Pages

Thursday, March 24, 2011

சிங்கம் புலி - அருவருப்பான வியாபாரம்!


சமீபத்தில் சிங்கம் புலி என்ற படத்தை பார்க்க நேர்ந்தது..

பொழுதுபோக்கிற்காக நாம் எடுக்கும் சிலமுடிவுகள் பெரும் தலைவலியை உண்டுபண்ணிவிடும்..அதில் இது ஒரு ரகம்..

படத்தின் இயக்குனரோ, கதாசிரியரோ..காய்கறி கடை வைத்து நடத்தி இருக்கவேண்டும்...

படத்தின் கிளைமாக்சில் கதாநாயகனின் தந்தை "யார் யாரோ விதைக்கும் காய்கறிய தரம்பிரிக்கிற எனக்கு, நான் விதைத்தத தரம்பார்க்க தெரியலையே " என்று சொல்லுவார்..இந்த ஒரு வசனத்திற்காக எடுக்கப்பட்ட படம்போலத்தான் இருக்கிறது..மற்றபடி, பெற்றோர்கள் காதலர்களை சேர்க்க ஒப்புக்கொள்ளாத போது சில வசனங்களை நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது..அதையும் அங்கங்கே சேர்த்து வைத்திருக்கிறார்கள்..

உருவத்தில் ஒரே தோற்றமுடைய அண்ணன் தம்பிகள்..முரட்டுகுணம் உடைய அண்ணன் - ஆனால் நேர்மையானவனாம்..

சாதுவான தம்பி அதற்க்கு நேர்மாறான பொம்பளை பொறுக்கி மற்றும் கொலைகாரன்..

அண்ணன் மீன் வியாபாரம் செய்கிறான்..அவனது முரட்டுத்தனம் பிடிக்காத பெற்றோர் அவனை வெறுத்து ஒதுக்கின்றனர்.

தம்பி வக்கீல்..பொறுக்கி..ஆனால் வீட்டில் அநியாயத்துக்கு அப்பாவி..இதுபோன்று சினமாவில் மட்டுமே நடிக்கமுடியும்..அறிமுக காட்சியில் மட்டும் அப்பாவியாக கட்டிவிட்டு படம் முழுவதும் அவன் செய்யும் அநியாயங்கள் அவன் பெற்றோருக்கு தெரியவே தெரியாதாம். மகா லூசுத்தனமான கற்பனை.

இதில் தம்பியிடம் ஏமாந்த ஒரு பெண் இறந்து விடுகிறாள். அதாவது தற்கொலை என்று செய்தி..இதற்கு தம்பிதான் காரணம் என்று தெரியவரும் அண்ணன் - தம்பி மீது வழக்கு தொடுக்கிறான்..வக்கீலான தம்பி சாதுர்யமாக தப்பி விடுகிறான். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை தம்பி கொலை செய்தது அண்ணனனுக்கு தெரியவர - மீண்டும் அண்ணன் வெகுண்டு எழுகிறான்..தான் கொலைகாரன் எனபது அண்ணனுக்கு தெரிந்துவிட்டதை அறிந்த தம்பி தனக்கு தெரிந்த பொறுக்கிகளை வைத்து அண்ணனை போட்டுத்தள்ள முயல்கிறான்..

இறுதியில் அந்த முயற்சியில் அவனே கொல்லப்படுகிறான்..பெற்றோருக்கு உண்மை தெரிகிறது..உடனேயே மேற்கண்ட வசனம்..

தாய்லாந்தில் பட்டாயா என்றொரு இடம் உண்டு. விபச்சாரத்திற்கு மிகவும் புகழ்பெற்ற இடம்..


அந்த ஊரில் உள்ள ஐட்டங்களை வைத்து ஒரு பாட்டு காட்சியை எடுத்து, அந்த நடிகனை அழகிகள் எல்லாரும் விரும்புவதுபோல் காட்டி இருப்பது விபச்சார வியாபாரம் போல உள்ளது..

அதுபோல காய்கறி வாங்க வரும் ஒரு பெண்ணை - அவர் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி - செக்ஸ் வைத்துகொண்டு விடுகிறான்..பிறகு அந்த வீட்டிற்கு வரும் அந்த பெண்ணின் மகளை ஏற்கனவே அவன் அனுபவித்து விட்டான் என்று காட்டுவதோடு, ஒருவன் ஒரு பசுவையும் கன்றையும் ஒட்டிசெல்வதுபோல் காட்டி இருப்பது மகா அருவருப்பு. இது நகைச்சுவையாம்...இந்த காட்சிக்காகவே இந்த நாய்களை தூக்கில் போடவேண்டும்..உன் அம்மாவையும் தங்கச்சியையும் ஒருவன் இப்படி செய்தால் சந்தோசப்பட்டு சிரிப்பானா இந்த எருமை?

படத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் வந்து போவது போலவே உள்ளது..படு செயற்கைத்தனம்..

முக்கால்வாசி படம் ஒயின் ஷாப்பிலும் பாரிலும் சென்று விடுகிறது..இனிமேல் திரைப்படங்களில் நடிகர்கள் பெயர் டைட்டிலில் போடும்போது டாஸ்மாக், மற்றும் பார் என்ற பெயர்களையும் சேர்த்துவிடலாம்..


இவங்களெல்லாம் எதற்கு சினிமா எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை..


3 comments :

nirvana said...

I would like to present a topic on what I have analyzed about Rajinkanth. When I was young I was one of those fans who used to queue in Albert theatre to watch his movie but now when I think back I realize how stupid and crazy I was. When I look back at his movies Aarilirindhu Aruvathu Varai (1979), Nallavanukku Nallavan (1984), Padikkathavan (1985), Velaikkaaran (1987), Dharmathin Thalaivan (1988), Raajadhi Raaja (1989), Panakkaran (1990), Dharma Dorai (1991) Pandian ( 1992) Annamalai (1992), Uzhaippaali (1993), Muthu (1995), Badsha (1995) Arunachalam (1997), Padaiyappa (1999) are all based on the same storyline. The rest of his movies are either remakes from Telugu or Malayalam. It is the same rags to riches story and some movies, characters and scenes are shockingly similar. Some of the clichés that I observed in his movies are as follows
According to the story he will be leading a simpleton life but he will have a rich or powerful background.
Almost all the characters will be constantly praising him throughout the movie except for the heroine with whom he will initially have conflicts but later she will also join others in glorifying Rajini.
He will be cheated by either friends or families.
There will be one scene where he will be humiliated, driven from his own house and someone will later explain how much sacrifice he has done.
He will forgive even his worst enemies, if they are his relatives he will take them back.
You can find striking similarities in the following movies.

Velaikkaaran and Muthu:
Raajadhi Raja and Uzhaippaali.
Sathya and Badsha.

Unknown said...

மாப்ள நல்லா சொல்லி இருக்கீருய்யா!

மர்மயோகி said...

நன்றி nirvana
நன்றி விக்கி உலகம்..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?