Pages

Wednesday, February 24, 2010

என்னா வில்லத்தனம்?

என்னதான் விஷயம் ஒன்றுமில்லை என்றாலும் காலையில் தினத்தந்தி பார்க்கவே செய்கிறோம் (கவனிக்க : பார்க்கவே செய்கிறோம்..படிக்க அல்ல) அதில் கள்ளத்தொடர்பு, விபச்சார அழகிகள் போன்ற செய்திகள் சுவராஸ்யமானவைதான் ...(என்னடா பல்டி அடிச்சுட்டானேன்னு நினைக்கவேண்டாம்.)


தினத்தந்தி படிக்குபோது சில கேள்விகள் எனக்குள் எழும்.


கன்னித்தீவுக்கு படம் போடும் பாலன் என்பவருக்கு என்ன வயதிருக்கும் (அல்லது அவரும் சிந்துபாத் போலத்தானா...இன்னும் எதனை நூற்றாண்டுகளுக்கு வயதாகாமல் இருப்பாரு?)

சாணக்கியன் சொல் யாரு சொல்றது? (அந்த சாணக்கியன் எங்கே இருக்காரு?)

ஆண்டியார் என்ன கேரக்டர் ?

விபச்சாரிகளை அழகிகள் என்று அழைப்பது ஏன்?

அந்தரங்க உறவுக்கு உல்லாசம் என்று பெயர் வைத்தது யார்?

தெரிந்தே கெட்டுபோகும் பெண்களின் பெயரை மாற்றி போட்டு - பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று அடைப்புக்குறிக்குள் போடுவது ஏன்?


யார் குற்றம் செய்தாலும்..முதலில் அவர்களது செக்ஸ் தொடர்பு பற்றியே கற்பனையாக எழுதுவது ஏன்?

இந்த கேள்விக்கு யாருக்காவது சரியான விடை தெரிந்தால் சொல்லுங்களேன்..உங்கள் பெயரில் ஒரு பதிவு போட்டுவிடுகிறேன்..

அப்புறம் "என்னா வில்லத்தனம்" - தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டுவிடாதீர்கள்..ஹி ஹி சும்மா ஹிட்டுக்காகதான்!

3 comments :

அண்ணாமலையான் said...

நல்ல கேள்விகள்தான்

ManA © said...

ukkaNthiruNthu yoachienkaloa?

மர்மயோகி said...

நன்றி அண்ணாமலையான், மற்றும் மணா அவர்களே..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?