒரு படத்தை முத்து என்ற பெயரில் வெளியிட்டு சுமாராக ஓடியது. அந்த படம் ஜப்பானில் பிரபலமானதர்க்குகூட அதி நடித்த மீனா என்ற நடிகையே காரணம் என்பதையும் இந்த கோ.பி. சி. நிருபர்கள்  வசதியாக மறைத்துவிட்டு, எல்லா வெற்றிக்கும் ரஜினியே காரணம் என்று குட்டிகரணம் அடித்து வந்தனர்..அதன் பிறகு ரஜினி நடித்த எந்த படமுமு ஜப்பானில் எடுபடவில்லையே ஏன்?

முத்துவிற்கு பிறகு வந்த அருணாச்சலம் ரஜினியை முன்னிறுத்தி எடுக்கப்பட்டதால் தோல்வியையே தழுவியது.

படையப்பா அப்போது ஜெயலலிதா எதிர்ப்பு அலையில் அவரது கதாபாத்திரத்தை  பிரதிபலித்த ரம்யா கிருஷ்ணன் என்ற நடிகையின் நடிப்பால் பிரபலமானது.

படையப்பா வுக்கு பிறகு ஜால்றாக்களினால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட "பாபா" வின் பரிதாப நிலை எல்லாரும் அறிந்ததுதான்.

அதன் தோல்வியினால் துவண்டு கிடந்த ரஜினிக்கு, "சந்தரமுகி" என்றபடம் சற்று தெம்பளித்த்தது..இருந்தும் அப்படத்தின் வெற்றிக்கும் ரஜினிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..காரணம் அந்த பாத்திரத்தில்  தோல்வி படங்களுக்காக  நடித்துகொண்டிருக்கும்   "அருண் பாண்டியன்" அல்லது அப்பாஸ், அல்லது சாம், போன்ற நடிகர்கள் நடித்திருந்தாலும் படம் ஓடி இருக்கும்..அதன் வெற்றிக்கு காரணம் வடிவேலுவின் காமெடியும், ஜோதிகாவின் நடிப்பும்தான் எனபது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை..

அதன் பிறகு பெரிதும் எதிர்பார்த்த மலையாள காப்பி படமான "குசேலன்" அல்வா கொடுத்ததும், "சிவாஜி"  சிரிப்பாய் சிரித்ததும், எந்திரன்  எதிர்பார்புகளை ஏமாற்றியதும் தமிழ்நாட்டு மக்களின் மழுங்கி போன
மூளைக்கு  சான்று..


11 comments :

மர்மயோகி said...

இந்த சினிமாக்காரர்கள் விசயத்தில் மட்டும் நிறையபேர் மௌனம் சாதிப்பது ஏனென்றே தெரியவில்லை..

Nandagopal.M.P said...

விடுதலைப்புலி பிரபாகரன் போன்ற கொடிய குற்றவாளி????????tamilana nee yara yaroda compare panra elutha idam kidaicha enna vennunalum elutharatha yosichu eluthunga

மர்மயோகி said...

நன்றி திரு nandagopal M.P. அவர்களே
அமிர்தலிங்கம், பத்மநாபா, ஸ்ரீ சபாரத்தினம் போன்ற சக தமிழ் தலைவர்களை ஈவு இரக்கமின்றி கொன்றது, எங்கள் நாட்டிலேயே வந்து ராஜிவ்காந்தி உட்பட பலரை கொன்றது, இன்னும் பல்வேறு தீவிரவாத செயல்களை இந்தியாவில் செய்துகொண்டிருக்கும் தடை செய்யப்பட இயக்கமான விடுதலைப்புலிகளின் தலைவன் பிரபாகரன் இன்னும் இந்தியாவில் தேடப்பட்டு வரும் ஒரு பயங்கர குற்றவாளிதான்..
தமிழன் என்றால் .. தப்பு செய்யலாமா? அவனை பயங்கரவாதி என்று சொல்லக்கூடாதா?

பொன்கார்த்திக் said...

பத்து வார்த்தைய ஒன்றாக சேர்த்து கோர்க்க தெரிந்தால் நீர் என்ன வேண்டுமனாலும் எழுதுவீரோ? இவ்வளவு கேவலமாக சிந்தித்த உம்மிடம் வாதிட விருப்பமில்லை. ஆனால் இதை இப்படியே விட்டு செல்ல மனம் இடம் குடுக்கவில்லை. அதனால் என் கண்டனங்கள்.

N.H. Narasimma Prasad said...

ஆஹா... என்ன ஒரு கற்பனை? இப்படி ஒரு கேவலமான பதிவு போடுவதற்கு இந்த கேவலமான கற்பனை தேவை தான். நான் வெகுநாட்கள் கழித்து இப்படி ஒரு மட்டமான பதிவை படிக்கிறேன். சரி உங்கள் விஷயத்திற்கு வருவோம். உங்களை போல ஒட்டு வாங்குவதற்காகவே ஒரு பதிவன் இருக்கும்போது ரஜினி போன்ற நடிகர்கள் இருப்பது தப்பில்லையே? எதற்கெடுத்தாலும் 'மக்களுக்கு உபயோகமானவை' என்று சொல்கிறிர்களே, நீங்கள் உங்கள் பதிவில் மக்களுக்கான ஒரு உருப்படியான பதிவு எழுதியிருந்தால் அனைவருக்கும் முதலில் தெரிவியுங்கள். 'ஆபாச நடிகைகள்' என்று சினிமா துறையில் உள்ளவர்களை பற்றியே குறை சொல்கிறீர்களே, மற்ற துறைகளில் மக்கள் ஒழுக்கசீலர்களாக இருக்கிறார்களா? முதலில் நீங்கள் டிவி பார்ப்பதை விட்டுவிட்டு வெளியில் என்ன நடக்கிறதென்று முதலில் பாருங்கள். கடைசியாக ஒன்று. இந்த பதிவு பிரபலமானதற்கு முக்கிய காரணம், உங்கள் பதிவின் தலைப்பில் உள்ள 'ரஜினி' என்ற மூன்று எழுத்து தான். கண்டிப்பாக நீங்கள் எழுதிய கொஞ்சமும் கற்பனைக்கெட்டாத, மட்டமான பதிவல்ல. வழக்கமாக இது ஒரு உபயோகமற்ற பதிவு.

மர்மயோகி said...

நன்றி பொன் கார்த்திக்
நன்றி N.H. பிரசாத்
மட்டமான பதிக்கே இவ்வளவு பெரிய பின்னூட்டமா..ஹாஹா..

Unknown said...

விடுதலைப்புலி பிரபாகரன் போன்ற கொடிய குற்றவாளி????????
மர்மயோகி அவர்களே ஒரு சிலரை கொன்றதால் அவர் குற்றவாளி என்றால் கொலை செய்யப்பட்டவர்கள் என்ன யோகியமனவர்களா ?
தமிழன் என்று ஒரு பெயர் இருக்கும் வரை பிரபாகரன் என்ற பெயரும் நிலைத்து நிற்கும் என்பதி ஐயமில்லை. சிங்களவனிடம் அடி பட்ட தமிழனுக்கு தான் அவர் அருமை தெரியும். நீ எதை சாதிக்க நினைக்கிறாய்!! ஒரு உன்னதமான ஒரு போராளியை அசிங்கபடுதுவதை விட உனக்கு என்னதான் தெரியும் ?? ஒரு சினிமா காரனை விமர்சிக்க தலைப்பு எழுதினால் அந்த வேலைய மட்டும் பார் இல்ல அசிங்க பட்டுருவ

Unknown said...

தமிழன் என்று சொல்லிக்கொண்டு தமிழனை இழிவு படுத்துவதை தவிர உன் எழுத்துகளால் ஒரு பருக்கை சோறு உன் அம்மாவுக்கு கொடுக்கும் வழியை பார்

nare said...

I agree to much of the writings in this article. many of the comments are by half backed neo literates may be from first generation graduates who see sudden wealth due to this boom and have NO HISTORICAL knowledge about their own roots....I don't mind to say in my younger days I was an ardent fan of Rajini... I was innocent then.Later I understood his ploy.... He is greedy and selfish to the core... for his own sake he will stoop to any level....I never watch Movies even in Cable TVs then.. After witnessing Rajini's cheap methods in promoting his Baba and using the loopholes in the law I stopped watching his movies in theaters...I dont see them or watch them in CD or cable tvs only. Like that on Prabakaran one nandhagopal spit venom on the writer. I pity him for his ignorance about the history of Srilankan Tamil.... PRABAKAAN is a MASS murederer....If any one wants proof READ the history of srilanka properly be making a serious efforts... Dont eat and drink what these third rate news papers feed you as history....They are not our people and not good people.....AVARKAL NAMMAVARKALUM ALLA NALLAVARKALUM ALLA.

We as TAMILS would extend our helping hands to anyone suffering....In that manner they too qualify to get our support for their sustenance...PERIOD.....

Nice piece Marmayogi....Dont bother about these junkies....

nare said...

nare said...

I agree to much of the writings in this article. many of the comments are by half backed neo literates may be from first generation graduates who see sudden wealth due to this boom and have NO HISTORICAL knowledge about their own roots....I don't mind to say in my younger days I was an ardent fan of Rajini... I was innocent then.Later I understood his ploy.... He is greedy and selfish to the core... for his own sake he will stoop to any level....I never watch Movies even in Cable TVs then.NOt a day would pass without seeing a movie in THEATER. After witnessing Rajini's cheap methods in promoting his Baba and using the loopholes in the law I stopped watching his movies in theaters...I dont see them in the first place or watch them in CD or cable tvs only.

Like that on Prabakaran one nandhagopal spit venom on the writer. I pity him for his ignorance about the history of Srilankan Tamils.... PRABAKAAN was a MASS murderer....If any one wants proof READ the history of srilanka properly by making a serious effort... Dont eat and drink what these third rate news papers feed you as history....They are not our people and not good people.....AVARKAL NAMMAVARKALUM ALLA NALLAVARKALUM ALLA.

We as TAMILS of TAMIL NADU in this BHARATH would extend our helping hands to anyone suffering....In that manner they too qualify to get our support for their sustenance which we are extending...PERIOD.

Nice piece Marmayogi....Dont bother about these junkies....

Sorry to post again. I just corrected some typos
May 2, 2011 11:35 AM

Dr. Selvaganesan said...

ரஜினியின் வெற்றிக்கு யார் காரணம்? வேறு யார்...இளிச்சவாய் தமிழன் தான்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?