Pages

Monday, April 4, 2011

போட்டிபோட்டு விளம்பரம் செய்யும் டாஸ்மாக் விளம்பரதாரர்கள்..

முதலில் ஜெயலலிதா ஆரம்பித்து வைத்தது..

விஜயகாந்த் குடித்து விட்டு சட்டசபைக்கு வருகிறார் என்று பரபரப்பை கிளப்பிவிட்டார்...

"அவர்தான் ஊற்றிக் கொடுத்தாரா?" என்று விஜயகாந்த் பதிலளித்தார்....

இன்று இந்த தேர்தல்களத்தில் எல்லா பிரச்சினைகளும் பின்னுக்குதள்ளப்பட்டுவிட்டு அவன் குடிக்கிறான், இவன் குடிக்கிறான் போன்ற அருவருப்பான விஷயங்களே பிரதானமாகிவிட்டன..

விஜயகாந்த் கருப்புக்கண்ணாடி போட்டுகொண்டு பேசும்விதம் சந்தேகத்தை உண்டுபன்னவே செய்கிறது..பத்தாதற்கு வேட்பாளரை பலர் முன்னிலையில் அடித்தது அது உறுதியாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது..

வடிவேலு போகும் இடமெல்லாம் விஜயகாந்தை பற்றி அவர் குடிகாரன் என்று சொல்வதற்கே இந்த பிரச்சாரத்தை பயன்படுத்திகொள்வது போலவும் இருக்கிறது..

விஜயகாந்த் குடிக்கிறார் என்று வடிவேலு சொல்ல., வடிவேலு குடிக்கிறார் என்று சிங்கமுத்து சொல்ல, வடிவேலு தனது பிரச்சார வேனுக்கருகில் நிற்பவர்கள் அதட்டுவதைகூட, வடிவேலு குடிபோதையில் திமுக தொண்டனை அடிக்கும் காட்சி என்று ஜெயா டிவி சொல்லிக்கொண்டிருக்கிறது.

கலைஞர் மற்றும் சன் டிவிகளோ, விஜயகாந்த் "உங்களுக்கு ஆப்பு வெக்கணும்னா.."ஆப்" அடிச்சாதான் சரியாவரும்" என்று சொன்னதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது..

தினகரனில் விஜயகாந்த் வாய் குளறுவதால் பேசுவது புரியவில்லை என்று எழுதி உள்ளார்கள்..
மொத்தத்தில் இந்த தேர்தல் பிரச்சாரம் சாரயத்திர்கான ஒட்டுமொத்த விளம்பரமாக இருக்கலாம் என்றுகூட ஐயம் ஏற்படுகிறது..

ஆனந்த விகடன் என்கிற ஆபாச விகடன் கூட, டாஸ்மாக் கடைகளுக்கு சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் ஏன் இன்னும் சப்ளை பண்ணிகொண்டிருக்கிறதே என்று கேட்கிறான்..அதே ஏன் ஜெயலலிதாவிடம் கேட்கவில்லை? ஏன் கருணாநிதி ஆட்சியில் சசிகாலாவின் கம்பெனி இன்னும் அவர்களுக்கு சப்ளை செய்கிறார்கள்?



டிஸ்கி: கோடி கோடியாக கொடுத்தாலும் மதுபான விளம்பரத்தில் நடிக்கமாட்டேன் என்று சொன்ன சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் உலககோப்பை வெற்றிக்கொண்டாட்டத்தில் ஷாம்பெயின் பாட்டிலை குலுக்கிக்கொண்டு பீய்ச்சி அடித்ததும், கோடிக்கணக்கானோர் பார்த்துகொண்டிருக்கும்போது குடித்துகொண்டிருந்ததும் கண்கொள்ளாகாட்சி..ஹ்ம்ம்ம்






7 comments :

பொ.முருகன் said...

ஆக மொத்தம் வாக்காளர்கள் புல்லா குழம்பிப்போய்யிருக்கிறாங்க.

சக்தி கல்வி மையம் said...

என்ன செய்ய...நாமளும் அதை பார்கிறோம்..

ஷர்புதீன் said...

half adichchaa sariyaaidum!

Barari said...

குடிப்பவனை ஒழுக்கம் கெட்டவனாக ஒதுக்கி வைத்த காலம் போய் குடிப்பவனை கூத்தாடியை தலைவனாக ஏற்று அவனுக்கு ஜே போட ஒரு பாமர கூட்டம்.எல்லாம் காலத்தின் கோலம்

Unknown said...

//டிஸ்கி: வெற்றிக்கொண்டாட்டத்தில் ஷாம்பெயின் பாட்டிலை குலுக்கிக்கொண்டு பீய்ச்சி அடித்ததும், கோடிக்கணக்கானோர் பார்த்துகொண்டிருக்கும்போது குடித்துகொண்டிருந்ததும் கண்கொள்ளாகாட்சி..ஹ்ம்ம்ம்//

ஷாம்பெயின் போதை தராது
அவர் குடிப்பது போதைக்கல்ல, அந்த உற்சாகத்தில் பங்கு கொண்டதற்க்கு

அலைகள் said...

கூத்தாடிகளை அரசியலுக்கு கொண்டுவந்தால் குடிகிரதைபற்றிதான் மாறிமாறி பேசுகிறார்கல்!?நல்ல கிகாதான் இருக்கு.போதை அரசியல்!

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட அன்பர்கள்
B.MURUGAN
வேடந்தாங்கல் - கருன்
ஷர்புதீன்
Barari
ஆகாய மனிதன்
அலைகள்
மற்றும், பதிவை பார்த்துசென்ற அனைவருக்கும்
நன்றி

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?