Pages

Wednesday, June 15, 2011

ஆட்சியாளர்களுக்கு அடிவருடும் ஆபாச பத்திரிக்கைகள்...



அதிமுக அரசு ஆட்சியமைத்து ஒரு மாதங்களை நெருங்கிவிட்டது..

தேர்தலுக்கு முன்பும், தேர்தல் சமயத்திலும், அப்போதைய ஆளும்கட்சிக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருந்த , - காரணம் - பெரும்பாலும், கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தையும் மிரட்டலையும் சமாளிக்க முடியாமல் உள்ளுக்குள் புலம்பிக்கொண்டிருந்த -பத்திரிக்கைகள், ஆட்சி மாற்றம் நிழ்கந்தவுடன் தங்கள் ஆனந்தத்தை வெளிக்காட்டி குதூகலித்தன.

கருணாநிதியின் இந்த படுதோல்விக்கு காரணம் - அவரது கடந்த கால ஆட்சியின் ஊழலும், குடும்ப உறுப்பினர்களின் அளவுக்கதிகமான தலையீடுதான் என்று தெரிந்தும், ஜெயலலிதா ஏதோ சாதனை செய்தும், தனது திறமையினாலும்தான்  மறுபடியும் வெற்றிபெற்றார் என்பதுபோல தமது மன இச்சைப்படி பொய்களை பரப்பி வருகின்றன..

இப்படி ஒவ்வொருத்தரும் தமது சொந்த கருத்துக்களையும், தமது சொந்த விருப்பு வெறுப்புகளையும் மக்களிடம் திணிப்பதிலேயே குறியாக இருந்துகொண்டு, பொய்களையும் புரட்டுகளையும் பரப்பி, பொதுமக்களை - ஏற்கனவே சினிமா - சின்னத்திரை - மாயைகளால்  அறிவிழந்து முட்டாள்களாக இருக்கும் பொதுமக்களை  மேலும் முட்டாள்களாக்கி வருகின்றன.

ஜெயலலிதா தாம் ஆட்சி அமைக்கும்போதே, கோமாளி சோவின் ஆலோசனையின் பேரில்  ஒரு பயங்கரவாதி நரேந்திர மோடி என்பவனை அழைத்து அந்த பதவியேற்ப்பு விழாவை அசிங்கப்படுத்தினர்.
வீண் கூச்சலிட்டு ஒன்றும் உபயோகமில்லை என்று  தெரிந்து்ம்   பக்கத்து  நாட்டில் இருக்கும் ராஜபக்ஷேவை தூக்கில் போடவேண்டும் என்று கூக்குரலிடும் - இந்த மேதாவிகள், உள்நாட்டிலேயே கொலை - மதவெறியாட்டம் போட்ட பயங்கரவாதி நரந்திரன் மோடியை வரவேற்று மகிழ்ந்தனர்.
அவனை விரட்டி அடிக்கவேண்டிய பொறுப்பிலிருந்த போலி கம்யூனிஸ்ட்டுகள் கூடிகுலாவின.  முஸ்லிம்களுக்கான கட்சி என்று  ஓலமிட்ட தமுமுக வினர் புறமுதுகு காட்டி மோடியைக்கண்டு ஓடி ஒளிந்தனர்.

இப்படி ஆரம்பித்த ஜெயாவின் ஆட்சி, அவரது ஆணவத்தினாலும், பிடிவாதத்தினாலும் மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணமும் - படிப்பும்  நாசாமாவது கண்டும் இந்த ஜால்ரா போடும் ஆபாச பத்திரிக்கைகள் சிறிதும் வாய் திறக்காமல் மெளனமாக இருக்கும் காட்சி அருவருக்க வைக்கிறது.

மின்சார சேமிப்பு என்று இலவச டிவியை ஜெயலலிதா ரத்து செய்தார். எமிஜியாரால் கலைக்கப்பட்ட மேல்சபையை மீண்டும் கொண்டுவரமாட்டோம்  என்று மேல்சபை நியமனத்தையும் ரத்து செய்தார். எல்லாம் சரிதான்..

ஆனால் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டபட்ட காரணத்திற்காக, புதிய தலைமை செயலகத்தை புறக்கணித்திருப்பதை தட்டிக்கேட்க வக்கில்லாமல் இந்த ஆபாச ஜால்ரா பத்திரிக்கைகள் மயிரை    புடுங்கிக்கொண்டிருக்கின்றன.

இந்த கட்டிடம் கருணாநிதி சினிமா வசனம் எழுதி சாம்பாதித்து கட்டிய கட்டிடமல்ல.
ஜெயலலிதா எம்ஜியாருடனும், சிவாஜியுடனும்,  சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தில் கட்டிய கட்டிடமுமல்ல, இஷ்டத்திற்கு விட்டுவிட.
அத்தனையும் பொதுமக்களின் வரிப்பணம்..
இந்த பத்திரிக்கைகளும் சட்டமும் என்ன புடுங்கிகொண்டிருக்கின்றன என்று தெரியவில்லை..
அப்படியே அந்த கட்டிடம் முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லைஎன்றாலும்,  ஒரு குறிப்பிட்ட காலவரையறை கொடுத்து அதற்குள் முழுமையாக கட்டிமுடித்து அங்கேயே சட்டசபை இயங்கவேண்டும் என்று அறிவுள்ள எவனும் சொல்லுவான்.
இதை தட்டிகேட்க முடியாத கோழைகளாக சட்டமும் பத்திரிக்கைகளும் - ஆளும் கட்சிக்கு தலையாட்டும் அடிவருடிகளாக இருப்பது இந்நாட்டின்  சாபக்கேடு.

கருணாநிதி கட்டினார் என்பதற்காகவே புதிய தமைசெயலக கட்டிடத்திற்கு போக விரும்பாத ஜெயலலிதா, கருணாநிதி காலத்தில் கட்டிய பாலங்கள் சாலைகளில் பயணம் செய்யாமல் இருப்பாரா?

கருணாநிதி ஆட்சிகாலத்தில் கொண்டுவந்த சில நல்ல திட்டங்களையும் ரத்து செய்து ஆட்சியமைப்பையும் அரசியல் சாசன சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கி வருகிறார்.

கலைஞர் காப்பீடு  திட்டம் - சில பல குறைகள் இருந்தாலும் பலராலும் பாராட்டப்பட பயனளித்த நல்லதொரு திட்டம்தான்.
இவருக்கு பிடிக்காதது கருனாநிதியைதான்..தேவைப்பட்டால் அந்த திட்டத்துக்கு ஜெயலலிதா காப்பீடு திட்டம் என்று பெயரை வைத்துக்கொள்ளட்டும். பல லட்சகணக்கான மக்கள் பயனடைந்த இந்த திட்டத்தை ரத்து செய்து தனது சுய வெறுப்பு விருப்பை இதில் காட்டுவது ஏன்?
இதை கண்டித்து தட்டிக்கேட்க வேண்டிய  ஜால்ரா பத்திரிகைகளும் வாயையும் -----யும் மூடிக்கொண்டிருப்பது ஏன்?

சமச்சீர் கல்வியின் பாடும் இதே நிலைதான். சென்ற கல்வியாண்டில் அமல் படுத்தப்பட்ட இந்த சமச்சீர் கல்வி, இந்த ஆண்டில் திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் படிக்கும் மாணவர்களும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் இன்னும்  கல்வி  நிறுவனங்களும் பெருமளவில் குழம்பிப் போயிருக்கின்றன..
இன்னும் இதற்காக அச்சடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ருபாய் மதிப்புள்ள புத்தகங்களும், இன்னும் மாற்றியமைக்கப்பட்ட கல்வித்திட்டங்களுக்காக இனி மேலும் அச்சடிக்கப்பட்ட புதிய புத்தகங்களுக்கான பணமும் யார் வீட்டு பணம்?
மீண்டும் கேட்கிறேன், ஜெயலலிதா ஆடிப்பாடி நடித்து சம்பாதித்ட பணமா அவர் இஷ்ட்டத்துக்கு வீணடிக்க?

அடுத்ததாக மெட்ரோ ரயில் திட்டம்..பலவேறு நாடுகளில் வெற்றிகரமாக இயங்கிவரும் திட்டம்தான் மெட்ரோ ரயில் திட்டம்.

மலேசியா, ஜப்பான், அமெரிக்க போன்ற குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டு, நிதி பற்றாக்குறையிலும் நஷ்டத்திலும் இயங்கிவரும் இன்னொரு திட்டம் மோனோ ரயில் திட்டம்.

மெட்ரோ ரயில் திட்டத்தை நிறுத்திவிட்டு, மோனோ ரயில் திட்டத்தை தொடங்குவதாக அறிவித்திருப்பதும் கடைந்தெடுத்த முட்டாள்தனம்.

அதற்கும் ஆபாச பத்திரிக்கைகள் வாய்திறக்காமல் இருப்பதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

ரஜியினின் மருத்துவம் பற்றியும்,
கமலின் அடுத்தபடம் பற்றியும்
விஜயின் அரசியல் பிரவேசம் பற்றியும்,
வடிவேலுவின் சினிமா வாய்ப்பு பற்றியும்
சோனியா அகர்வாலின் மறுமணம் பற்றியும்
தமனாவின் நீச்சல் உடை பற்றியும்.
விஜயகாந்த் குடிப்பது பற்றியும்
முக்கியத்துவம் கொடுத்து எழுதும் ஆபாச வியாபாரிகளுக்கு
நாசாமாக போகும் மக்கள் பணத்தைப் பற்றி என்ன அக்கறை? 

33 comments :

K.P.RAJ said...

Arumaiyaka sonneerkal

தனி காட்டு ராஜா said...

//ரஜியினின் மருத்துவம் பற்றியும்,
கமலின் அடுத்தபடம் பற்றியும்
விஜயின் அரசியல் பிரவேசம் பற்றியும்,
வடிவேலுவின் சினிமா வாய்ப்பு பற்றியும்
சோனியா அகர்வாலின் மறுமணம் பற்றியும்
தமனாவின் நீச்சல் உடை பற்றியும்.
விஜயகாந்த் குடிப்பது பற்றியும்
முக்கியத்துவம் கொடுத்து எழுதும் ஆபாச பத்திரிக்கைகளுக்கும்
நாசாமாக போகும் மக்கள் பணத்தைப் பற்றி என்ன அக்கறை? //

Good Question..

மர்மயோகி said...

நன்றி திரு K.P. RAJ

மர்மயோகி said...

நன்றி திரு தனிக்காட்டு ராஜா

Deepak said...

Kena paya mathiri Katturai irukku....

nirvana said...

Serupadi pathivu. Ungalidathil enaku orey oru vizhathil matum udanpadilai. LTTE ku ethiraga neengal edukum karuthu. Neengal Rajiv Gandhi oru maperum thiyagi pola karuthigiraragal. Avan antha kalthileye nooru kodigalauku mela oozhal senjavan. Neengal ithanai maruka mudiyahtu. LTTE onum suma pozthupokirarga avanai kola vilai, avan edutha oru mudivu elangai tamizhargalin vazhkaiya thirupi potathu. Samathanam seyirenu solitu unga veetu pombalayai 40 peru karpazhicha unga mana nilai epadi erukum? Kan mooney ,Thai,thangai,Manaivi, Magalai parikothavarku thaan antha vali theriyum. Naam elithaga ezthi vidalam. Nichayamaga antha kora sambavangalal erunthu thapithavargal enum pala latcham peru nadai pinamaga vazhgirargal. Satrey yosiyangal thozharey. Velayan 400 aandu namai aandu pala ayiram uyirgalai edutha pozthilum naam endrum avanaku kaal kazhavi kondu erukinrom . eezham perai soli enga sila echai illaigal arasiyalil viyavbaram seiginrana.

மர்மயோகி said...

நன்றி திரு nirvaana
ராஜீவ் காந்தியை கொன்றது பற்றி நீங்கள் ஒரு காரணமா சொல்கிறீர்கள்..
ஆனால் அதற்க்கு முன்பே, சென்னை ஏர்போர்டில் குண்டு வைத்தது யார்?
பத்மநாபாவை சென்னையில் வைத்து கொன்றது யார்?
அமிர்தலிங்கத்தை கொன்றது யார்?
ஸ்ரீ சபாரத்தினத்தை கொன்றது யார்?
இவர்கள் தமிழர்கள் அல்லவா?
சரி அதையெல்லாம் விடுங்கள்..
ராஜ பக்ஷே அயல் நாட்டுக்காரன். அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு நாம் குரல்தான் கொடுக்க முடியுமே தவிர.. அதில் தலையிட முடியாது..
இது இத்தனை நாளாக இங்கே அரசியல் பிச்சை எடுக்கும் வைக்கோ என்பவனுக்கு தெரியாதா? அல்லது லேட்டஸ்ட் தமிழ் பற்று வியாபாரி சீமானுக்கு தெரியாதா?
ஆனால் நமது நாட்டிலே - குஜராத்தில் முஸ்லிம்கள் மீது - இலங்கை தமிழர்களைவிட கொடுமையான ஒரு பயங்கரவாதத்தை நிகழ்த்தினானே ஒரு பயங்கவாதி நரேந்திர மோடி என்பவன்..?
அவன் மீது நடவடிக்கை எடுக்க சொல்ல இந்த வைக்கோலுக்கோ, சீமானுக்கோ ஏன் மனமில்லை..
தமிழர்கள் மட்டும்தான் மனிதர்களா? முஸ்லிம்கள் மனிதர்கள் இல்லையா?

HBA said...

எதிர்கட்சி தலைவர் விருதகிரி விஜயகாந்த் என்ன ----- கொண்டிருக்கிறார்.

HBA.

மர்மயோகி said...

நன்றி திரு HBA
உங்களது கேள்விக்கு கட்டுரையின் கடைசி வரிகளில் பதில் இருக்கிறது என்று கருதுகிறேன்..

KOMATHI JOBS said...

VIJAYAKANTH: JING! CHA! JING! CHA!
JING! CHA! JING! CHA!

THA.PANDIYAN:JING! CHA! JING! CHA!
JING! CHA! JING! CHA!

G Ramakrishnan:JING! CHA! JING! CHA!
JING! CHA! JING! CHA!

VIJAYALASHMI SEEMAAN: JING! CHA! JING! CHA!
JING! CHA! JING! CHA!

Dinamala(m)r: JING! CHA! JING! CHA!
JING! CHA! JING! CHA!

Dinamani: JING! CHA! JING! CHA!
JING! CHA! JING! CHA!

THUKLAK: JING! CHA! JING! CHA!
JING! CHA! JING! CHA!
JING! CHA! JING! CHA!
JING! CHA! JING! CHA!

Blogger Sathishkumar & CPS:
JING! CHA! JING! CHA!
JING! CHA! JING! CHA!

ADMK Support Bloggers: JING! CHA! JING! CHA!
JING! CHA! JING! CHA!

Thameez said...

எடுங்கள் சவுக்கை. அடியுங்கள் அனைவரையும்

மர்மயோகி said...

நன்றி DMK JOB
விஜயகாந்த் வெற்றி "போதையில்" மயங்கி - ஜெயலலிதாவை எதிர்க்க திராணியின்றி கிடக்கிறார்.
தா பாண்டியன் எக்காலமும் ஜெயலலிதாவின் ஜால்ரா மட்டுமல்ல..ஜெயலலிதாவின் அடிமைகூட

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ப்ளாக்கர்ஸ் ஆனந்த விகடன் என்ற உலகின் கேவலமான ஆபாச பத்திரிகையின் அடிவருடிகள்..
அந்த ஆபாச விகடன் ஜெயலலிதா மற்றும் விஜயகாந்தின் அடிவருடி..

மர்மயோகி said...

நன்றி திரு thameez

nirvana said...

Naan ellaroyum manithanaga parthey pazhakapatavan. Enaku Tamizhargal,Muslimgal endru verubadu parka theriyathu. Neenga sona lingam,rathinam ponror onum uthmargal kidayathu. Matrapadi Vaiko,thirumavai thaan naan echai illaigal endru kuripitaen. Seeman mel enaku mathipum,mariyathaiyum undu. Avar Gujaratthil muslimgalaku ethiraga nadantha kora nigazhvagalauku kural kodakathathu thapu thaan. Matrapadi neengal solvathu anaithum sariye. Entha Modi ,Thackeray nam natinodoya visha chedigal. Athil enaku entha matru karuthum kidayathu.

Netru London il oru sambavam nadanthathu. Eru Prathamargal oru Hopital sendru angula noyaligalai parka sendrargal. Avargal iruvaram Hospital vithimuraigalai kadaipidikathalal angula oru doctor rendu peruyayum thiti vitu ,veliye poga soli irukirar. http://video.uk.msn.com/watch/video/doctor-interrupts-camerons-nhs-photo-op/2gy5ymuc?from=homepage_slideshow . Ethai kurithu oru pathivu velieetal konjam nandraga irukum. Indiavil oru satharna Jaathi sanga thalaivar patri kuda karuthu sola mudiyatha nilai.

Tirupurvalu said...

My dear friend ,

I am directly affected in coimbatore blast by muslims.I am not hate muslims still.I have lot of friends in Muslims .In India 90% of muslim peoples are converted in few centuries before .
Are you mad Muslims only effected in world .If you are tamil muslim you are not a true muslim only few centuries before you are converted .Sri lanka tamil guys are our relatives not other country peoples.Prabhakaran a man not engarage religion and cast in Tamil ellam.
How many peoples dies in Gujrat by Modi .How many peoples died in world by Muslims.Mad man try to think all peoples like live not alive in any religion .How u cry for muslims Tamil guys like Vaiko,Seeman ,Nedumaran all will struggle govertment of India to support Tamil ellam.
If you are true muslim please tell what is your ambition in your life gaza,kashmir, afganistan,pakistan,iraq,do you know what is he problem there only internal muslims fight each other died still please go and stop that stupid work then you come back to your block and cry about tamil ellam

Tirupurvalu said...

You are crying for Modi visit i am asking you one thing why muslim parties all not join and participate in election in Tamilnadu .Kerala there is lot of stories .Your muslim party joined with ADMK and elected some seats why they are not resign once Modi visited that function .They are muslims or not you have to answer for my questions if you are a true muslim and u born for yr mother and father .

In Sri lanka u see channel 4 video today around 1,00,000 peoples died in shell ,with out food ,with out medicine , with out blood ,raped , died in gujrat how many muslims died in huge qty or reason in Srilanka

If you are a true muslim and pray 5 times per day please pray for sri lankans and gurat muslims who died .Don't write like this silly and it going to down image in blocks .

jojo said...

ஜூவி......தயாநிதிக்கு கொடுக்குற முக்கியத்துவம் கூட ....எங்கட பிள்ளைகளின் சமசீர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கல .....ஈழ தமிழர் பற்றி பேசுறாங்க .......ஆனா நம்மள ஈன தமிழனா மாத்துறாங்க ?

krish a said...
This comment has been removed by the author.
krish a said...

Ananda vikatan should change the political view.

GM.BASHA said...

கண்டிப்பாக உங்களின் துணிச்சலை பாராட்டியே ஆகவேண்டும். உள்ளத்தில் எழும் எண்ணங்களை அப்படியே ஒளிவு மறைவின்றி சொல்லுவதற்கும் எழுதுவதற்கும் ஒரு தனி துணிச்சல் வேண்டும் அந்த வகையில் உங்களின் ஆக்கம் வரிக்குவரி எனக்கு பிடித்திருக்கிறது இந்த ஆக்கத்தின் மூலம் கண்ணாடியில் என்னையே பார்ப்பது போன்று உள்ளது நன்றிகள் பல.உங்களின் கட்டுரைகள் ஒருசிலவற்றை படித்திருக்கிறேன் ஆனால் இதற்குத்தான் பின்னூட்டம் போடவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது தொடரட்டும் உங்களின் சாட்டையடி.

Jee said...

அரசியல் காழ்புணர்ச்சியோடு செயல்படும் எந்த ஒரு அரசாங்கமும் உருப்பட்டது இல்லை.. ஆட்சியாளர்களுக்கும் , பணக்காரர்களுக்கும் துடைத்து விட்டே பழக்கப்பட்டுபோன ஒரு சில பத்திரிக்கைகள் மக்களை பற்றியும் அவர்கள் பணத்தை பற்றியும் என்றுமே மெனக்கெட போவதில்லை ! நம் தலைவிதி இது தான்.

Unknown said...

சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள்
இதை படித்தாலாவது அந்த பத்திரிகைகள் மற்றும்
அதை படிப்பவர்கள் திருந்துவார்களா என்று பார்ப்போம்.
தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.

மர்மயோகி said...

நன்றி திரு nirvana

மர்மயோகி said...

நன்றி திரு Tirupurvalu

நீங்கள் விடுதலைப்புலிகளின் கைக்கூலிகளான வைக்கோ போன்றோரின் அபிமானி என்று நினைக்கிறேன்..
அதனால்தான் சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் வெளிநாட்டு விசயங்களைப்பற்றி மட்டுமே குறிப்பிடுகிறீர்கள்.

மர்மயோகி said...

நன்றி திரு JOJO

ஜூவி ஆனந்த விகடன் போன்றவைகள் ஆபாச பத்திரிகைகள்தான் எனபது என் முடிவு..

மர்மயோகி said...

நன்றி திரு krish a

ஜூவி ஆனந்த விகடன் போன்றவைகள் ஆபாச பத்திரிகைகள்தான் எனபது என் முடிவு..

மர்மயோகி said...

நன்றி GM BASHA அவர்களே

மர்மயோகி said...

நன்றி Jee அவர்களே

மர்மயோகி said...

நன்றி Abul bazar /அபுல் பசர் அவர்களே

nirvana said...

http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od

Neram kidaithal thayavu seithu mel ula linkil ula videovai parkavaum.

"தாரிஸன் " said...

ம்ம்ம்... உங்கள மாதிரி ஒரு ரெண்டு மூணு பேராவது இருகீங்கலேனு சந்தோஷ பட்டுக்க வேண்டியதுதான்... வேறென்ன செய்ய??

நாடோடி said...

திரு மர்மயோகி அவர்களுக்கு,
தாங்களே தங்களுடைய ப்ளோக் பிரபலமாடைவதற்காக கவர்ச்சிகரமாண தலைப்புகள் இடுகிறீர்கள். அதுமட்டுமல்லாமல் தங்களுடைய பதிவை படிக்கும்போது கடந்த ஆட்சியில் ஏதோ பலன் அதைத்திருப்பது போல தெரிகிறது. மொடியின் அரசாங்கத்தில் முஸ்லிம் அன்பர்கள் பதவியில் இல்லையா. அல்லது தமிழ்நாட்டில் தான் இல்லையா. நீங்கள் சுதந்திரமாக கருத்துக்கள் பததிவிடவில்லையா. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் தங்கள் லாப நோக்கிர்காக கண்டதும் இடுகிறார்கள். காஷ்மீறில் தற்போதைய நிலைக்கு ஹிந்து அன்பர்களா காரணம். அதற்கு 100% காரணம் பாகிஸ்தான். மும்பை நிகழ்வுக்கு யார் காரணம்,என் இதே பாகிஸ்தானில் தினம் குண்டு வெடிப்புகள் நதகிரது.அதர்கும் நாம் அன்பர்கள்தான் காரணமா..தங்கள் பதிவு எழுதுவது முழுக்க முழுக்க தங்களுடைய கற்பனை வளத்தையும், தங்களுடைய வளைத்தலம் பிரபலமாடைவதற்கும் மட்டுமே எழுதுவதாக தோன்றுகிறது. இதுபோல வலைப்பதிவுகள் இடுவதற்கு பதில் நீங்கள் வேறு யாராவது எழுதிய பதிவை வெளியித்தாலே பொதும். இது போல அறைகுறையான உலகானுபாவத்துடன் விஷத்தனமான பதிவை தவிருங்கள்..

Unknown said...

unakkum antha puththi iruppathaal thaan neeyum sex seithikalaaka paarththu vimarsanankal seykiraay...

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?