Pages

Tuesday, March 22, 2011

பார"தீய" ஜனதா பயங்கரவாதிகளின் போக்கிரித்தனம்..

சென்ற 2008 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக காங்கிரஸ் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகள் வாபஸ் பெற்றன..ஆட்சிக்கு நாக்கை தொங்கப்போட்டு அலைந்து கொண்டிருந்த பார"தீய" ஜனதா என்கிற பயங்கரவாத கட்சி எதிர்கட்சிகளை சேர்த்துக்கொண்டு நம்பிக்கையில்ல தீர்மானம் கொண்டுவந்தது..



அந்த சமயத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு வெற்றிபெற்றது....பதவி வெறிகொண்டு அலைந்த பார"தீய" ஜனதா என்கிற பயங்கரவாத கட்சி மூக்குடைபட்டு நின்றது..

அடுத்த வந்த தேர்தலிலும் அந்த பயங்கரவாதிகள் படுதோல்வி கண்டன..

சென்றவாரம் விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் காங்கிரஸ் கட்சி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எம்பிக்களுக்கு லஞ்சம் வழங்கியதாக செய்தி வெளியிட்டது..


மக்கள் பணத்தை வீணடிக்கும் இந்த வீணர்கள் கூட்டம், இதையும் ஒரு காரணமாக கொண்டு பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் வெறியாட்டம் போட்டன..



இதோ விக்கிலீக் இந்த பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை போட்டுடைத்துள்ளது.



"அணு ஒப்பந்த விவகாரத்தில் தங்களது கூக்குரல் வெறும் அரசியல்தான்..அமெரிக்கா அரசு அதை கண்டுகொள்ள வேண்டாம்.." என்று அந்நாட்டு தூதுவரிடம் சொன்ன செய்திகளை விக்கிலீக் வெளியிட்டுள்ளது..



ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த வெறியாட்டம், மசூதிகளை உடைப்பது, பாராளுமன்றத்தை முடக்குவது - ஆட்சியை பிடித்தால் ஊழலில் முதலிடம் வகிப்பது (உதாரணம் பங்காரு லட்சுமணன், எடியூரப்பா), மதக்கலவரத்தை உண்டாக்கி அப்பாவிகளை கொல்வது - உதாரணம் பயங்கரவாத வெறியன் நரேந்திர மோடி..

இப்படி அடுக்கடுக்காக வெறியாட்டம் நடத்தும் இந்த பயங்கரவாதிகள் இந்தியாவில் கட்சி நடத்ததான் வேண்டுமா?

3 comments :

சக்தி கல்வி மையம் said...

நல்ல அலசல்..

மர்மயோகி said...

நன்றி திரு வேடந்தாங்கல் - கருன்

faqirsulthan said...

ninaitthaalae inikkum padatthil oru vasanam varum,"ivan kaathalukkaaka ethaiyum thiyaakam seivaan. sila vaelai kaathaliyaiyae thiyaakam seivaan" bjp yin atthanai arasiyal viyaathikalum padhavikkaaka ethaiyum thiyaakam seivaarkal. samayatthil indhiyaavaik kooda.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?