Pages

Wednesday, March 23, 2011

ரஜினிகாந்துக்கு ஜப்பான் பிரதமர் அனுப்பிய கடிதம்..!

ஜப்பானின் ஏற்பட்ட பெரும் பாதிப்பு சாதாரண மக்கள் அனைவருக்கும் கொஞ்சமாவது மனத்துயரத்தை ஏற்படுத்தி இருக்கும்..

பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்ட நாடு, அறிவியல் வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் நாடு, சுறுசுறுப்புக்கும், மனிதாபிமானத்திற்கும் பெரிதும் பேசப்படும் நாடு..

எந்த ஒரு பாதிப்பிலிருந்தும் மீண்டுவிடும் தன்னம்பிக்கை மிகுந்த மக்கள்..

அந்த நாட்டில், நேற்று வரை வீட்டில் சகல வசதிகளோடு சந்தோசமாக வாழ்ந்து வந்த மக்களில் பெரும்பாலோனோர் இன்று அடிப்படை வசதிகூட இல்லாமல் அவதிப்படுவது எந்த நெஞ்சையும் கரையவைக்ககூடியது..

ஆனால் அதிலும் விளம்பரம் தேடிக்கொள்வதுதான் இந்த சினிமாக்கூத்தடிகளின் வழக்கம்போலும்..

ரஜினிகாந்த் என்பவரது ஒரு படம் ஜப்பானில் சற்று பிரபலமாகியிருந்தது..அதை வைத்து இங்குள்ள ஆபாச பத்திரிக்கைகள் அவருக்கு ஜப்பானே அடிமையாகிவிட்டதுபோல செய்திகள் வெளியிட்டு கல்லாகட்டின..

இப்போது ஏற்பட்ட பூகம்பம் சுனாமி, மற்றும் அணு உலை வெடிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளினால் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கும் மக்களுக்கு முடிந்தால் இந்த சினிமாக்கூத்தாடிகள் பொருளாதார உதவி செய்யட்டும்..

அதைவிடுத்து இந்த நடிகர் அந்த பிரதமருக்கு வெறும்  கடிதம் எழுதினாராம்..

விடுதலைப்புலிகள் பிரச்சினையில் பிரதமருக்கு கருணாநிதி கடிதம் எழுதினால் மட்டும் எல்லா பக்கமும் எரியும் தமிழ்க் காவலர்கள்,
இந்த கூத்தாடி விசயத்தில் மட்டும் எல்லா பக்கமும் பொத்திக் கொண்டிருப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை..


அந்த பிரதமரும் இவரை உடனே ஜப்பான் வாருங்கள் என்று அழைத்தாராம்..

எவ்வளவு நம்மை முட்டாள் என்று இந்த கூத்தாடிகள் நினைத்திருக்கின்றான் பாருங்கள்..


பெரும் பாதிப்புள்ளாகி இருக்கும் நாட்டுக்கு இந்த நடிகன் போனால் எல்லாம் சரியாகிவிடுமா?

இதை எப்படி நிவர்த்தி செய்வது என்று அந்த நாடு பிரதமர் நினைப்பாரா

இல்லை ஒரு கூத்தாடியை இங்கே வந்துட்டு போ என்று அழைத்துக் கொண்டிருப்பாரா? இதுவா அவருடைய வேலை?

அதுவும் இந்தியா அரசு ஜப்பானுக்கு இப்போது போக வேண்டாம் என்று அறிவித்திருக்கும் வேளையில் இப்படி ஒரு புருடாவை விட்டு தப்பிக்க பார்க்கிறது இந்த கூத்தாடி..

ஏற்கனவே நதி நீர் இணைப்புக்கு ஒருகோடி தருவேன் என்று அறிவித்தவர்தான் இவர்...அதுக்கப்புறம் மூடிக்கொண்டு இருந்துவிட்டார்..


நானும்தான் என் அனுதாபக் கடிதம் ஒன்றை இமெயிலில் ஜப்பான் பிரதமருக்கு அனுப்பிவைத்தேன்..(பெரிய அளவில் பொருளாதார உதவி செய்ய இயலாத நிலையில்)

எனக்கு வந்த கடிதம்தான் கீழே..

"We acknowledge receipt of your message. Best regards, E-mail Team, Cabinet Secretariat, Government of Japan "

எனக்கு என்னமோ இந்த மாதிரி வந்த பதிலைத்தான் வைத்துக்கொண்டு, இவர்கள் புருடா விட்டுக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது..

மற்றபடி இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலே - வேலை செய்வதற்கென்றே பிறந்த - ஜப்பானியர்களின் பிரதமர் ஒருவர், எதற்கும் உபயோகமற்ற கூத்தாடிகளை அழைக்கும் அளவுக்கு முட்டாள் அல்ல என்றுதான் நினைக்கிறேன்..

டிஸ்கி.: நடிகர்களை அவன் இவன் என்று சொல்லிவிட்டாலே வரிந்துகட்டிக்கொண்டு வரும் சினிமா பைத்தியங்களுக்கு......உங்கள் ஆசைப்படி அவர் என்றே குறிப்பிடிருக்கிறேன்..சந்தோஷமா?





29 comments :

மர்மயோகி said...

பின்னூட்டமிடும் யாரும் இன்னும் படிக்கவில்லை போலிருக்கிறது...

swetha said...

hmmmmmmmmmmm you are correct i had the same reply too.........he may be somebuddy who is a great actor here in our country but he is a nobuddy there in japan may be some people like him there but iam sure the he is not worth to be called by the prisedent of japan.........

மர்மயோகி said...

நன்றி swetha..

Muszhaaraff Muthunabeen said...

Yes, your correct.I agree

ragasiya snehithan said...

1. As per national media news, Rajni's letter has been relayed through the Japan embassy not through the email server.

2. Japan's Government officially declared to the whole world that they wont accept any financial aids. This has been broadcasted in all major medias through out the globe except sun/kalaingar/star vijay/jaya/imayam/vasanth etc.

3. Can you please mention from where did you learned that the Japan's PM invited Rajni through EMAIL?

ragasiya snehithan said...

//அதுவும் இந்தியா அரசு ஜப்பானுக்கு இப்போது போக வேண்டாம் என்று அறிவித்திருக்கும் வேளையில் இப்படி ஒரு புருடாவை விட்டு தப்பிக்க பார்க்கிறது இந்த கூத்தாடி..//

//எனக்கு என்னமோ இந்த மாதிரி வந்த பதிலைத்தான் வைத்துக்கொண்டு, இவர்கள் புருடா விட்டுக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று """தோன்றுகிறது"""..//

Is this post written with all your assumptions or facts?

ragasiya snehithan said...

As per Indian News Agency's note:


Rajinikanth has written a letter to the Prime Minister of Japan condoling the death of thousands of people in the recent Tsunami attack. The Superstar turned popular in Japan after his film Muthu was released in that country and he enjoys a good rapport with quite a number of Japanese fans till date.

In his letter, ""which was sent through the Japanese Embassy in Chennai"", Rajini has said that he would pray to the almighty for return of normalcy in the country after the destructive Tsunami. He also offered his condolences to the families of the deceased.

பாலா said...

//பின்னூட்டமிடும் யாரும் இன்னும் படிக்கவில்லை போலிருக்கிறது...

என்னையா சொன்னீங்க?

தன் படங்கள் நன்றாக ஓடும் ஒரு ஊரில், இருக்கும் மக்களுக்கு அனுதாபம் தெரிவிப்பது தவறில்லையே? அப்படி தெரிவிக்காவிட்டால் என்ன சொல்லி இருப்பீர்கள். நன்றி கேட்ட நாதாரிநாய் ரஜினி. ஒரு வருத்தம் தெரிவிக்க கூட துப்பில்லை என்றுதானே சொல்லி இருப்பீங்க?

நண்பரே கலைஞர் எழுதும் கடிதத்துக்கும் இவரது கடிதத்துக்கும் வித்தியாசம் உள்ளது. அவர் ஆட்சி பொறுப்பில் இருப்பவர். நடவடிக்கை எடுக்கும் பவர் உள்ளவர். அதை விடுத்து சப்பை கட்டுகட்ட கடிதம் எழுதுவதைத்தான் எல்லோரும் கண்டித்தார்கள்.

என்னமோ இவர் கொடுக்க போகும் ஒரு கோடி மட்டும்தான் பாக்கி, எல்லாம் தயார். என்பதுபோல ஒரு கோடி கொடுக்கிறேன் என்று சொன்னவர் பொத்திக்கொண்டு விட்டார் என்று சொல்லி இருக்கிறீர்களே?

நீங்கள் சொல்லி இருக்கும் தகவல்கள் அனைத்தும் எந்த sourceஇல் இருந்து பெறப்பட்டன என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

//சினிமா பைத்தியங்கள்
இது என்னையா சொன்னீங்க?
பொதுவா யாரையுமே அவன் இவன் என்று சொல்லாதீர்கள் என்று சொல்லி இருக்கிறேன். இதில் நடிகன் என்று குறிப்பிட்ட யாரும் அல்ல. இந்த கூத்தாடிகள் குரூப்பில் ஷாருக், சல்மான்கான்களும் உண்டுதானே?

கடைசியாக ஒன்று என் தலைவனை அவன் இவன் என்று சொல்ல நீ யார் என்று கேட்பவன் வேண்டுமானால் சினிமா பைத்தியமாக இருக்கலாம். இப்படி பொத்தாம் பொதுவாக சொல்வதால் உங்கள் எண்ணம் புரிகிறது. முடிந்தவரை பின்னூட்டம் இடாமல் தவிர்த்து விடுகிறேன்.

பாலா said...

என்னதான் முயற்சி செய்தாலும் உங்களால் மாற்ற முடியவில்லை போலிருக்கிறது

// இந்த கூத்தாடிகள் நினைத்திருக்கின்றான் பாருங்கள்..

இந்த வரியில் "அவன் இவன்" வருகிறது ..

Just for a Joke

மர்மயோகி said...

அனுதாபம் தெரிவிப்பதை தவறு என்று சொல்லவில்லை..
நன்றாக யோசித்து பாருங்கள்...
ஒரு நாட்டின் பிரதமருக்கு ஒரு நடிகனை கூப்பிட்டு வைத்துதான நிவாரணப் பணிகளை செய்யவேண்டும்? இது பற்றி நாம் கொஞ்சமாகவாவது யோசிக்கவேண்டாம?
சினிமா என்பதே அப்பட்டமான பொய்..அதில் உள்ளவர்களை இப்படி தூக்கிவைத்து கொண்டாடித்தான் இன்று தமிழகமே நாசமாகப்போய் உள்ளது..
சினிமாக்காரன் அத்தனைபேரும் அது எந்த "கான்" களாக வேண்டுமானாலும் இருக்கட்டும்...அனைத்துமே கூத்தாடிகள்தான்.... சாக்கடைகள்தான்..

மர்மயோகி said...

கருணாநிதி தமிழ்நாட்டில்தான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்..ஸ்ரீலங்காவில் அல்ல..அவர் எப்படி நடவடிக்கை எடுக்கமுடியும்..

நதிநீர் இணைப்பு திட்டத்திக்கு ஒருகோடி கொடுப்பதாக சொன்ன ரஜினி ஏன் அதை கொடுக்கவில்லை..வேறு யாரும் கொடுக்கவில்லை என்பதற்காக அவர் நிறுத்திவிடுவாரா? அவரே ஆரம்பித்து வைத்தால்தான் என்ன?

ஒருத்தனை கண்மூடித்தனமாக ஆதரிப்பதென்றால் யோசிப்பதே இல்லை..

மர்மயோகி said...

அப்புறம் பின்னூட்டமிட்ட, மறுப்பு தெரிவித்த,, பார்த்து சென்ற அனைவருக்கும் நன்றி..

ragasiya snehithan said...

can you please answer my questions?

மர்மயோகி said...

நியூஸ் ஏஜென்சிகள் சொல்வெதெல்லாம் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை...

பரபரப்புக்காக ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார்கள்..

ரஜினி இமயமலைக்கு போய்விட்டார்,, அங்கே இருந்து அரசியலில் குதிப்பார் ,,கார் ரெடி..என்று சொன்னவர்கள்தான் இவர்கள்.

ragasiya snehithan said...

//ஒரு நாட்டின் பிரதமருக்கு ஒரு நடிகனை கூப்பிட்டு வைத்துதான நிவாரணப் பணிகளை செய்யவேண்டும்? //

Can you please tell us where it is stated that the Japanese PM invited rajini for relief works??.

ragasiya snehithan said...

//இப்போது ஏற்பட்ட பூகம்பம் சுனாமி, மற்றும் அணு உலை வெடிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளினால் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கும் மக்களுக்கு முடிந்தால் இந்த சினிமாக்கூத்தாடிகள் பொருளாதார உதவி செய்யட்டும்..//

Do you still think someone can help financially to Japan people?

ragasiya snehithan said...

//நியூஸ் ஏஜென்சிகள் சொல்வெதெல்லாம் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை...//

:)). So you agree that we can neglect and consider things to suit our own propaganda :D.

ragasiya snehithan said...

//பரபரப்புக்காக ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார்கள்..//

The S(h)ame thing i feel for this post.

ஷர்புதீன் said...

who is this ragasiya snegithan??! ur name marmayogie, his name ragaisya snehithan?

Unknown said...

//விடுதலைப்புலிகள் பிரச்சினையில் பிரதமருக்கு கருணாநிதி கடிதம் எழுதினால் மட்டும் எல்லா பக்கமும் எரியும் தமிழ்க் காவலர்கள்,//என்ன சொல்லவறீங்கனே புரியலயே.. கருணாநிதி கடிதம்மாதிரிதான் வெறும் பரபரப்புக்காக எழுதமாட்டீங்கனு நினைக்கிறேன்.

ragasiya snehithan said...

This whole post has been wrote in an assumption that Rajini sent an email to Japan's PM and publicizing with the auto-reply he got :)) that Japan' PM invited him to Japan.

When we pointed out with the facts, the blog owner said 'athellaam perithaaga eduthukolla vendiyathillai"".

The whole tamil community is suffering badly with bloggermania and started blogging whatever they want.

மர்மயோகி said...

அவர் ரஜினிகாந்துக்கு ரகசிய அல்ல அல்ல பகிங்கர சிநேகிதர்..

ragasiya snehithan said...

Either you spell PAKIRANGA in tamil properly or answer the questions with facts. Rather than labeling me as Rajni fan.

Adriean said...

சிறந்த ஜப்பான் மக்களின் துன்பத்தில் விளம்பரம் தேடிக்கொள்வதுதான் ரஜினிகாந்த்தின் செயல் என்பதில் சந்தேகம் இல்லை. விடுதலைப்புலிகளையும் பிரபாகரனையும் காப்பாற்ற கருணாநிதி செயலில் இறங்காமல் பிரதமருக்கு கடிதம் எழுதி கொண்டிருந்தார் என்று எரியும் தமிழ்க் காவலர்களின் செயல்கள் தெரிந்ததே.

nirvana said...

அருமையான பதிவு மர்ம யோகி . இந்த ஆபாச பத்ரிகைகிளின் தொல்லை தாங்க முடியவில்லை . இப்படி தான் பாடகர் மலேசியா வாசுதேவன் மரணத்தின் போழ்து ,பல ஆபாச பத்திரிகைகள் "ரஜினியின் பாடகர் மரணம்" என்று செய்தி போட்டனர் . இது எவ்வளவு கேவலமான செயல் ஆகும் . எபோழ்தும் ரஜினியின் பூளை உருவி கொண்டே இருகின்றன. இவர்கள் எல்லாம் ஈன பிறவிகள்.

தமிழ்நங்கை said...

ஐயோ என்வழி என்ற மெண்டலின் புகழ்பாடும் இணையத்தில் இதெல்லாம் பெரிய்ய செய்தி, தமிழ்நாட்டில் இருக்கீன்றவர்களை கன்னடர்கள் போல கேனைகள் என நினைக்கின்றார் ரஜனி.

இந்தப் பொய்யை எப்படித்தான் மெண்டல் ரசிகர்கள் நம்புகின்றார்களோ.
அமெரிக்கா பிரிட்டனால் முடியாததை ரஜனி செய்வாராம் ஹிஹிஹி

மர்மயோகி said...

//ragasiya snehithan said...
//ஒரு நாட்டின் பிரதமருக்கு ஒரு நடிகனை கூப்பிட்டு வைத்துதான நிவாரணப் பணிகளை செய்யவேண்டும்? //

Can you please tell us where it is stated that the Japanese PM invited rajini for relief works??. //


அய்யா ரகசிய சினேகிதா....அவரு கூப்பிட்டதாக சொல்லப்படுகிற செய்தியே புருடான்னு சொல்லிக்கிட்டு இருக்கேன் ..நீங்க என்னடானா..அவர நிவாரனபநிக்கா கூப்பிட்டாருன்னு கேக்குறீங்க..அதுசரி..அப்படியே இருந்தாலும் கலை நிகழ்ச்சின்கிற பேர்ல ஆபாச கூத்தடிக்க கூப்பிட்டாங்கன்னு சொல்றீங்களா.

வேற எதுக்கு கூப்பிட்டார்னு நீங்களாவது சொல்லுங்க...

மர்மயோகி said...

மேலும் பின்னூட்டமிட்ட அன்பர்கள்
திரு ஷர்புதீன்
discovery channel
திரு chandran
திரு nirvana
தமிழ்நங்கை

மற்றும் பார்த்து சென்ற அனைவருக்கும்
நன்றி நன்றி

மர்மயோகி said...

Muszhaaraff Muthunabeen said...
Yes, your correct.I agree

நன்றி திரு Muszhaaraff Muthunabeen

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?