Pages

Thursday, March 3, 2011

ஓநாய் அழுத கதை தெரியுமா?



2010 ம் வருடத்தைத் தொடர்ந்து, 2011 ம் வருடமும் ஊழல்கள் வரிசையாக வெளிவரும் நேரமாக இருக்கிறது. அல்லது இதெல்லாம் முன்பே தெரிந்த ஊடகங்களும் எதிர்கட்சிகளும், தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வெளியிடலாமா என்று காத்திருந்து, இப்போது ஆறு மாநிலங்களுக்கும் தேர்தல்கள் வரும் நேரம் இந்த ஊழல்களை வெளிச்சமிட்டு காட்டுகின்றனவோ என எண்ணவும் தோன்றுகிறது..

சட்டசபை தேர்தலை முன்னிட்டே இவ்வளவு பெரிய பெரிய ஊழல்கள் வெளிவரும்போது, பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இதைவிட பெரிய அளவில் செய்யப்பட்ட ஊழல்கள் வெளிவருமோ என்றும் அச்சமாக உள்ளது.

காமேன்வேல்த் விளையாட்டுப் போட்டி ஊழல்

கார்கில் வீரர்களுக்கான பிளாட் ஒதுக்கீட்டில் ஊழல்

ஸ்பெக்ட்ரம் ஊழல்

ஜி பாண்ட் ஊழல்களைத்தொடர்ந்து

பிரசார்பாரதி ஊழல் என்று இன்று புதிதாக இன்னுமொரு ஊழல்..

ஏறக்குறைய 138 கோடி ரூபாய் முறைகேடு நடந்த விஷயம் வெளியானதை தொடர்ந்து, பிரசார்பாரதி தலைவர் லல்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மாநில அரசும் மத்திய அரசும், போட்டி போட்டுக்கொண்டு செய்யும் இந்த கொள்ளைகளைப் பற்றி அலறும் எதிர்க் கட்சிகள் எதனால் அலறுகின்றன?

ஏதோ மக்களின் வரிப்பனமேல்லாம் இப்படி வீணாகிறதே என்றா?

ஹ்ம்ம் அப்படி நினைத்தால் நாம் இன்னும் ஏமாளிகள்தான்

நம்மால் சுருட்டமுடியாதே என்று தான் அவை அலறுகின்றன..

இதோ ஊழல் கட்சிகளான தி. மு.கவும், காங்கிரசும், சிறிதும் கூச்சமின்றி, கூட்டணிக்கு பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன..

இன்னும் கொஞ்ச நாட்களில், ஊழல் செய்வது எனபது கூட ஒரு கட்சியின் அங்கீகாரத்திற்கான சான்றாகிவிடும் போலிருக்கிறது..



8 comments :

சக்தி கல்வி மையம் said...

I...

சக்தி கல்வி மையம் said...

ஓட்டு போட்டுட்டு அப்புறம் படிக்கிறேன்.. எலக்ஷன் வரதில்ல..

சக்தி கல்வி மையம் said...

இதோ ஊழல் கட்சிகளான தி. மு.கவும், காங்கிரசும், சிறிதும் கூச்சமின்றி, கூட்டணிக்கு பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன..

இன்னும் கொஞ்ச நாட்களில், ஊழல் செய்வது எனபது கூட ஒரு கட்சியின் அங்கீகாரத்திற்கான சான்றாகிவிடும் போலிருக்கிறது.. ///
சரியாகச் சொன்னீர்...
சவுக்கடி பதிவு...

சக்தி கல்வி மையம் said...

tamil10???????

மர்மயோகி said...

நன்றி நண்பரே..
உங்கள் கவிதைகள் உணர்வுப்பூர்வமானவை..

மங்குனி அமைச்சர் said...

oolalukku thani ministry amaikkap poraangalaam .........

மர்மயோகி said...

இது மங்குனி பஞ்ச்..நன்றி மங்குனி..(ரொம்ப நாளா ஆளைக்காணோம்? - ப்ளாஷ் பேக் பதிவு போட்டதுல ஆளாளுக்கு கொடுத்த அடியோட வலி இன்னும் தீரலையா?)

மாயாவி said...

காங்கிரஸ் திமுகவின சாதனையை ஊழலில் முறியடிக்க உள்ளது.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?